Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைய யுத்தம் - ஒரு விரிவான பார்வைக்கு

Featured Replies

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=13096&start=60

...

இவை எல்லாம் 2002 இல் உடன்படிக்கை செய்து சில அங்கீகாரங்கள் தரும்பொழுதே எதிர்பார்க்கப்பட்டது. அதாவது carrots தரும் பொழுது அடிபணியாவிட்டால் சொல்லுற படி தலையாட்டாவிட்டால் அடுத்தாக sticks வரும் என்றும் தெரியும். அதுக்கு அடுத்ததாக என்ன நடக்கும் என்றதற்கும் உலகத்தில் தாராளமாக வரலாறுகள் உண்டு.

அது சரி உம்மது கைய்யெழுத்து பற்றி கேள்விகளிற்கு எப்ப பதில் தரபோகுறீர்? மீண்டும்...

யாரால் சொல்லப்பட்டது? எந்த சூழலுக்கு சொல்லப்பட்டது? எமக்கு பொருத்தமானதா? அப்படியாயின் எந்த வகையில்?

  • Replies 64
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி உம்மது கைய்யெழுத்து பற்றி கேள்விகளிற்கு எப்ப பதில் தரபோகுறீர்? மீண்டும்...

இந்த கேள்விகளை நான் இங்கு பார்வையாளனாக இருக்கும் போதெ நீங்கள் கேட்டு இருந்திர்கள் ஒரு தட்வை இல்லை பல தடவை இன்று வரை இதுக்கு பதில் கிடைக்கவில்லை இதில் இருந்து என்ன தெரிகிற்து????????

  • தொடங்கியவர்

.......

ஜயா சமாதானம் நான் சொன்னது உம்மை பற்றி தான் இது வரை உம்மிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு நீர் எங்கே பதில் அளித்துள்ளிர்கள்?????????? :roll: :?: ........

யாழ் கருத்து களத்தில் பல்வேறு தலைப்புகளில் இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது கருத்துகளை விரிவாக எழுதியுள்ளேன். பின்வரும் தலைப்புகளில் நடந்த விவாதங்களை வாசித்தால் உமது கேள்வி அவசியமற்றது.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=13096

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=14241

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கேள்விகளை நான் இங்கு பார்வையாளனாக இருக்கும் போதெ நீங்கள் கேட்டு இருந்திர்கள் ஒரு தட்வை இல்லை பல தடவை இன்று வரை இதுக்கு பதில் கிடைக்கவில்லை இதில் இருந்து என்ன தெரிகிற்து????????

:P :P :P

தாயகத்தில் மக்களது விலைமதிப்பற்ற தியாகத்தினை தமது உயிர் நாடியாகக் கொண்டு தமிழ் தேசிய விடுதலைக்கு தலைமை தாங்கும் புலிகள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுகள் குறித்து புதிய வழிமுறைகளில் சிந்திக்க வேண்டிய காலக்கட்டாயத்தை நாம் முன்னெப்போதும் இப்படி பார்த்ததில்லை.

இனமுரண்பாடு கூர்மை அடைந்த சுதந்திரத்துக்கு பின்னான இலங்கை வரலாற்றில் 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்ததில் இருந்து 2002 இல் செய்பப்பட்ட பிரபா - ரணில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் வரை எதிர்கட்சிகளால் ஒரு உடன்பாடுக்கு வரமுடியவில்லை.. இதன் பின்ணணியில் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மக்கள் மீது ஒரு நெருக்கடியை திணிப்பதற்கான முன்முயற்சியாகவே இந்த கூட்டிணைவின் தேவை அவர்களுக்கு வந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியம் சிங்கள அரசியலை நன்கு உள்வாக்கி, திட்டமிட்டு காய்நகர்த்தி ரணிலுக்கு தன் வாழ்வில் மறக்க முடியாத பாடம் ஒன்றை கற்பித்திருந்தது. அந்த தேர்தல் வடுகள் காயுமுன் உட்கட்சி ஒழுங்கீனம், இந்திய அழுத்தம் காரணமாக ரணில் இந்த முடிவிக்கு வரவேண்டிய நிலை.

