Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் அதிபர் தேர்தலும் தமிழ்மக்களின் நிலைப்பாடும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலும் தமிழ்மக்களின் நிலைப்பாடும். நடைபெற இருக்கும் சிறிலங்கா அதிபர் பதவிக்கான தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன?இதில் மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழர்களிடையே மாற்றுக் கருத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதிபர் பதவிக்கான வேட்பாளர்களில் பிரதானமானவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மகிந்தஇராஜபக்கசவும் எதிரணி வேட்பாளராக அதே கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவும் ஆவர்.இது உலகில் எங்கும் நடந்திராத வேட்பாளர் தேர்வாக இருக்கிறது.2009 ஆம் ஆண்டு நடந்த பெரும் இன அழிப்பின்போது அதிபராக இருந்த மகிந்த தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளான வேட்பாளாராய் இருந்த போதும் எதிரணியில் உள்ளவர்கள் இந்த இன அழிப்புக்கு முற்றிலும் துணைபோனவர்களே என்பதும் உலகம் அறிந்த உண்மை.சந்திரிகா,ரணில்,சரத்பொன்சேகா,ஜாதிககெலஉறுமய,ஜேவிபி,ஐதேகஎன்பன எல்லாம் இன அழிப்புக்கு தங்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கிய கட்சிகள் ஆகும். எதிரணிகளின் கூட்டணியினதோ ஆளும் கட்சினதோ தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக எந்த யோசனைகளும் உள்ளடக்கப்படவில்லை.இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாகவோ அதற்குத் தீர்வு காண வேண்டிய அக்கறையோ 2 கட்சிகளுக்கும் இல்லை.மாறாக தமிழர்களின் ஆதரவை நேரடியாக கேட்டுப் பெறுவதற்கும் தயங்குகிறார்கள்.எந்தத்தரப்பு தமிழர்களின் ஆதரவை நேரடியாகக் கோருகிறதோ அந்தத் தரப்புக்கு எதிராக சிங்கள மக்களின் வாக்குகள் திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் இரு தரப்பும் இருக்கிறது. எதிர்த் தரப்பு தனது பிரதான தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருப்பது நிறைவேற்று அதிகாரமுறையிலான ஜனாதிபதி ஆட்.சிமுறை ஒழிப்பு பற்றிய விடயமாகும்.இதனையே அவர்கள் தங்கள் வெற்றிக்கான வியூகமாக வகுத்திருக்கிறார்கள்.இதன் அடிப்படையிலேயே அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள இனவாதக்கட்சிகள் ஒன்றுபடுகின்றன.இந்த முறைமையில் அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியிடமே குவிந்து கிடப்பதால் அவரைச் சுற்றியே அனைத்து அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சுழன்று கொண்டிருக்கிறார்கள்.ஜனாதிபதி தான் நினைத்தவர்களை உயர் பதவிகளில் இருத்துவதும் மற்றையவர்களை உதாசீனப்படுத்துவதும் நடத்த முடிகின்றது. மிக முக்கிய பதவிகளில் ஜனாதிபதியின் சகோதரர்களும் ,உறவினர்களுமே அமர்த்தப்பட்டு அது ஒரு குடும்ப ஆட்சி போல தோற்றமளிக்கிறது.இந்த நிலமை ஒன்றுதான் சிங்கள சக்திகளை அவருக்கு எதிராகத் திருப்பி விட்டிருக்கிறது.ஆகவே இந்த ஆட்சி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று ஒன்று பட்டிருக்கிறார்கள்.ஆனால் அந்தக் கதிரையில் உட்கார்ந்தவர்கள் அதனை விட்டுக்கொடுக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே.இப்படித்தான் முன்பு சந்திரிகாவும் இந்த அதிகார முறைமையை ஒழிப்பேன் என்று கூறி அதிகாரத்துக்கு வந்து தொடர்ச்சியாக இரு தடைவைகள் அந்தப் பதவியை அநுபவித்த கதை எல்லோரும் அறிந்த விடயமே.அவரே அதை எதிர்துக் குரல் கொடுக்கிறார் என்றால் அதன் காரணம் அதனை ஒழித்தால்தான் அவர் மீண்டும் அரசியலில் ஒரு உயர் பதவியில்(பிரதமர்) அமரலாம்.