Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு: தனித்து ஓடும் சம்பந்தன் - சுமந்திரன் கூட்டணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு: தனித்து ஓடும் சம்பந்தன் - சுமந்திரன் கூட்டணி

முத்துக்குமார்

b55eae69-2bd4-401c-b204-b797945652791.jp

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துள்ளது. கூட்டமைப்பு மைத்திரி ஆதரவு நிலை எடுத்தமைக்கு மேற்குலகினதும் இந்தியாவினதும் அழுத்தம்தான் பிரதான காரணம். இவை ஆட்சிமாற்றத்தினை விரும்புகின்றன என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மேற்குலகத்தையும், இந்தியாவையும் பொறுத்தவரை இரண்டு வேலைத்திட்டங்கள் உள்ளன. ஒன்று ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது, இரண்டாவது தனக்குச் சாதகமான ஆட்சியைப் பாதுகாப்பது. இரண்டிற்கும் முக்கியமான நிபந்தனை தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியடைய விடாமல் அடக்கிவைப்பது. தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியடைந்தால் இந்த இரண்டு வேலைத்திட்டங்களையும் நகர்த்துவது அவற்றிற்கு கடினமாகிவிடும். இதனால் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசிய அரசியலின் அடிப்படை எண்ணக்கருக்களை கைவிடுமாறு வலியுறுத்தி வந்தன. போராட்டங்கள் எதுவும் நடாத்த வேண்டாம் எனவும் அழுத்தம் கொடுத்து வந்தன.

சம்பந்தன் தலைமை அதனை முழுமையாக எற்றுக்கொண்டு கட்சியை வழிநடத்தி இருந்தது. தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்த் தேசிய கோசங்கள் உச்சரிக்கப்பட்டன. ஏனைய காலங்களில் அவற்றைத் தவிர்த்துக் கொண்டனர். பல்வேறு ஆக்கிரமிப்புக்கள் பச்சையாக இடம்பெற்றபோது போராட்டங்கள் நடாத்துவது பற்றி அக்கறைப்படவில்லை. இவர்களை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டங்கள் நடாத்தியபோது வாக்கு கிடைக்காது என்பதற்காக தாங்களும் போட்டிக்கு போராட்டங்களை நடாத்த முற்பட்டனர். அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டங்களில் இலவசமாக முகங்களைக் காட்டினர். இப் போராட்டங்களில் மறந்தும் கூட சம்பந்தன், சுமந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்வதில்லை. இவை தவிர இன அழிப்பு என்ற தீர்மானம் வடமாகாண சபையில் நிறைவேற்றுவதை தடுத்தனர். ஜெனீவா விசாரணைக்கு சாட்சியங்களை வழங்குவதில் எந்த அக்கறையையும் செலுத்தவில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் மேற்குலகமும் இந்தியாவும் நகர்த்தும் நிகழ்ச்சிநிரலை குழப்பக்கூடாது என்பதே.

ஆட்சி மாற்றம் வந்த பின்னரும் அந்த ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழ் அரசியல் எழுச்சி அடைவதை அவை விரும்பவில்லை. இந்தியாவில் இவை பற்றி பேச முயற்சிக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. வடமாகாண சபையின் ஆளுநர் சந்திரசிறீ மாற்றப்படுவார் என்பதற்கும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாக தகவல். காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்கப்படமாட்டாது. மத்தியில் மூன்று அமைச்சர்களும் வடமாகாண சபையும் தான் அரசியல் தீர்வு. அவற்றுடன் திருப்திப்பட்டுக்கொண்டு போக வேண்டும் என்றே மேற்குலகும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றது. தமிழ் மக்களை அமைதிப்படுத்துவதற்காகத்தான் ஜனவரியில் போராட்டம் ஆரம்பமாகும் என மாவை அறைகூவல் விடுத்தார். இனியென்ன தீர்வு வந்துவிட்டது தானே, போராட்டங்கள் எதுவும் தேவையில்லை என மாவை அறிவிக்கலாம்

இந்தியாவினதும் மேற்குலகத்தினதும் ஆட்சி மாற்ற இலக்கிற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே தீர்;மானம் எடுக்கும் பொறுப்பை சம்பந்தன் தன் கையில் வைத்திருக்கின்றார். கட்சிகளின் குழு, பாராளுமன்றக்குழு, தமிழ் அரசுக் கட்சி செயற்குழு எல்லாமே பெயருக்குத்தான். தீர்மானங்களை சம்பந்தன் தனித்தே எடுக்கின்றார். எடுத்த பின் எப்பாடுபட்டாவது கட்சியை அதற்கேற்றபடி கொண்டுவந்து விடுகிறார். இவ் விடயத்தில் எவருமே அசைக்க முடியாத பாரிய நிபுணத்துவம் அவரிடம் இருக்கின்றது.

