Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது அமர்வு

Featured Replies

நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது அமர்வு

 

 

15yxa1g.jpg

 

 

ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது. தமிழரின் ஆட்சி அதிகாரங்கள் சிங்களவர் கைகளுக்கு மாற்றப்பட்டன. இதனால் பாதிப்படைந்த தமிழ் மக்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களை மேற்கொண்ட போது அதனைச் சிங்கள அரசு>  ஆயுதமுனையிலும் சிங்களக் காடையர்கள் மூலமும் அடக்கியது. இதனால் தமிழின உணர்வுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆயுத முனையில் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இவ் விடுதலைப் போராட்டம் கூர்மை அடைந்து> தமிழரின் பெரும்பகுதியான நிலப்பரப்புகளைக் கைப்பற்றி> படைப்பிரிவுகளும் நிர்வாக அலகுகளையும் கொண்ட  தமிழருக்கான தனியரசை உருவாக்க காரணமாக அமைந்தது.

 

இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இனவாத அரசு> விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து> பல வல்லரசுநாடுகளைக் கபடமாக ஏமாற்றி> அவர்களின் ஆதரவுடன் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்து> மே 18 2009ல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்து விட்டதாக மார் தட்டி> கொக்கரித்துக் கொண்டது. அதன்பின் எல்லாம் முடிந்தது என்ற இறுமாப்புடன் இருந்த சிங்கள இனவாத அரசுக்கும் அதன் படைகளுக்கும்>  தமிழர் விடுதலைப் போராட்டம் புதிய பரிமாணததினைப் பெற்று> நாடுகடந்த தமிழீழ அரசாக உதயமாகியது   பாரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. 

 

நாடுகடந்த தமிழீழ  அரசானது ஜனநாய விழுமியங்களுக்கு அமைவாக> ஜனநாய முறையில்>; தேர்தல்களை நடாத்தி> அதன் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து> அவர்கள் மூலம் தமிழ் மக்களின் தாயகம்> தேசியம்>  சுயநிர்ணயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட  ஒரு அரசாங்கத்தை நடாத்தி வருகிறது.

 

இவ் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது அமர்வு> அமெரிக்காவின் நியூயோக் நகரில் மைய அமர்வாகவும்  தொலைத் தொடர்பு மூலமாக பிரான்சின் புறநகர் பகுதியான Le Blanc Mesnil நகரில் துணை அமர்வாகவும் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம்  5> 6> 7. ஆகிய திகதிகளில் மாவீரர்களுக்கும் மரணமான மக்களுக்குமான அஞ்சலியுடன் இரண்டு இடங்களிணும் நடைபெற்றது

 

 அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் திரு தவேந்திர இராசா அவர்களின் தவைமையில் அரசவை உறுப்பினர்களும் மேலவை உறுப்பினர்களும் இணைந்த அமர்வாகவும்  பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசவை பிரான்ஸ் உறுப்பினர் திரு நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சுவிஸ்> பிரித்தானியா> யேர்மனி> பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசின் ஆதாரவாளர்கள் பலர் இணைந்த நிகழ்வாகவும் நடைபெற்றது.

 

     அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுக கட்சியின் பிரதிநிதி நாஞ்சில் சம்பத் அவர்களும் மலேசியா பினாங்கு மாநிலத் துணை முதல்வர் இராமசாமி அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். பிரான்ஸ்சில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகர பிதா அவர்களும் மாநகர சபை உறுப்பினர்களும் பிரான்ஸ்சின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மரி ஜோர்ச் புவே அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நகரசபை உறுப்பினரான செல்வி ஸ்ரெபனி சுரேந்திரன் அவர்கள் தன் பெற்றோர் சகிதம் நிகழ்வு நடைபெற்ற மூன்று நாட்களும்; பங்குபற்றி> மனப்பூர்வமாகச்  சேவையாற்றியதை நிகழ்வுக்கு வந்த அனைவரும் பாராட்டியது குறிப்பிடத் தக்கது. இதேவேளை  நகரசபை உறுப்பினர் திருமதி கோபிநாத் அவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

 

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமா அவர்கள்>  முதல்நாள் தொடக்க உரையில்; தமிழ்மக்கள் அதிகமாக வாழும் நாடுகளைச் சோர்ந்த தமிழ்த் தலைவர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து> உலகத் தமிழ்த் தேசியக் கொங்கிரஸ் போன்ற அமைப்பினை உருவாக்குவதன் மூலம்  தமிழர்களை உலக அரங்கில் பலம் மிக்க மக்களாக நிலைநிறுத்த முடியுமெனவும்> தமிழ் தலைவர்கள் எல்லாம் தமது கட்சிபேதங்களைப் பார்க்காது இணைந்து செயலாற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டதுடன்  நாடு கடந்த தமிழீழ அரசின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். 

 

169mfbc.jpg

 

 

n56l8y.jpg

 

5jtglu.jpg

 

 

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கலைநிகழ்ச்சிகள்> தீர்மானங்கள்> விவாதங்கள் அமைச்சர்களின் செயற்பாட்டறிக்கைகள்> 2015ம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் நிகழ்வுகளுக்கு வந்த பிரமுகர்களும்   பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டார்கள்.

f04w88.jpg 

 

 

  • தொடங்கியவர்

148omkz.jpg

 

j9tr0n.jpg

 

2qcim3t.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.