Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய் மண்ணில் இறுதிக் களம்காணும் சாதனை நாயகர்கள்: இன்று உணர்ச்சிவசப்படலாம் என்கிறார் மஹேல

Featured Replies

தாய் மண்ணில் இறுதிக் களம்காணும் சாதனை நாயகர்கள்: இன்று உணர்ச்சிவசப்படலாம் என்கிறார் மஹேல
 

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச இன்று நடைபெறவுள்ள ஏழாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியானது இலங்கையின் முன்னாள் தலைவர்களும் சாதனை நடசத்திரங்களுமான  மஹேல ஜயவர்த்ன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்சான் ஆகியோர் தமது  சொந்த மண்ணில் பங்கேற்கும்  இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியாகும்.

vd3btj.jpg

இரு அணிகளுக்குமிடையிலான ஏழு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 4-2 என கைப்பற்றியுள்ள நிலையில் இன்றை தினம் களமிறங்குகின்றது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் புதிய அத்தியாத்தை ஏற்படுத்திய சர்வதேச அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்த நட்சத்திர வீரர்களான மஹேல சங்காவுக்கும் வெற்றியுடன் பிரியாவிடையளிக்கப்படுமா என்ற எதிர்பாப்பும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இவ்விருவருக்கும் போட்டியின்  முடிவில் உணர்வுபூர்வ பிரியாவிடையை ஆயிரக்கணக்கான இரசிகர்கள் வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

 

இன்று பிற்பகல் 2.30மணிக்கு ஆரம்பமாகும் இப் போட்டியில் பங்கேற்கும் இறுதிப் பதினொருவர் கொண்ட இலங்கைக் குழாம் இறுதிநேரத்தில் தெரிவு செய்யப்படவுள்ளதோடு இங்கிலாந்து தரப்பில்  ஆறாவதுபோட்டியில் பங்கேற்ற  அதேகுழாமே பங்குபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

அதேநேரம் பிரேமதாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் மஹேல கலந்துகொண்டிருந்தார். அவரிடத்தில்  செய்தியாளர்கள் வினவிய தொடடுத்த வினாக்களும் பதில்களும் வருமாறு:

 

கேள்வி:- உங்களது இந்தப் பிரியாவிடைப் போட்டி உங்களை உணர்ச்சிவசப்படச் செய்யுமா?

 

பதில்:- அப்படி ஒரு நிலை ஏற்படும் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் நான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிதான் என்னை அதிகளவில் உணர்ச்சிவசப்படச் செய்தது. ஒருவேளை போட்டியின் பின்னர் நான் உணர்ச்சிவசப்படக்கூடும். ஏனெனில் இரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு என்னை அந்த நிலைக்குத் தள்ளிவிடக்கூடும்|| என பதிலளித்தார்.

ஆரம்பப் போட்டியும் பிரயாவிடைப் போட்டியும் ஒரே மைதானத்தில் இடம்பெறுவதை நினைவுபடுத்தியபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வாழ்க்கையை ஆரம்பித்த அதே மைதானத்தில் பிரியாவிடை பெறுவது என்பது அதிர்ஷ்டம். நான் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மனநிறைவுடனும் சந்தோஷத்துடனும் விளையாடி வந்தேன். நான் இந்தளவு முன்னேற்றத்தை அடைவேன் என நான் எண்ணியதில்லை. அர்ப்பணிப்புத்தன்மையையும் விடாமுயற்சியையும் நினைவில் நிறுத்தியவாறு எனது திறமையை வெளிப்படுத்திவந்தேன்

 

கேள்வி:- இன்றைய போட்டியிலும் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடுவீர்களா?

 

பதில்:- 'இங்கிலாந்துக்கு எதிரான ஓரிரு போட்டிகளில் என்னை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடுமாறு கிரிக்கட் அணி முகாமைத்துவம் கேட்டுக்கொண்டது. உலகக் கிண்ணப் போட்டிவரை இது தொடருமா என்று நான் கருதவில்லை. அதற்கு முன்னர் நிய+ஸிலாந்துக்கு எதிரான தொடர் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். மேலும் எமது குழாமில் இன்னுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இருக்கின்றார். எனவே நாளைய (இன்று) போட்டிக்கு முன்னர் தெரிவாளர்களும் அணி முகாமைத்துவத்தினரும் உரிய வீரர்களைத் தெரிவு செய்வர் என மஹேல குறிப்பிட்டார்.