யுத்தகால பொருளாதர முகாமைத்துவத்தில் சற்றும் தேர்ச்சியில்லாத மகிந்தவுக்கு - சர்வதேச நெருக்குவாரம் - இதை விட்டால் வேறு வழி இல்லை. இதனால் சிங்கள தேசம் ஒருமித்த குரலில் ஒர் அரசியல் தீர்வு குறித்து மிக விரைவில் பேசத்தொடங்கும்.

புலிகளின் அரசியல் நகர்வு தமிழர் அரசியல் தலைவிதியை திடமாக தீர்மாணிக்கும் வழி முறை எது என்பதுதான் இன்று எம்முன் உள்ள கேள்வி. தனிநாடு தமிழ் ஈழம் கிடைக்கும் வரை யுத்தமா? இல்லை, சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வில் சமாதானமா?

சமஸ்டி என்ற அரசியல் தீர்வை பற்றி தற்பொழுது எப்படி கதைப்பது?

25 வருடங்களிற்கு மேலாக இழுபறிப்படும் பிரச்சனைக்கு தீர்வை சில வாரங்களிலோ மாதங்களிலோ பேசி தீர்த்துவிட முடியாது. எனவே இடைக்கால தீர்வு ஒன்று தேவை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை குறைக்க. அதற்கு கூட சிறீலங்கா தயாரில்லை என்பது 2003 ஆண்டில் கண்டு கொண்டோம். அதற்கு அடுத்ததாக 2005 இல் அதைவிட குறைந்த அதிகாரங்களையும் கால வரையறையை கொண்ட சுனாமி மீள்கட்டமைப்பிற்கு என்ன நடந்தது?

ஏன் 20 வருடங்களிற்கு முன்னர் இணைக்கப்பட்ட வடக்கிற்கும் கிழக்கிற்கும் என்ன நடந்தது?

எனவே புலிகள் என்ன வழியில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வை காணப்போறார்கள் என்பது சிறீலங்காவை பொறுத்தது. சமஸ்டி பற்றி கதைப்பதற்கான நம்பிக்கையூட்டு செயற்பாடுகள் எதுவும் எதிர்த்தரப்பிடம் இருந்து வரவில்லை. 2 கைய்யும் தட்டினால் தான் ஓசைவரும். அதே போல் சிறீலங்காவும் பேசித் தீர்ப்பதில் ஆர்வம் இருந்தால் தான் பேசலாம்.

யாழ் கருத்து களத்தில் பல்வேறு தலைப்புகளில் இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது கருத்துகளை விரிவாக எழுதியுள்ளேன். பின்வரும் தலைப்புகளில் நடந்த விவாதங்களை வாசித்தால் உமது கேள்வி அவசியமற்றது.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=13096

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=14241

இவை எவற்றிலும் உமது கைய்யெழுத்திற்கு விளக்கங்கள் இல்லை.

எனவே மீண்டு...

"There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble."

யாரால் சொல்லப்பட்டது? எந்த சூழலிற்கு சொல்லப்பட்டது? இது எமக்கு பொருந்துமா? அவ்வாறாயின் எந்த முறையில் பொருந்துகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கருத்து களத்தில் பல்வேறு தலைப்புகளில் இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது கருத்துகளை விரிவாக எழுதியுள்ளேன். பின்வரும் தலைப்புகளில் நடந்த விவாதங்களை வாசித்தால் உமது கேள்வி அவசியமற்றது.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=13096

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=14241

பல்வேறு தலைப்புகளில் இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது கருத்துகளை விரிவாக எழுதியுள்ளேன்.

நீங்கள் வேறு தலைப்பில் என்ன எழுதி இருகிறிங்கள் என்ன பதில் கொடுத்து இருகிறிங்கள் என்று பார்த்து நான் உங்களுக்கு பாராட்டு விழ எடுக்கவரவில்லை

இங்கு நானும் கருத்து எழுதி இருக்கேன் மற்ற்வர்கள் எழுதியதையும் வாசிச்சு இருக்கேன் அதன் படி இங்கு நீங்கள் என்ன பதில் கூறி இருகிறிங்கள்?