ஆக இந்தத்தேர்தலின் பின் எதிரணிக் கூட்டணி பிளவடைந்து எதிர்எதிராக பாரளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம்.சந்திரிகாவின் இப்போதயை தேவை மகிந்தவை பதவியில் இருந்து இறக்கி சுதந்திரக்கட்சியின் தலமைப் பதவியை கைபற்றுவதே. அந்தக் கட்சி அவருடைய தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்பதால் கட்சி தனக்கே சொந்தம் எனக் கருதுகிறார்.மகிந்த அதன் தலமைப்பதவியை வைத்திருப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.அதனாலேயே எதிரணியினர் ஒரு பொதுப் பெயரில் பொதுச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்த ஜனாதிபதி தேர்தல் முறைமை என்பது சிங்களவர்களைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகார ஆட்சி முறைமையாகும்.இதனால் அவர்களுக்கு அதனை நீக்க வேண்டிய தேவை இருக்கிறது.ஆனால் தமிழ்மக்களைப் பொறுத்தவரை இந்த ஒரு தேர்தலுக்கு மட்டும்தான் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை நேரடியாகவோ மறைமுகமாகவோ கோருகிறார்கள்.அதுவும் 2 வேட்பாளர்களுக்கும் சிங்களவர் மத்தியில் சரிசமமான செல்வாக்கு இருக்கும் நிலமையில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்;மானிப்பவையாக இருக்கக்கூடும் என்பதனால் அந்த ஆதரவைக் கோருகிறார்கள்.தமிழர்களின் (அளிக்கப்படும் வாக்குகளில் தேர்தல் புறக்கணிப்பு,செல்லுபடியற்ற வாக்குகள் தவிர்த்து)வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் எப்போதும் ஒரு தரப்பிற்கே அளிக்கப்பட்டு வருகின்றன.ஆகவே ஜனாதிபதி தேர்தல் முறைமை நீக்கப்பட்டால் சிங்கள வேட்பாளர்கள் ஒருபோதுமே தமிழர்களின் வாக்குகளில் தங்கியிருக்கப் போவதில்லை.ஆக தமிழர்களுக்கு ஒரு உறுதியான தீர்வு வருமட்டும் ஜனாதிபதி தேர்தல் முறைமை இருப்பதே தமிழ்மக்களைப் பொறுத்தவரை நல்லது. ஆனால் அதற்காக மகிந்ததான் மீண்டும் வெல்ல வேண்டும் என்பதல்ல. மைத்திரி வென்றாலும் அவர் ஜனாதிபதி பதவியை விட்டுத்தரமாட்டார்.நாட்டின் அதிஉச்ச பதவியைத் துறந்து பிரதமர் பதவியை சந்திரிகாவுக்கோ,ரணிலுக்கோ விட்டுத்தருவார் என்று நினைப்பது முட்டாள்த்தனம்.தேர்தல் விஞ்ஙாபனத்தில் அதிபர் முறைமையை நீக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தாலும்.நாடளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பொரும்பான்மை இல்லாததால் நீக்க முடியவில்லை என்று காரணம் கூறலாம். சரி இனித்தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டைப் பார்ப்போம்.இந்;தத் தேர்தலில் தமிழர் சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இந்தத் தேர்தலை தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றியிருக்கலாம். அந்த வாய்ப்பு தவறவிடப்பட்டுவிட்டது.கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய முன்னணி இந்த்தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.ததேகூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரனும்,ரவிகரனும்,சிவாஜிலிங்கமும் இதே நிலைப்பாட்டை எடுப்பதாக அறிவித்துள்ளனர்.ததேகூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு விருப்பமிருந்தாலும் தலமையுடன் முரண்பாட்டை எடுக்க விரும்பாத நிலமையில் இருக்கிறார்கள்.சரி இந்தத்தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணித்தால் தமிழ்மக்கள் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றே சர்வதேசத்தால் கருதப்படும்.ஏற்கனவே 2005 இல் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி இருந்ததால்தான் மகிந்த ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் கிடைத்தது என்று சர்வதேசம் மட்டுல்ல தமிழ்மக்கள் சிலரும் குற்றஞ் சாட்டுகிறார்கள்.