குமார் சங்கக்கார தனது சொந்த மைதானத்தில் சதம் குவித்துவிட்டு விடைபெற்றதுபோல் நீங்களும் சதம் குவித்து விடைபெற முயற்சிப்பீர்களா என வினவப்பட்டபோது, 'அப்படி ஒன்றும் இல்லை. என்னாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வதே எனது நோக்கம் என்றார்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

நானும் சங்காவும் ஓய்வு பெறுவதால் கிரிக்கெட் இறந்துவிடாது; இலங்கை மண்ணில் பிரியாவிடை போட்டியில் விளையாடும் மஹேல கூறுகிறார்
 

''ஒவ்­வொன்­றுக்கும் ஒரு முடிவு இருக்­க­வேண்டும். குமார் சங்­கக்­கா­ரவும் நானும் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் இறந்­து­விடும் என்று கூற­மு­டி­யாது. அது தொடரும் என்­பது நிச்­சயம். நாங்கள் இரு­வரும் இவ்­வ­ளவு நீண்­ட­காலம் இலங்கை கிரிக்கெட் விளை­யாட்­டிற்­காக பங்­க­ளிப்பு வழங்­கி­ய தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றோம்'' என இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜய­வர்­தன தெரி­வித்தார்.

eh0y1t.jpg
இலங்­கைக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடை யில் ஆர்.பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள ஏழா­வதும் கடை­சி­யு­மான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யா­னது மஹேல ஜய­வர்­த­னவும் குமார் சங்­கக்­கா­ரவும் இலங்­கையில் விளை­யாடும் கடைசி சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­யாகும். எனவே இன்­றைய இந்தப் பக­லி­ரவுப் போட்டி முடிவில் சிரேஷ்ட வீரர் கள் இரு­வ­ருக்கும் உணர்­வு­பூர்வ பிரி­யா­வி­டையை ஆயி­ரக்­க­ணக்­கான இர­சி­கர்கள் வழங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இப்­போட்­டிக்கு முன்­ப­தாக பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் அமைந்­துள்ள கேட் போர் கூடத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் மஹேல கலந்துகொண்டு செய்­தி­யா­ளர்கள் வின­விய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்தார்.


உங்­க­ளது இந்த பிரி­யா­விடைப் போட்டி உங்­களை உணர்ச்­சி­வ­சப்­படச் செய்­யுமா? எனக் கேட்­கப்­பட்­ட­போது, ''அப்­படி ஒரு நிலை ஏற்­படும் என நான் கரு­த­வில்லை. என்னைப் பொறுத்­த­மட்டில் நான் விளை­யா­டிய கடைசி டெஸ்ட் போட்­டி தான் என்னை அதி­க­ளவில் உணர்ச்­சி­வ­சப்­படச் செய்­தது. ஒரு­வேளை போட்­டியின் பின்னர் நான் உணர்ச்­சி­வ­சப்­ப­டக்­கூடும். ஏனெனில் இர­சி­கர்கள் உணர்ச்­சி­வ­சப்­பட்டு என்னை அந்த நிலைக்குத் தள்­ளி­வி­டக்­கூடும்'' என பதி­ல­ளித்தார்.

ஆரம்பப் போட்­டியும் பிர­ியா­விடைப் போட்­டியும் ஒரே மைதா­னத்தில் இடம்­பெறு­வதை நினை­வு­ப­டுத்­தி­ய­போது, ''சர்­வ­ தேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்­கையை ஆரம்­பித்த அதே மைதா­னத்தில் பிரி­யா­விடைபெறு­வது என்­பது அதிர்ஷ்டம். நான் மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டனும் மன­நிறை­வு­ டனும் சந்­தோ­ஷத்­து­டனும் விளை­யாடி வந்தேன். இந்­த­ளவு முன்­னேற்­றத்தை அடைவேன் என நான் எண்­ணி­ய­தில்லை. அர்ப்­ப­ணிப்­புத்­தன்­மை­யையும் விடா­மு­யற்­சி­யையும் நினைவில் நிறுத்­தி­ய­வாறு எனது திற­மையை வெளிப்­ப­டுத்­தி­வந்தேன்'' என் றார்.


இன்­றைய போட்­டி­யிலும் உலகக் கிண் ணப் போட்­டி­க­ளிலும் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக விளை­யா­டு­வீர்­களா? என வின­விய­போது, ''இங்­கி­லாந்­துக்கு எதி­ரான ஓரிரு போட்­டி­களில் என்னை ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக விளை­யா­டு­மாறு கிரிக்கெட் அணி முகா­மைத்­துவம் கேட்­டுக்­கொண்­டது. உலகக் கிண்ணப் போட்­டி­வரை இது தொட­ருமா என்று நான் கரு­த­வில்லை. அதற்கு முன்னர் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான தொடர் குறித்து நாம் சிந்­திக்­க­வேண்டும். மேலும் எமது குழாமில் இன்­னு­மொரு ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் இருக்­கின்றார். எனவே நாளைய (இன்று) போட்­டிக்கு முன்னர் தெரி­வா­ளர்­களும் அணி முகா­மைத்­து­வத்­தி­னரும் உரிய வீரர்­களைத் தெரிவு செய்வர் என மஹேல குறிப்­பிட்டார்.