இதுவரை நீங்கள் கைய்யெழுத்து பற்றி கேட்ட கேள்விகளிற்கு பதில் கொடுகாம ஒடி ஒழிச்சு திரியும் பச்சோந்தி நீங்கள் சும்மா அந்த தலைப்பில் பதில் கொடுத்து இருக்கேன் இந்த தலைப்பில் பதில் கொடுத்து இருக்கேன் என்று கழுதைகளின் பொதிசும்மக்க மறுக்கு காரணத்தை சொல்லமா பதிலை சொல்லுங்கள்,,,

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்பது

தவறும் இல்லை ஆனா பதில் சொல்லிவிட்டேன் என்று பொய் சொல்லுவது அவமானம் அசிங்கம் அருவருப்பை கொடுக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை எவற்றிலும் உமது கைய்யெழுத்திற்கு விளக்கங்கள் இல்லை.

எனவே மீண்டு...

"There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble."

யாரால் சொல்லப்பட்டது? எந்த சூழலிற்கு சொல்லப்பட்டது? இது எமக்கு பொருந்துமா? அவ்வாறாயின் எந்த முறையில் பொருந்துகிறது?

  • தொடங்கியவர்

இருப்பினும், இது பாலஸ்தீன விவகாரங்கள் குறித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் வாசித்ததாக நினைக்கிறேன். அந்த வரிகள் அதில் உள்ள அரசியல் அர்த்தம் என்னைப் பாதித்ததால் அதை இங்கு பயன் படுத்துகிறேன்.

நல்லம் அந்த வரிகளில் உள்ள அரசியல் அர்த்தம் உம்மை "பாதித்தது" தனியே பலஸ்தீனரின் நிலமை சார்பாகவா இல்லை ஈழத்தமிழர் சார்பாகவும் தானா?

அதாவது அந்த நீர் சொல்லும் "என்னை பாதித்தது" என்பதன் அர்த்தம் அது பலஸ்தீனருக்கு அதைக்கூறியவர் விளக்கியது போல் பொருந்துகிறது என்றா அல்லது ஈழத்தமிழருக்கும் பொருந்துகிறது என்றா இங்கு பயன் படுத்துகிறீர்?

ஏற்கனவே கேட்டது போல் ஈழத்தமிழருக்கு பொருந்துகிறது என்றால் அது எவ்வாறு எமக்கு பொருந்துகிறது அந்த வசங்களின் அர்த்த பரிமாணங்களில் என்று சொல்லும்.

  • தொடங்கியவர்

........

சமஸ்டி என்ற அரசியல் தீர்வை பற்றி தற்பொழுது எப்படி கதைப்பது?

25 வருடங்களிற்கு மேலாக இழுபறிப்படும் பிரச்சனைக்கு தீர்வை சில வாரங்களிலோ மாதங்களிலோ பேசி தீர்த்துவிட முடியாது. எனவே இடைக்கால தீர்வு ஒன்று தேவை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை குறைக்க. அதற்கு கூட சிறீலங்கா தயாரில்லை என்பது 2003 ஆண்டில் கண்டு கொண்டோம். அதற்கு அடுத்ததாக 2005 இல் அதைவிட குறைந்த அதிகாரங்களையும் கால வரையறையை கொண்ட சுனாமி மீள்கட்டமைப்பிற்கு என்ன நடந்தது?

ஏன் 20 வருடங்களிற்கு முன்னர் இணைக்கப்பட்ட வடக்கிற்கும் கிழக்கிற்கும் என்ன நடந்தது?

எனவே புலிகள் என்ன வழியில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வை காணப்போறார்கள் என்பது சிறீலங்காவை பொறுத்தது. சமஸ்டி பற்றி கதைப்பதற்கான நம்பிக்கையூட்டு செயற்பாடுகள் எதுவும் எதிர்த்தரப்பிடம் இருந்து வரவில்லை. 2 கைய்யும் தட்டினால் தான் ஓசைவரும். அதே போல் சிறீலங்காவும் பேசித் தீர்ப்பதில் ஆர்வம் இருந்தால் தான் பேசலாம்.