ஆகவே தேர்தல் புறக்கணிப்பை மேற்கொள்வது மேற்குலகை கோபப் படுத்தவும் ஏற்கனவே உள்ள உள்ள குற்றச் சாட்டைப் பலப்படுத்தவுமே உதவும். அத்துடன் கள்ள வாக்குகளுக்கும் வழிவகுக்கும்.ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் சென்று வாக்களித்து தங்கள் வாக்குகளைச் செல்லாத வாக்ககளாக அளித்தால் தமிழ் மக்கள் இந்த உலகுக்கு ஏதோ ஒரு செய்தியை ஜனநாயக முறையில் தெரிவித்திருக்கிறார்கள் என்பது புலப்படும். பலத்த இழுத்தடிப்பின் பின் சம்பந்தர் இந்தியாவுக்கு போய்விட்டு வந்து மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கிறார்.இது தமிழ்மக்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.எல்லோரும் தமிழ்மக்கள் சுயவிருப்பின் பேரில் வாக்களிக்க வேண்டும் என்றே கூட்டமைப்பு முடிவெடுக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.ஏனெனில் மகிந்தவுக்கு தமிழ்மக்கள் ஒருபோதுமே வாக்களிக்க மாட்டார்கள்.வாக்களிப்பவர்கள் வேறு தெரிவுகள் இல்லாத நிலையில் ஒரு மாற்றம் வேண்டி மைத்திரிக்கே வாக்களிப்பார்கள். ஆகவே கூட்டமைப்பு சொல்லித்தான் தமிழ்மக்கள் வாக்களிக்கும் நிலமையில் இல்லை.ஆக சம்பந்தர் இந்தியாவின் கருத்தை தமிழ் மக்களின் மேல் திணித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல தேவையற்ற இடத்தில் தேவையில்லாமல் புலிகள் ஒரு இரக்கமற்ற ஆயுதஅமைப்பு என்றும் விமர்சித்து இருக்கிறார். இதுவும் இந்தியாவால் அவருக்குச் சொல்லப்பட்டதா?என்ற கேள்வி எழுகின்றது?உண்மையில் சுகவீனம் காரணமாகத்தான் இந்தியா போயிருந்தாராகில் இந்த வயதில் சுகவீனமான நிலைமையில் அரசியலில் இருந்து ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுவதே சிறந்த முடிவாக இருக்கும்.அத்துடன் பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வை எதிர்பார்ப்பதாகவும் தாங்கள் மைத்திரியுடன் தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்றும் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.மைத்திரியும் தமிழ்மக்கள் தனக்கு நிபந்தனை அற்ற விதத்தில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்.ஆக தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக இரண்டு பிரதான வேட்பாளர்கள் மட்டுமல்லாது ததேகூட்டமைப்பும் எந்தவித அக்கறையுமற்று இருப்பது வரவேற்கத்தக்க விடயமல்ல. அதுவும் இந்த ஒரு தேர்தலில் மட்டும்தான் சிங்களத்தலமைகளுடன் ஒரு குறைந்த அளவு பேரம் பேசக் கூடிய நிலமை இருக்கிறது.(அதை நிறைவேற்றமாட்டார்கள் என்பது வேறு விடயம்) இனி இன்னொரு விடயம் இருக்கிறது. தான்வென்றால் மகிந்தவை போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேசத்திடம் கையளிக்க மாட்டார் என்று மைத்திரி பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.மாறாக சரத் பொன்சேகாவுக்கு நடந்தது போல ஏதாவது வழக்குகளைப் போட்டு உள்நாட்டு விசாரணை நடத்தி அவரது அரசியல் வாழ்வை அழிக்கத்தான் நினைப்பார்.சர்வதேசமும் தான் விரும்பிய அதிகாரமாற்றம் நடந்த விட்டது என்று போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அக்கறை காட்டாது.மாறாக மகிந்த வென்றால் மகிந்தவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும்.காரணம் மகிந்தவின் சீனச்சார்புக் கொள்கைதான்.ஆனால் மைத்திரி வென்றாலும் சீனச்சார்புக் கொள்கை தொடர்ந்து இருக்கத்தான் போகின்றது.