குமார் சங்­கக்­கார தனது சொந்த மைதா­ னத்தில் சதம் குவித்­து­விட்டு விடை­பெற்­ற­து போல் நீங்­களும் சதம் குவித்து விடை­பெற முய­ற்­சிப்­பீர்­களா என வினவப்பட்டபோது, ''அப்படி ஒன்றும் இல்லை. என்னாலான அதிபட்ச பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வதே எனது நோக்கம்'' என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள இலங்கை 4–2 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8143#sthash.Xo7ZIl37.dpuf

  • தொடங்கியவர்

இறுதிப் போட்டியில் மஹேல, சங்கா
செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 7ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்கு, இலங்கையில் விளையாடும் இறுதிப் போட்டியாக இது விளங்கவுள்ளது.

தனது சொந்த மண்ணில் விளையாடி, சதத்துடன் சொந்த மண்ணுக்கு விடைகொடுத்த சங்கக்கார மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஆகியோருக்கு இன்றைய போட்டி மிக முக்கியமானதாக விளங்கவுள்ளது.

எதிர்வரும் உலகக்கிண்ண தொடருடன் இருவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளனர். சிலவேளை, திலகரட்ண டில்ஷானுக்கும் இப்போட்டி முக்கியமானதாக அமையலாம். அவருக்கும் இலங்கையில் விளையாடும் இறுதிப் போட்டியாக இது அமையலாம்.

குமார் சங்கக்காரவுக்கு இன்றைய போட்டி மற்றுமொரு சாதனைப் போட்டியாகவும் அமையவுள்ளது. இன்னும் 61 ஓட்டங்களைப் பெற்றால், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் வசமிருக்கும் ஒரு வருடத்தின் அதிகூடிய ஓட்டம் என்ற சாதனையை சங்கா முறியடித்துவிடுவார்.

கடந்த 2005ஆம் ஆண்டு முத்தரப்பு (ஒருநாள், டெஸ்ட், டுவென்டி டுவென்டி) போட்டிகள் 46இல் 58 இனிங்ஸ்களில் விளையாடிய ரிக்கி பொன்டிங் - 9 சதங்கள், 15 அரைச்சதங்கள் அடங்கலாக 56.66 என்ற சராசரியில் 2,833 ஓட்டங்களைக் குவித்திருந்தமையே தனிநபர் சாதனையாக இதுவரை இருந்துவருகிறது. குமார் சங்கக்கார இவ்வருடத்தில் 46 முத்தரப்பு போட்டிகளில் 53 இனிங்ஸ்களில் விளையாடி 8 சதங்கள், 17 அரைச்சதங்கள் அடங்கலாக 55.46 என்னும் சராசரியில் 2,773 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இன்னமும் 61 ஓட்டங்களைப் பெற்றால், பொன்டிங்கிடம் இருக்கும் தனிநபர் சாதனை சங்கக்காரவின்வசம் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 14 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார, இதுவரை 389 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி - 20 சதங்கள், 91 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 40.66 என்னும் சராசரியில் 13,339 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

கடந்த 16 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடிவரும் மஹேல ஜயவர்த்தன, இதுவரை 433 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி - 17 சதங்கள், 76 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 33.29 என்னும் சராசரியில் 12,219 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

கடந்த 15 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடிவரும் திலகரத்ன டில்ஷான், இதுவரை 299 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி - 17 சதங்கள், 41 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 38.04 என்னும் சராசரியில் 8,903 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இன்று நடைபெறவுள்ள போட்டி, இவரது 300ஆவது ஒருநாள் சர்வதேசப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. இதில் 4இற்கு 2 என்ற நிலையில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆகையினால் இன்றைய போட்டி, கண்காட்சி போட்டியாகவே கருதப்படுகிறது. பிரியாவிடை போட்டியாகக்கூட இதனைப் பார்க்கமுடியும். ஆகையினால் ஏராளமான ரசிகர்கள், போட்டியைக் கண்டுகளிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/136028-2014-12-16-07-46-02.html

  • தொடங்கியவர்

தாய் மண்ணில் அஸ்தமிக்கப்போகும் இரு சுடர்கள்
mrbkt3.jpg

இலங்கை அணிக்காக விளையாட்டின் மூலம் தன்னலமற்ற பல சேவைகளை செய்து சாதனைகளை தனதாக்கிய இலங்கையின் இரு சுடர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இலங்கை மண்ணில் கிரிக்கெட் ஆட்டத்தில் அஸ்த்தமிக்கும் நாள் இன்றாகும்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சற்றுமுன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது.

இந்நிலையில் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வுபெறும் இலங்கை அணியின் இரு சாதனை நாயகர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் தாய் மண்ணில் விளையாடுவது இதுவே இறுதித் தருணமாகும்.

 

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் 7 ஆவதும் இறுதியுமான இன்றைய போட்டி உணர்ச்சிபூர்வமானதாகவும் வரலாற்று பதிவை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை  அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.