1919இல் ஒட்டு மொத்த இலங்கைத்தீவின் நலன் கருதி தமிழ், சிங்கள தலைமைகளினால் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டது. ஆனால், 1920ம் ஆண்டில் மனிங் அரசியல் சீர்திருத்தம் முன்மொழிந்த சட்டவாக்க நிரூபணசபை அங்கத்துவம் பற்றிய விடயத்தில் சிங்கள தமிழ் தலைமைகளுக்கிடையிலான முரண்பாட்டால் 1921இல் தமிழ் மகாஜன சபை உருவாக்கப்படது. சமகால இலங்கை அரசியலில் ஊடுபாவாக தொடரும் இந்த அரசியல் நிகழ்வுதான் தமிழ் சிங்கள இனமுரண்பாட்டின் தோற்றமென்பதை ஏ ஜே வில்சன் '' கண்ணீரின் முதல் அறிகுறி'' எனக்குறிப்பிடுகிறார்.

ஆக எண்பத்தைந்து ஆண்டுகால வரலாற்றுப்பின்ணணி கொண்ட இலங்கை தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டுகளாக உக்கிரமான யுத்தத்துக்கு வழிகோலியுள்ளது. சிங்கள அரசினால் தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் சர்வதேச, பிராந்திய வல்லரசுகளின் அழுத்தத்தினால் 2002ஆம் ஆண்டு ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வந்து, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதாக தமிழர் தலைமையுடன் ஒரு உடன்பாடும் எட்டப்பட்டது.

சுனாமி கட்டமைப்பு, வடகிழக்கு இணைப்பு போன்ற சட்டவாக்க பிரச்சினைகளை ஒர் இறுதி அரசியல் தீர்வில் ஏற்படுத்தப்படும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் மூலமே நிரந்தரமாக தீர்க்க முடியும்.

இதுவரை ஏழு தடவைகள் நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் இறுதி அரசியல் தீர்வு குறித்து பேசப்படவில்லை. எப்படிப் பேசுவது என்பதற்கான பேச்சுகளே நடந்துள்ளன. ஆனால் சிங்கள தரப்பால் எமக்கு தரக்கூடிய அதி கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை இன்னும் அவர்கள் முன்மொழியுமாறு நாம் வற்புறுதாதவரை பந்து தமிழர் தரப்பில் இருப்பதாகவே உலகம் அர்த்தம் கொள்ளும்.

  • தொடங்கியவர்

நல்லம் அந்த வரிகளில் உள்ள அரசியல் அர்த்தம் உம்மை "பாதித்தது" தனியே பலஸ்தீனரின் நிலமை சார்பாகவா இல்லை ஈழத்தமிழர் சார்பாகவும் தானா?

அதாவது அந்த நீர் சொல்லும் "என்னை பாதித்தது" என்பதன் அர்த்தம் அது பலஸ்தீனருக்கு அதைக்கூறியவர் விளக்கியது போல் பொருந்துகிறது என்றா அல்லது ஈழத்தமிழருக்கும் பொருந்துகிறது என்றா இங்கு பயன் படுத்துகிறீர்?

ஏற்கனவே கேட்டது போல் ஈழத்தமிழருக்கு பொருந்துகிறது என்றால் அது எவ்வாறு எமக்கு பொருந்துகிறது அந்த வசங்களின் அர்த்த பரிமாணங்களில் என்று சொல்லும்.

எனது பார்வையில் அந்த வரிகளின் அரசியல் அர்த்தம் பாலஸ்தீனத்திலோ ஈழத்திலோ மட்டும் அல்ல உலகில் உள்ள எந்த இன, மொழி, மத முரண்பாட்டுக்கும் பொருந்தும்.

அந்த வரிகள் இருந்த மூலக் கட்டுரையை கண்டுபிடித்து கீழே இணைத்துள்ளேன்.

No shortcuts for peace and democracy

by Daoud Kuttab

http://usa.mediamonitors.net/headlines/no_...e_and_democracy

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் சப்பி துப்பியது.....