சீனா சிறிலங்காவை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது என்பதையும் காலந்தாழ்த்தியே சர்வதேசமும் இந்தியாவும் புரிந்து கொள்ளப் போகின்றது என்பதையும் இதன் காரணமாக தமிழ்மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தியே சீனாவின் தலையீட்டைத் தவிர்ப்பதற்கு அழுத்தங்களைக் கொடுக்கலாம் என்ற உண்மையும் புலப்படும். இதற்கிடையில் ஜாதிக கெல உறுமையைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார். மகிந்த 13 அம் திருத்தச் சட்டத்தின் அதிகாரத்தைக் குறைத்து ஆளுநரின் அதிகாரத்தைக் கூட்டுவாரானால் அவருக்குத் தாம் ஆதரவளிக்கத் தயார் என்று சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்டவர் மைத்திரியோடு எப்படிப்பட்ட உடன்பாட்டுக்கு வந்திருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. அதாவது தமிழ்மக்களுக்கு எதிராக இருந்தால் மகிந்தவின்; குடும்ப ஆட்சியையும் சகித்துக் கொள்ளத் தயார் என்பதே அதன் சாராம்சம்.ஆக மொத்தத்தில் சிங்களத் தலமைகள் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு தயாரில்லை என்பதும் அந்த விடயத்தில் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து உண்டு என்பதும் புலனாகின்றது.ஆனால் தமிழ்மக்களின் அரணாக இருக்க வேண்டிய கூட்டமைப்பு அதன் மற்றைய உறுப்பினர்களின் கருத்துக்களைச் செவிமடுக்காது சம்பந்தர்,சுமத்திரன்.மாவை என்ற வட்டத்துடன் நின்று விடுவதும் தங்கள் கருத்துக்களை மற்றைய உறுப்பினர்கள் மீதும், தமிழ்மக்கள் மீதும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதிலுமே அக்கறை காட்டுகிறது.ஆக மொத்தத்தில் சிறிலங்காவிற்கான இந்;தத் தேர்தல் ததே கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கே உதவியிருக்கிறது.சிங்களத் தலைமைகளைப்; பொறுத்தவரை இதுவும் ஒரு வெற்றிதான். இன்று இப்படி அறிக்கைவிடும் ததேகூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக தாயகம்,தேசியம்,தன்னாட்சி உரிமை என்றும் புலிகளை முன்னிறுத்தியும் பிரச்சாரம் செய்து தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.ததேகூட்டமைப்பின் தலமைமாற்றப் பட்டு புதியவர்களுக்கு இடங்கொடுத்து தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.இந்த மண்ணுக்காக விலைமதிப்பற்ற உயிர்களையே காணிக்கையாக்கிய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும்,.சகோதரர்களுக்கும்,அவர்களது நண்பர்களுக்கும் இந்தத் தேர்தலில் எப்படியான முடிவை எடுக்க வேண்டும் என்பது தெரியும்.தமிழ்மக்களுக்கு ஒரு சரியான உறுதியான தலமை கிடைக்கும் வரை சிறிலங்கா நடத்தும் தேர்தல்களில் தமிழ் மக்கள் வழமைபோலவே தங்கள் அரசியல் விருப்பைத் தெளிவுபடுத்துவார்கள் என்பது திண்ணம். யாழ் களத்திற்காக புலவர்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது சுயலாபத்திற்காக கட்சியினுள் குத்துக்கரணம் போட்ட மைத்திரி நாளை இதே சுயலாபத்திற்காக தமிழ் மக்களிற்கு மகிந்த செய்ததை விட அதிக கொடுமைகளை செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மைத்திரியின் அணியில் உள்ள பொன்சேகா, சந்திரிகா எல்லாருமே போர்குற்றவாளிகள் தானே?

 

ஒரு போர்குற்றவாளிகளின் அணிக்கு ஆதரவு கொடுத்து இன்னொரு போர்குற்றவாளிகளின் அணியை போர்குற்ற விசாரணையில் மாட்டி தண்டிக்கலாம் எனும் எதிர்பார்ப்பு அளவு கடந்த கற்பனை என்பதைவிட வேறு ஒன்றும் இல்லை.

 

தேர்தலில் வாக்களிக்கக்கூடிய நிலமையில் நான் இருந்தால் எனது வாக்கு மகிந்தாவுக்கே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல தமிழ் மக்களின் கருத்துக்களே மேற்படி கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.