Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் ஓராண்டில் இந்த இந்திய அணி திறமைகளை எங்கும் நிரூபிக்கும்: ரவி சாஸ்திரி

Featured Replies

இன்னும் ஓராண்டில் இந்த இந்திய அணி திறமைகளை எங்கும் நிரூபிக்கும்: ரவி சாஸ்திரி
 

 

 

இந்த இளம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த ஓராண்டில் பலமாக எழுச்சியுறும் என்று அணி இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது:

”2-0 என்று தொடரை இழந்தது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அணி வெளிப்படுத்திய ஆட்டத்திறமைதான். கடந்த காலங்களில் நாம் வீழ்ந்திருக்கிறோம், நெருக்கடியில் எந்த வித சவாலையும் அளிக்காமல் தோற்றிருக்கிறோம். ஆனால் தற்போது எதிரணியினரிடம் தாக்குதல் ஆட்டத்தை கொண்டு சென்றுள்ளோம்.

 

இந்த அணி வீரர்களின் சராசரி வயது 26. ஆனால், இது தோல்விக்கான சாக்குபோக்கு அல்ல.

இந்த அணிக்கு நான் முன்னமே கூறியது போல் இன்னும் 12 மாதங்கள் கொடுங்கள், அவர்கள் ஒரு வலுவான அணியாக எழுச்சி பெறுவார்கள். அவர்கள் எங்கும்திறமையை வெளிப்படுத்த தயாராகி விடுவார்கள்.

 

சில கவலையளிக்கும் பகுதிகள் உள்ளன. அதனை நாம் பேசியாக வேண்டும். உதாரணமாக கீழ்வரிசை வீரர்கள் பேட்டிங்கில் கொஞ்சம் திறமையைக் காண்பிக்க வேண்டும். நெருக்கடி தருணங்களில் ஒருங்கிணைந்து போராடுவது எப்படி? மடமடவென விக்கெட்டுகள் சரிவைத் தடுப்பது. தவறுகளை அகற்றி மீண்டும் அது நிகழாமல் பார்த்துக் கொள்வது எப்படி? இந்தப் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும்.

 

ஆனால் 17 ஆண்டுகளில் இது மெல்போர்னில் முதல் டிரா. அவர்கள் 530 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதன் பிறகு 3ஆம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி, ரஹானே ஆடிய விதம் நான் நீண்ட நாட்களாகக் காணாதது. ஆஸ்திரேலியா முழுதும் அவர்களின் ஆட்டத்தை ஏற்றுக் கொண்டனர். எதிரணியினர் பந்து வீச்சை அதிரடி ஆட்டம் மூலம் காலி செய்தனர்.

 

இந்த இந்திய அணி சும்மா கிரிக்கெட் ஆடவரவில்லை என்பதை ஒவ்வொரு ஆஸ்திரேலியர்களும் உணர்ந்திருப்பார்கள். சவால்களை அளித்து வெற்றி பெறவே இந்த அணி வந்திருக்கிறது என்பதை அவர்கள் இந்நேரம் அறிந்திருப்பார்கள். இதுதான் எனக்கு முக்கியம் ஸ்கோர் லைன் அல்ல.

 

டாப் 6 பேட்ஸ்மென்களில் ஒருவர் 15-20 ஓவர்களை வீசக்கூடிய ஆல்ரவுண்ட் திறமைகளைக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும். உதாரணமாக சவுரவ் கங்குலி. அயல்நாடுகளில் அவரைப்போல் ஒரு மிதவேக பவுலிங் ஆல்ரவுண்டர் இருந்தால் நன்றாக இருக்கும். இதைத்தான் அடுத்து கண்டுபிடிக்கவுள்ளோம்.

 

எதிர்காலங்களில் அயல்நாடுகளில் விளையாடப் போகிறோம் என்றால் எந்த அணிச்சேர்க்கை உதவும் என்பதை ஆராய வேண்டும்.

இன்று காலை இந்திய பவுலர்கள் துல்லியமாக வீசினர். ரன்களை கட்டுப்படுத்துவது இன்றைய இலக்கு. ஆஸ்திரேலியாவை ஓவருக்கு 4 ரன்கள் வீதம் அடிக்க விடாமல் செய்தாலே விக்கெட் வாய்ப்புகள் கிட்டும். எனவே இவர்கள் கற்றுக் கொள்வார்கள். என்னை நம்புங்கள் சிட்னிக்குச் செல்லும் போது உலகைப் பற்றி கவலைப்படபோவதில்லை, வெற்றி பெறப்போகிறோம். தொடரை தோற்றால் என்ன? அது பற்றி கவலையில்லை.