1919இல் ஒட்டு மொத்த இலங்கைத்தீவின் நலன் கருதி தமிழ்இ சிங்கள தலைமைகளினால் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டது. ஆனால்இ 1920ம் ஆண்டில் மனிங் அரசியல் சீர்திருத்தம் முன்மொழிந்த சட்டவாக்க நிரூபணசபை அங்கத்துவம் பற்றிய விடயத்தில் சிங்கள தமிழ் தலைமைகளுக்கிடையிலான முரண்பாட்டால் 1921இல் தமிழ் மகாஜன சபை உருவாக்கப்படது. சமகால இலங்கை அரசியலில் ஊடுபாவாக தொடரும் இந்த அரசியல் நிகழ்வுதான் தமிழ் சிங்கள இனமுரண்பாட்டின் தோற்றமென்பதை ஏ ஜே வில்சன் '' கண்ணீரின் முதல் அறிகுறி'' எனக்குறிப்பிடுகிறார்.

ஆக எண்பத்தைந்து ஆண்டுகால வரலாற்றுப்பின்ணணி கொண்ட இலங்கை தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டுகளாக உக்கிரமான யுத்தத்துக்கு வழிகோலியுள்ளது. சிங்கள அரசினால் தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் சர்வதேசஇ பிராந்திய வல்லரசுகளின் அழுத்தத்தினால் 2002ஆம் ஆண்டு ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வந்துஇ உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதாக தமிழர் தலைமையுடன் ஒரு உடன்பாடும் எட்டப்பட்டது.

சுனாமி கட்டமைப்புஇ வடகிழக்கு இணைப்பு போன்ற சட்டவாக்க பிரச்சினைகளை ஒர் இறுதி அரசியல் தீர்வில் ஏற்படுத்தப்படும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் மூலமே நிரந்தரமாக தீர்க்க முடியும்.

இதுவரை ஏழு தடவைகள் நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் இறுதி அரசியல் தீர்வு குறித்து பேசப்படவில்லை. எப்படிப் பேசுவது என்பதற்கான பேச்சுகளே நடந்துள்ளன. ஆனால் சிங்கள தரப்பால் எமக்கு தரக்கூடிய அதி கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை இன்னும் அவர்கள் முன்மொழியுமாறு நாம் வற்புறுதாதவரை பந்து தமிழர் தரப்பில் இருப்பதாகவே உலகம் அர்த்தம் கொள்ளும்.

ஓஓ ஓஓ!!! அப்பிடியா சமாதானமண்ணா??? நாங்கள் விசரர்கள் இவ்வளவுநாளும் இதைபற்றி நினைக்கவேயில்லை. நல்லவேளை நீங்கள் யாழ்களத்தில் வந்து எளுதவில்லை எனின் இது யாருக்குமே தெரியாத விடையமாக இருந்திருக்கும்.

தமிழ்செல்வன் திரும்பவும் பேச என்ற ஜெனிவா போயிருக்கிறார். கடவுளே என்று இந்த முறையாவது அவர் அரசாங்கத்தை ஆககூடியாதை என்ன தருவிங்கள் என்று கேட்கிறாரோ இந்த முறையும் கேளாமல்தான் வாறாரோ????? அது அதுதான் இவ்வளவு நாளும் இவங்கள் புலிகள் பேச போறம் போறம் என்று போய் முக்கியமான விடயத்தை கேளாமல் வந்திருக்கிறாங்கள். சமாதானமண்ணை உங்களுக்கு நேரமிருந்தால் நீங்கள் ஓருக்கால் புலிகளோடு சேர்ந்து பேச்சுவார்த்தைக்கு போங்கோவன் யாழ்கள உறவுகளான நாங்கள் அதை முன்மொழிகிறோம். ஒரு வேளை முக்கியமில்லாத சின்ன சின்ன விடய்ங்களை கேட்டே தரமாட்டமென்கிறாங்கள் இவங்களிட்ட எப்படி போய் முக்கியமான விடயத்தை கேட்பது என்றுதான் இவளவு நாளும் புலிகள் கேட்கவில்லையோ தெரியாது???

சமாதானமண்ணா ஒரு வேளை புலிகள் அப்பிடி கேட்கும்போது அரசாங்கம் நாம் ஒன்றும் தரமாட்டம் நீங்கள் போய் தமிழ்; நாட்டில (இந்திய) குடியேறுங்கோ என்று சொல்லமாட்டினமோ????

அப்படி சொன்னால் நாங்கள் பிறகு என்ன செய்யிறது???? போரடமுடியாது ..... பந்து எங்களிட்ட இருக்குதென்றல்லோ உலகம் நினைக்கிது அமெரிக்கா வேற எங்கள பாக்குது.

