Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

400 சீடர்களூக்கு ஆண்மை நீக்கம்: பஞ்சாப் சாமியார் மீது சி.பி.ஐ. விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சண்டிகர்:  தனது ஆசிரமத்தைச் சேர்ந்த 400 சீடர்களுக்கு, ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்ய தூண்டிய பஞ்சாப் சாமியார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் 'தேரா சாச்சா ஸவ்தா' என்ற சமூக நல மற்றும் ஆன்மீக அமைப்பையும், ஆசிரமத்தையும் நடத்தி வருபவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம்.

இவர் மீது  வழக்கறிஞர்  நவ்கிரண் சிங் பஞ்சாப் மற்றும் ஹரியான உயர் நீதி மன்றத்தில்  ஒரு மனுதாக்கல் செய்து உள்ளார்.  இவர், சாமியாரின் முன்னாள் சீடர் ஹன்ஸ் ராஜ் சவுகான் என்பவர் தரப்பில் ஆஜராகி உள்ள வழக்கறிஞர் ஆவார். 

அவர் அளித்துள்ள  அந்த மனுவில்," குர்மீத் தன்னுடைய 400 சீடர்களூக்கு ஆண்மை நீக்கம் செய்து உள்ளார். இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே  நடைபெற்று உள்ளது.  ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளைச்  சந்திக்கமுடியும் என உறுதி அளித்து இந்த காரியத்தைச்  செய்து உள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்"  எனக் கூறி உள்ளார்.

இது தொடர்பாக  சவுகானின் வழக்கறிஞர் நவ்கிரண் சிங் கூறுகையில்,"இந்த மனுவை விசாரித்த  நீதிபதி கண்ணன் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.இந்த விசாரணை உயர் நீதிமன்ற  மேற்பார்வையில் நடைபெறும்.

முதல் கட்ட அறிக்கையை சி.பி.ஐ. மார்ச் மாதம் 2 ஆம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட பட்டுள்ளது. இந்த வழக்கில், தேரா சாச்சா ஸவ்தா  தலைவர் குர்மீத் ராம் ரஹீம் முக்கிய குற்றவாளி ஆவார். அவரோடு சேர்த்து  இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட டாக்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

முன்னதாக உயர் நீதிமன்றம்,  சவுகானுக்கு சண்டிகாரில் உள்ள  அரசு பல் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டது"  என தெரிவித்தார்.

ஆண்மை நீக்கத்தை பின்பற்றியவர்கள் தங்கள் விதைப் பைகள் நீக்கபட்டதாக கடந்த டிசமபர் மாதம் கோர்ட்டில் சாட்சியம் அளித்து உள்ளனர்.

மனுதாரர்  ஹன்ஸ்ராஜ் சவ்கான், தேரா சாச்சா ஸவ்தா அமைப்பில் தனது 16 வயதில் சேர்ந்தார். தற்போது அவருக்கு 31 வயது ஆகிறது. கடந்த 15 வருடங்களாக அந்த அமைப்பில் இருந்து உள்ளார்.சவ்கானை சாமியார்  குர்மீத்திடம் அவரின்  பெற்றோர்கள்தான்  அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

இது மிகவும் முக்கியமான அறுவைசிகிச்சை, இது மிகவும் வலி மிகுந்தது. இந்த அறுவைசிகிச்சை முடிந்தவுடன் 30 முதல் 35 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும்.இந்த அறுவைசிகிச்சை  ஒவ்வொரு மாதமும்  தேரா சாச்சா ஸவ்தா கட்டடத்தில் நடைபெறும் என சவுகான் குற்றம் சாட்டினார்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் சாமியாரின் ஆசிரமத்தில் இருந்து இவர் விலகினார் என்பது குறிப்பிடத் தக்கது. 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=36560

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியல் 'நலம்' அடிச்சிருக்காங்க

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றியிருந்தவர்களை  மடக்கச் சொல்லீட்டு தனியாளாக நின்று கம்மாறீஸ் அடித்திருக்கிறார்...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.