 

பவுலர்களின் உடற்தகுதி முக்கியமான ஒன்று. முதல் 2 மணி நேர ஆட்டம் எவ்வளவு முக்கியமோ அதேபோல்தான் கடைசி 2 மணி நேர ஆட்டமும். அதில் 2, 3 விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமா? அப்படிப்பட்ட ஆக்ரோஷத்தை உங்களால் நீட்டிக்க முடிகிறதா? இதுதான் பெரிய வித்தியாசத்தை தோற்றுவிக்கும்.

 

எனவே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இதனை மனதில் கொண்டு களமிறங்கி திறமையைக் காட்ட வேண்டும். உங்களால் எதிர்பார்ப்புக்கு இணங்க செயலாற்ற முடியவில்லையா? பிறர் இருக்கவே இருக்கிறார்கள், அவர்கள் செய்வார்கள்.”

இவ்வாறு கூறியுள்ளார் சாஸ்திரி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/article6738815.ece

  • தொடங்கியவர்

இந்திய அணியின் எதிர்காலம்: மனம் திறக்கிறார் ரவி சாஸ்திரி
ஜனவரி 02, 2015.

 

சிட்னி: ‘‘இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்களை முதலில் கண்டறிய வேண்டும்,’’என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 0–2 என, இழந்தது. சிட்னி டெஸ்ட் மீதமிருக்கையில், அனுபவ தோனி திடீரென டெஸ்ட் அரங்கில் இருந்தே விடை பெற்றார். இது, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இளம் கேப்டன் கோஹ்லி எந்த அளவுக்கு சாதிப்பார் என இப்போதே கணிக்க முடியவில்லை.

 

இதுகுறித்து இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறியது:

தற்போதைய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு அனுபவ பந்துவீச்சாளர்கள் தான் பெரும் பலம். இந்திய வீரர்களிடம் போதிய அனுபவம் இல்லை என்பதே உண்மை. அடுத்த 12 முதல் 15 மாத காலம் மிகவும் கடினமானவை என்பதில் சந்தேகம் இல்லை. எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்களை கண்டறிய வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக நம்புகிறேன்.

கோஹ்லியை பொறுத்தவரை மிகவும் ஆக்ரோஷமானவர். இது, இவரது குணம். கேப்டன் பதவியை இப்போது தான் பெற்றுள்ளார். நிறைய பாடங்கள் படிக்க வேண்டியுள்ளது.

 

தோனி முடிவு:

கிரிக்கெட்டில் ஓய்வு என்பது வீரரின் தனிப்பட்ட முடிவு. இதுகுறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. மெல்போர்ன் டெஸ்ட் முடிந்த பின் என்னிடம் வந்து சில நிமிடம் தோனி பேசினார். அடுத்து சக வீரர்களிடம் சொல்லிவிட்டு முடிவை அறிவித்தார். இதை அவரது குடும்பத்துக்கு கூட  தெரிவித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

 

மதிப்பு கூடியது

 

இந்த எதிர்பாராத முடிவு காரணமாக எல்லோரும் திகைத்துப் போய்விட்டோம். துணிச்சலான இந்தச் செயல் காரணமாக, அவர் மீதான மரியாதை பல மடங்கு அதிகரித்துவிட்டது. 100 டெஸ்ட் விளையாட வேண்டும் என்று காத்திருக்கவில்லை. ஏனெனில், இதெல்லாம் தேவையற்ற புள்ளி விவரங்கள். ரசிகர்கள் முன்னிலையில் பிரியாவிடை பெற வேண்டும் என, நினைக்காதது எல்லாம், அவரது பண்பை காட்டுகிறது. உண்மையில் தோனி வித்தியாசமான, வியக்கத்தக்க மனிதர்.

 

சளைத்தவர் அல்ல

இந்தியாவின் சிறந்த வீரர்களில் தோனி ஒருவர் அல்ல என்பது விவாதப் பொருளாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், இந்திய வீரர்களில் யாருக்கும் தோனி சளைத்தவர் அல்ல.

 

அதேநேரம், எனது ஆதரவில் கோஹ்லி வளர்வது பிடிக்காததால் தான் விலகினார் என்ற செய்திகள் முட்டாள்தனமானது. ‘டிரஸ்சிங் ரூமில்’ தவான்–கோஹ்லி மோதல் நடந்தது என்பதும் கற்பனையானது.

கோஹ்லி இந்திய அணியில் 5 ஆண்டுகளாக உள்ளார். 19 வயதுக்குட்பட்ட அணியில் இருந்தே, இருவரும் இணைந்து விளையாடி வருகின்றனர். பத்திரிகைகளில் கூறியது போல, இருவருக்கும் எவ்வித வாக்குவாதமும் நடக்கவில்லை. இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420217164/dhoniravishastri.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.