அது சரியண்ணை அப்ப தமிழருக்கும் சிங்களவருக்கம் 1919ம் ஆண்டுதான் பிரச்சனை தொடங்கியதோ???? ஓல்லாந்தர் வந்த காலத்திலேயே தமிழருக்கும் சிங்களவருக்கும் பிரச்சனை இருந்ததாகவும் இலங்கை மூன்று தனி தனி ராஜ்ஜியங்களாக பிரிந்து கிடந்ததாகவும் சொல்லுறாங்களே........ நான் அதையெல்லோ இவளவு நாளும் நம்பின்னான். நல்ல வேளை எல்லாம் அறிந்திருக்க கூடிய ஓரு தீர்க்கதரிசியை யாழ்களத்தினுடாக சந்திக்க கிடைத்திருக்கிறது. அடியேன் என்ன தவம் செய்தேனோ?

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானமண்ணா!!

இப்பபாருங்கோ 2002ம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்புதானே சுனாமி பேரலை அடித்து தமிழ்ஈழ கடற்கரையோரமெங்கும் பேரழிவு எற்பட்டது. அப்போது கடற்புலிகளுக்கும் கணிசமான இழப்பேற்பட்டதாக கூறுகிறார்கள். அதோடு மக்கள் பாரிய இழப்புக்குள்ளாகும் போது அது எப்படியோ புலிகளையும் பாதிக்கும்.

ஆகவே மீண்டும் ஒரு பாரிய சுனாமி அடிக்க போவதாகவும் அதை அமெரிக்கா உறுதிசெய்திருப்பதாகவும் சும்மா ஓரு புரளியை கிளப்பி. கடற்புலிகள் பலவினமடைவதால் போராட்டம் முன்னேறாது ஆகவே புத்திசாலிதனமா இப்போதே சமாதானம்.... சமாதானம் கூக்குரலிடுங்கோ என்று ஒரு கருத்தை எழுதி ஓரு கலக்கு கலக்கேலாதோ????? நான் உம்மைப்போல் தீர்க்கதரிசியல்லா ஒரு வேளை அப்படி எழுத முடியாததற்கு ஏதும் காரணமிருப்பின் அறியதாருங்கள்.

இல்லாவிட்டால் பாருங்கள் நான் சுனாமியை வைத்தே கலக்கிறன்.

நீங்கள் வேறு இணையத்தளங்களில் ஏதாவது கட்-பேஸ்ற் பண்ணி நீங்கள் கலக்குங்கோ. இவங்கள் விசரங்கள் ஒண்டும் விழங்கவில்லையென்று ஏதாவது கேள்வி கேட்பாங்கள். அதுக்கு திரும்பவும் ஏதாவது கட்-பேஸ்ற் பண்ண சரி. உங்களுக்கு கொஞ்சம் கஸ்டமாயிருக்கிற நேரம் எனக்கு தனிமடல் அனுபுங்கோ

நான் சுhனமி புரளியை அவிட்டுவிர்ரன்.

1919இல் ஒட்டு மொத்த இலங்கைத்தீவின் நலன் கருதி தமிழ், சிங்கள தலைமைகளினால் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டது. ஆனால், 1920ம் ஆண்டில் மனிங் அரசியல் சீர்திருத்தம் முன்மொழிந்த சட்டவாக்க நிரூபணசபை அங்கத்துவம் பற்றிய விடயத்தில் சிங்கள தமிழ் தலைமைகளுக்கிடையிலான முரண்பாட்டால் 1921இல் தமிழ் மகாஜன சபை உருவாக்கப்படது. சமகால இலங்கை அரசியலில் ஊடுபாவாக தொடரும் இந்த அரசியல் நிகழ்வுதான் தமிழ் சிங்கள இனமுரண்பாட்டின் தோற்றமென்பதை ஏ ஜே வில்சன் '' கண்ணீரின் முதல் அறிகுறி'' எனக்குறிப்பிடுகிறார்.

