Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை அழித்த மகிந்த திருப்பதி தரிசனத்துக்கு செல்கிறார் ; திட்டித் தீர்க்கும் வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c294205cde0408960b7348f5db94f327.jpg

 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

 
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
 
தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்ச டிசம்பர் 9 ஆம் திகதி திருப்பதிக்கு சென்று 10 ஆம் திகதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறாராம்.
 
பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசி நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடியின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. 
 
 
மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப்போகிறார். மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்ச வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1200 பேருடன் சென்று பட்சி சோலையில் பகலிலும் இரவிலும் நெடுஞ்சாலையில் அறப்போர் நடத்திக் கைதானோம். அதன் பின்னர் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வரப்போவதை அறிந்த 48 மணி நேரத்திற்குள் டெல்லிக்குச் சென்று பிரதமர் வீட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். எனவே டெல்லிக்கு வராமல் பீகாரில் இருந்தே திரும்பிப்போனார்.
 
 
முன்பு திருப்பதிக்கு வந்தபோது ம.தி.மு.க.வினர் பொலிசாரின் ஸ தடைகளைக் கடந்து மகிந்தவுக்குக் கறுப்புக்கொடி காட்டினார்கள்.
 
 
1750 இந்துக் கோயில்களை இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் உடைத்து நொறுக்கிய காட்டுமிராண்டி வேலை செய்த கூட்டத்தின் தலைவன்தான் மகிந்த ராஜபக்ச. தமிழ் இனத்தின் அடையாளமே அந்தத் தீவில் இல்லாமல் செய்துவிட அனைத்து அக்கிரமங்களையும் செய்கின்ற ராஜபக்ச, அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்று சில சோதிடர்கள் கூறிய யோசனையின் பேரில் இங்கு வருகிறார். ஏழுமலையானை வழிபடும் இந்துக்களையும் தமிழர்களையும் அங்கே அழிக்கிறார். இங்கே வெங்கடாசலபதி தரிசனத்திற்கும் வருகிறார்.
 
 
ராஜபக்சவின் வருகையை மத்திய அரசு இரகசியமாக வைத்து இருக்கின்றது. இந்தியாவிற்குள் ராஜபக்ச என்றைக்கு வந்தாலும், ம.தி.மு.க. அவரது வருகையை எதிர்த்து அறப்போர் நடத்தும் என அறிவித்து இருக்கிறோம். எனவே, 9 ஆம் திகதி அன்று திருப்பதிக்கு வரும் ராஜபக்சவை எதிர்த்து  கறுப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என குறித்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=166833707406542049

மகிந்த இந்து கடவுள்களை பக்தியுடன் வழிபட்டான் அதற்கு பலனாக மகிந்தவுக்கு போரில் வெற்றி கிடைத்தது, இந்துக்களோ தமிழ் நாட்டில உள்ள பன்னாடை (திராவிட) கூட்டங்களை நம்பி இந்து கடவுள்களை தூற்றினார்கள் அதனால் போரில தோல்வி கிடைத்தது. ஏன் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிரிட்டிஷ் காலத்தில் முக்கியமான ஒரு மையமாக விளங்கிய தமிழ் நாட்டை வைத்துக் கொண்டு தெலுங்கனிடமும் , மலையாளியிடமும் தாரை வார்த்துவிட்டு இருக்கிறான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.