Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கறை காட்டாத அக்கரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்கறை காட்டாத அக்கரை

இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர்ச் சூழல் உருவாகியதையடுத்து ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 12, 2006 தொடங்கி ஜூலை 7, 2006 வரை 1363 குடும்பங்களைச் சேர்ந்த 4343 பேர் இராமேஸ்வரத்தை ஒட்டிய கடற்கரைகளில் வந்திறங்கியுள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள விவரங்களின் படி 31.01.2005 ஆம் திகதியில் இங்குள்ள 103 முகாம்களில் 14,031 குடும்பங்களைச் சேர்ந்த 52, 332 பேர் வாழ்கின்றனர். (பார்க்க: வெப்சைட்) புதிதாக வந்து சேர்ந்துள்ள அகதிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் சுமார் 58,000 அகதிகளுக்கும் குறையாமல் இன்று தமிழகம் முழுவதில் இருக்கிற முகாம்களில் உள்ளனர். தொடர்ந்து சராசரியாக நாளொன்றுக்கு 50 அகதிகளேனும் வந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களின் நிலைமை எப்படியுள்ளது? போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை அறிய தமிழகத்திலுள்ள முக்கிய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த முன்னோடி மனித உரிமை ஆர்வலர்கள் 19 பேர் அடங்கிய குழு ஒன்று அரச அனுமதி பெற்று இராமேஸ்வரம் மண்டபம் முகாமைப் பார்வையிட்டது. தொடர்ந்து இக்குழுவினர் பிரிந்து சென்று தமிழகமெங்குமுள்ள கீழ்க்கண்ட முகாம்களையும் பார்வையிட்டனர்.

கீழ்ப்புத்துப்பட்டு, பெரியசெவலை (விழுப்புரம் மாவட்டம்) திருவாதவூர் (மதுரை மாவட்டம்), குள்ளஞ்சாவடி, விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத்திகாட்டனூர் (சேலம் மாவட்டம்), பரமத்தி வேலூர், கரூர் (நாமக்கல் மாவட்டம்) பவானி சாகர் அணைக்கட்டு (ஈரோடு மாவட்டம்)

முகாம்களின் நிலைமை:

இராமேஸ்வரம் பகுதியில் வந்திறங்கும் அகதிகள் அனைவரும் மண்டபம் முகாம்களுக்குக் கொண்டு வரப்படுகின்றனர். இது ஒரு இடைக்கால முகாம் எனச் சொல்லப்படுகிறது. எனினும் நாங்கள் சென்றபோது ஜனவரிக்கும் பின் புதிதாக வந்திருந்த 4343 பேர்கள் தவிர பத்தாண்டுகளுக்கு மேலாக அங்கு 220 குடும்பங்களைச் சேர்ந்த 756 பேர் வசிப்பதையும் கண்டோம். ஜூலை 8 ஆம் திகதி அன்று 28 பேர் வந்திறங்கியுள்ளனர். அரிச்சல்முனை என்னுமிடத்தில் இறக்கிவிடப்பட்ட இவர்கள் இலங்கைப் பணம் 1000/= கொடுத்து 9 கி.மீ. தொலைவிலிருந்த முகந்தராயசத்திரத்துக்கு வந்திருந்தனர். உளவுத்துறை அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தது.

அரிச்சல்முனை தவிர பாம்பனிலும் அகதிகள் வந்திறங்குகின்றனர். தலைமன்னார், பேசாலை, கிளிநொச்சி எனப் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வருகின்றனர். அன்று வந்திறங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் மீன்பிடித்தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள். அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவரின் குடும்பமும், வாகனச் சாரதி ஒருவரின் குடும்பமும் கூட அதிலிருந்தது. போர்ச் சூழலால் மீன்பிடித் தொழில் முழுவதுமாய் நின்று போயுள்ளது. இராணுவத்தால் இளைஞர்கள், பெண்களின் உயிருக்கும், உடலுக்கும் ஆபத்துள்ளது. வந்திருந்தவர்கள் 3 நாட்கள் மன்னார் காட்டில் காத்திருந்து ஒவ்வொருவரும் சுமார் 7000 முதல் 10,000 இலங்கை ரூபா வரை படகுக்காரர்களுக்குத் தந்து வந்திருந்தனர். மேலும், 10,000 பேர் இங்கு வருவதற்காக மன்னார் காடுகளில் காத்திருப்பதாகவும் கூறினர்.

இந்தியாவில் தரை இறங்கியவுடன் முதலில் இந்தியக் கடற்படைச் சோதனை, பின் முகந்தராய சத்திரத்தில் க்யூ பிரிவு மற்றும் ஸ்பெஷல் பிராஞ்ச் பொலிஸார் விசாரணை. பின்னர் தனுஷ்கோடி காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு மீண்டும் விசாரணையும் பதிவும் செய்யப்படுகிறது. பின்பு மாலையில் மண்டபம் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தொண்டு நிறுவனத்தினர் அளிக்கும் உணவு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. மண்டபம் முகாமில் புதிதாய் வந்தவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் குவாரன்டைனில் வைக்கப்படுகின்றனர். இது ஒரு சிறைக் கொட்டடி. நாங்கள் சென்றபோது ஆண்களுக்கான குவாரன்டைனில் (சுமார் 20 இற்கு 20 அடி) 39 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இரண்டே இரண்டு கழிப்பறைகள் மட்டுமே அதில் இருந்தன. இவர்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ் (27) ஜூன் 17 முதலும், மன்னாரைச் சேர்ந்த முருகையன் (42) ஜூன் 27 முதலும் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு உணவு வெளியிலிருந்து தருவித்துத் தரப்படுகிறது. ஒருவருக்கு ஒருநாள் உணவுச் செலவு ரூ.35 விசாரணையின்போது இயக்கங்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்துக்குள்ளாகிறவர்கள

நிம்மதி ஒன்றுதான் இல்லாதபோதும் இந்த மண் எங்களின்

அகதிகள் நிலை மோசமாகவே இருக்கிறது. அரசு இந்த பட்ஜெட்டில் அவர்களது மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க ஒரு தொகை ஒதுக்கியிருக்கிறது. மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர் ஒருவரையும் ஒரு குழுவாக அமைத்து அகதிகள் நலன் குறித்த அறிக்கைகளை அவ்வப்போது அரசுக்கு சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறது.

இவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒரு சகோதரர் எம்.பி.பி.எஸ். படித்து தேறியிருக்கிறார்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.