ஆக எண்பத்தைந்து ஆண்டுகால வரலாற்றுப்பின்ணணி கொண்ட இலங்கை தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டுகளாக உக்கிரமான யுத்தத்துக்கு வழிகோலியுள்ளது. சிங்கள அரசினால் தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் சர்வதேச, பிராந்திய வல்லரசுகளின் அழுத்தத்தினால் 2002ஆம் ஆண்டு ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வந்து, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதாக தமிழர் தலைமையுடன் ஒரு உடன்பாடும் எட்டப்பட்டது.

சுனாமி கட்டமைப்பு, வடகிழக்கு இணைப்பு போன்ற சட்டவாக்க பிரச்சினைகளை ஒர் இறுதி அரசியல் தீர்வில் ஏற்படுத்தப்படும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் மூலமே நிரந்தரமாக தீர்க்க முடியும்.

இதுவரை ஏழு தடவைகள் நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் இறுதி அரசியல் தீர்வு குறித்து பேசப்படவில்லை. எப்படிப் பேசுவது என்பதற்கான பேச்சுகளே நடந்துள்ளன. ஆனால் சிங்கள தரப்பால் எமக்கு தரக்கூடிய அதி கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை இன்னும் அவர்கள் முன்மொழியுமாறு நாம் வற்புறுதாதவரை பந்து தமிழர் தரப்பில் இருப்பதாகவே உலகம் அர்த்தம் கொள்ளும்.

எனது பார்வையில் அந்த வரிகளின் அரசியல் அர்த்தம் பாலஸ்தீனத்திலோ ஈழத்திலோ மட்டும் அல்ல உலகில் உள்ள எந்த இன, மொழி, மத முரண்பாட்டுக்கும் பொருந்தும்.

அந்த வரிகள் இருந்த மூலக் கட்டுரையை கண்டுபிடித்து கீழே இணைத்துள்ளேன்.

No shortcuts for peace and democracy

by Daoud Kuttab

http://usa.mediamonitors.net/headlines/no_...e_and_democracy

ஒஸ்லோவில் 2002 இறுதிப்பகுதியில் தமிழர் தலமை அறிவித்தது உள்ளக சுயாட்சி பற்றியும் பரிசீலிக்க தயார் என்பது மட்டுமே. ஆனால் எந்த சூழ்நிலையிலும் நிபந்தனை அற்ற முறையில் உள்ளக சுயாட்சி அடிப்படையில் மட்டும் தான் தீர்வை தேடுவோம் என்று அல்ல. அதன் (தமிழர் தலமையின் உள்ளக சுயாட்சி பற்றிய பரிசீலனையின்) வெற்றி தோல்வி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தரப்பு எந்தளவிற்கு விட்டுக் கொடுப்புடனும் நல்லெண்ண அடிப்படையிலும் செயற்படுகிறது என்பதில் தான் தங்கியிருக்கிறது.

எனவே அது பிரகடனம் அல்ல, நிபந்தனை அற்ற உடன்பாடும் அல்ல. சாதகமான நம்பிக்கையூட்டும் நிலை உருவாகுமாயின் பரிசீலிப்பதற்கு தயார் என்ற அறிவிப்பு மாத்திரமே.

இலங்கை பிரச்சனையின் அடிப்படை பொரும்பான்மையினரின் அடக்குமுறை (tyranny of the majority). அங்கு சட்டவாக்கல் பிரச்சனை அரசியல் யாப்பு சீர்திருத்தம் யாவுமே பொரும்பான்மையினரால் தான் செய்யப்பட வேண்டியது. அதாவது ஆட்சி அதிகாரங்களை கைய்யில் வைத்திருப்பவர்களும் அதை துஸ்பிரயோகம் செய்து சிறுபான்மையினரை அடக்குவதும் ஆக்கிரமிப்பதும் பெரும்பான்மையினர். அதிகாரங்கள் இல்லாது ஒற்றையாட்சியில் நம்பிக்கை இழந்து தம்மை தாமே ஆழும் உரிமைக்கா போரடுபவர்கள் தமிழர்கள். எனவே இந்த சீர்திருத்தங்களை பொரும்பான்மையினரால் தான் செய்ய முடியும். அதை நடத்தி முடிக்க வேண்டியது இலங்கையின் ஒருமைப்பாட்டில் அக்கறையுள்ள சர்வதேச மற்றும் பிராந்தி சக்த்திகளும். அதற்கு தமிழர்கள் தமது போராட்ட வரலாற்றில் பல சந்தர்ப்பங்களை வழங்கிவிட்டார்கள் ஆனால் கிடைத்தது ஏமாற்றமும் தொடர் அவலமுமே.

சிங்கள தேசம் வரலாற்றில் எத்தனை தடவை அனைத்துக் கட்சி மகாநாடு கூடிவிட்டது நிபுணர்கள் குழுவை உருவாக்கியது தமிழருக்கு அதிகார பரவலாக்கம் வழங்க? இதுவரை கிடைத்த முடிவுகள் என்ன கால இழுத்தடிப்பையும், தொடர்ந்த அடக்குமுறையும் அவலங்களையும் தவிர? இடைக்கால தன்னாட்சி வரைபை புலிகள் பொறுப்பொடுத்து தயாரித்து கைய்யளித்ததே இழுத்தடிப்புகள் இல்லாது ஆரம்பம் வேகமாக இருக்கட்டும் என்று. ஆனால் கிடைத்த பதில் என்ன? ஆட்சி கவிழ்பு, அதைவிட தாமும் ஒரு வரைபை தயாரிக்கிறோம் (அதற்கு நேரம் தேவை) அதையும் சமமாக பரிசீலனை செய்வோம் என்ற இழுத்தடிப்பு. பேச்சுக்கள் பற்றியே பல சுற்றில் பேச வேண்டிய நிலையை உருவாக்கியது சிங்கள தரப்பே அன்றி தமிழர்கள் அல்ல. அதாவது இடைக்கால தீர்வு பற்றி பேசுவதற்கு கூட தயாரில்லாமல் முட்டுக்கட்டைகள் போட்டதும் இழுத்தடிப்பு யுக்த்திகளை கைய்யாண்டதும் சிங்கள இனவாதம். இது வெறும் இரு தரப்பு நேரடிப்பேச்சுவார்த்தையில் நடக்கவில்லை. சர்வதேச கண்காணிப்பில் நோர்வே மத்தியஸ்தத்தில் நடந்தேறியவை.

புலிகளால் கைய்யளிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபை ஒரு நிரந்தர சமட்சி தீர்வை விட அதிகாரம் குன்றியது மாத்திரம் அல்ல அதன் கால எல்லையும் வரையறுக்கப்பட்டது. சுனாமி கட்டமைப்பு என்பது அதிகாரத்திலும் கால எல்லையிலும் இன்னமும் குறுகியது. இவற்றை ஏற்றுக் கொள்ள பரிசீலிக்க பக்குவம் இல்லை சிங்கள தேசத்திடம் அவற்றை ஏற்றுக் கொள்ள பரிசீலிக்க வைக்கக்கூடிய அழுத்தத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பும் சர்வதேசத்திடம் இல்லை.

எப்படி இவற்றை விட கடினமான சிக்கலான நிரந்தர அதிகார பரவலாக்கத்தை சிங்கள இனவாதம் முன்மொழிய தயார் என்று நினைக்க முடியும்? அதை முன்வைக்க சர்வதேசம் வேண்டி அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? இடைக்கால அதிகார சபை, சுனாமி கட்டமைப்பிற்கான வைரைபு போன்ற வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிற்கு கிடைத்த தொடர் ஏமாற்றங்களிற்கு பிறகும் கூட எந்த நிபந்தனையும் இன்றி கடந்த மாவீரர்தின உரையில் யாதார்த்தவாதி மகிந்தவிற்கு தேசிய தலைவரால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திற்கு பலன் என்ன பதில் என்ன இன்று வரை? இந்த சந்தர்ப்பத்தை கூட அக்கறையுள்ள சர்வதேச மற்றும் பிராந்தி சக்த்திகள் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்கள்?

எனவே எப்படி பந்து தமிழர் பக்கம் இருக்க முடியும்?

தமிழர்கள் எப்படி plenty of guilt உடையவர்களில் அடங்க முடியும்? பலஸ்தீனரின் அந்த வசனம் எமக்கு எப்படி பொருந்தும்? தமிழர்களிற்கும் plenty of guilt பொருந்தும் என்று நினைக்கும் நீர் அதற்கான காரணங்களை பட்டியலிடும்பாப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.