தன்னுடைய தீர்மானத்தை கட்சியை துரிதமாக ஏற்க செய்வதற்காக தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்களோடு எந்தவகையிலும் தொடர்புபடாதவர்களை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்கின்றார். முதலில் சுமந்திரன் கொண்டு வரப்பட்டார் பின்னர் விக்கினேஸ்வரன் கொண்டுவரப்பட்டார் தற்போது தவராசா கொண்டுவரப்படுகின்றார்.

சம்பந்தன் தலைமை மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஆதரவுகொடுப்பதை நியாயப்படுத்தும் வகையில் சப்பைக்கட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கான உத்தரவாதங்கள் எவற்றையும் காணவில்லை. மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அப்படியே பிரதி பண்ணிய ஒன்றாகவே இருந்தது.

சட்டத்தின் ஆட்சியைக் கொண்டுவருதல், நீதித்துறைச் சுதந்திரத்தைப் பேணுதல், பாரளுமன்றத்தை வலுவுள்ளதாக்குதல் என்பவை பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றிற்கும் தமிழ்மக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி தெளிவேதுமில்லை. நடைமுறையிலுள்ள சட்டங்கள் தமிழ்மக்களுக்கு எதிரானவை. இந்நிலையில் சட்டப்படி ஆட்சி நடைபெறுவதால் தமிழ்மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது. சிறிலங்காவின் நீதித்துறை என்பது வரலாற்று ரீதியாகவே தமிழ் மக்களை வஞ்சித்த நீதித்துறை. இது பற்றிய வரலாற்று அனுபவங்கள் தனிச்சிங்களச் சட்டத்திலிருந்து சுனாமி பொதுக்கட்டமைப்பு நீக்கம் ஊடாக வடக்கு - கிழக்குப் பிரிப்பு வரை நிறையவே இருக்கின்றன. இந்த நீதித்துறை சுதந்திரமாக இருப்பதால் தமிழ்மக்களுக்கு என்ன கிடைக்கப்போகின்றது? இவை தவிர தமிழ்மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை சட்டங்கள் எல்லாவற்றையும் இந்தப் பாராளுமன்றமே நிறைவேற்றியது. இது எப்படி தமிழ்மக்களுக்குச் சாதகமாக இருக்கமுடியும்.

இங்கு மகிந்தர் அரசாங்கம் தான் தமிழ்மக்களுக்குப் பிரச்சினை என்கின்ற வகையில் ஒரு மாயை கட்டியெழுப்பப்படுகின்றது. இங்கு மகிந்தர் அரசாங்கம் மட்டும் பிரச்சினை அல்ல. மாறாக சிறிலங்கா அரசே பிரச்சினை. சிறிலங்கா அரசுருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்த தூண்கள் தான் பிரச்சினை. இந்த அரசுருவாக்கக் கட்டமைப்பு இருக்கும் வரை ஆட்சிக்கு வருகின்ற எல்லா அரசாங்கங்களும் தமிழ்மக்களை ஒடுக்குகின்ற நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ளும். இவையொன்றும் நீண்ட அரசியல் வரலாறு படைத்த சம்பந்தன் தலைமைக்குத் தெரியாததல்ல. அத் தலைமை தமது எஜமான்களின் நலன்களைப் பேணுவதற்காக மக்கள் முன்னால் நாடகமாடுகின்றது.

பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்மக்கள் பற்றிய விவகாரங்கள் எவற்றையும் உள்ளடக்கவேண்டாம் என தாம் தான் கூறியதாக சுமந்திரன் குறிப்பிடுகின்றார். இவருக்கு இந்;த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களா? அல்லது தமிழரசுக்கட்சியின் செயற்குழுவா? கட்சிகளின் கூட்;டமைப்பும், கட்சியின் செயற்குழுவும் இருக்கும் போது சுமந்திரன் மட்டும் தீர்மானம் எடுப்பது எந்தவகை ஜனநாயகம்? சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்றபோதும், பொது எதிரணியின் தலைவர்களுடன் கூட்டமைப்பின் தலைவர்கள் பேசச் செல்லும் வரை அவருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மற்றைய விடயம் மிகவும் முக்கியமானது. தமிழ்மக்களின் பிரச்சினைகள் வெளிப்படையானவை. அவற்றுக்கான தீர்வுகளும் வெளிப்படையானவை. அவற்றை வெளிப்படையான அரங்குகளில் வைத்துப் பேசாமல் இரகசியமான அரங்குகளில் பேசித் தீர்மானிக்க முடியுமா? முதலில் மைத்திரி வெல்லட்டும், பின்னர் தமிழர் விவகாரம் பற்றி பேசலாம் என்பது சப்பைக்கட்டு வாதம். தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுத்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் வென்ற பின்னர் ஹெல உறுமயவுடன் ஓர் உடன்படிக்கையும் செய்த நிலையில் இனப்பிரச்சினையை மைத்திரி தீர்த்து வைப்பார் என நம்புவதற்கு தமிழ்மக்கள் முட்டாள்கள் அல்லர். இது விடயத்தில் மனோ கணேசனிடம் இருந்த நேர்மை கூட சம்பந்தன் தலைமையிடம் இருக்கவில்லை. மனோ கணேசன் மைத்திரி ஆட்சியில் தமிழ்மக்களுக்கு தேனும், பாலும் ஓடப்போவதில்லை என தெளிவாகவே குறிப்பிட்டார். இதைக் கூறும் துணிவு கூட சம்பந்தன் தலைமைக்கு இருக்கவில்லை.

உண்மையில் மைத்திரியை வேட்பாளராக நிறுத்தியமை இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் இணைந்த ஒரு வேலைத்திட்டமே. சீனாவின் செல்வாக்கை இலங்கையிலிருந்து அகற்றுவதே அவற்றின் இலக்கு. இந்த இலக்கு நோக்கிய நகர்விற்கு எந்தவித பிரதிபலனும் இல்லாமல் கூட்டமைப்பினர் சோரம் போயுள்ளனர். இந்தியாவும் மேற்குலகமும் தமிழ்மக்களைப் பயன்படுத்தி தமது நலன்களை வென்று கொண்டு செல்கின்றனர். எங்கள் தலைமைகள் மட்டும் எங்கள் விவகாரத்தை முன்வைத்து பேரம்பேசாமல் இந்தியாவினதும் மேற்குலகினதும் நிகழ்ச்சிநிரலுக்குள் தமிழ் மக்களின் விவகாரங்களையும் உள்ளடக்காமல், அவற்றிற்கு அடிமைச் சேவகம் செய்கின்றன.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=b55eae69-2bd4-401c-b204-b79794565279

இந்த கட்டுரையின் நோக்கம் என்ன , தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதும் மகிந்தவுக்கு வாக்கு போடுவதும் ஒன்றுதான் , கூட்டமைப்பு கள்ளநோக்கம் இருக்கோ இல்லையோ அனால் இப்ப தேர்தலை புறக்கணிப்பது நல்லதல்ல . மற்றது மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர் சம்பந்தமான் உடன்பாடுகள் விடுவதால் அவருக்குதான் தோல்வி நிட்சயம் . அப்படி அவர் அதனை உள்ளடக்கினால் சிங்கள மக்கள் வாக்கு மகிந்தவுக்கு தான் . மறுபடியும் மகிந்தவின் வெற்றி உறுதியாகிடும் .
 
இவர்கள் இருவராலும் தமிழருக்கு ஒன்றும் நடக்காது . இது எப்பவோ தெரிந்த விடயம் . ஆனால் இப்போதைய சந்தர்ப்பத்தில் எது சரியோ அதனை தான் நாம் செய்ய வேண்டும் . 
 
இந்தியாவை எதிர்த்து நாம் ஒன்றும் செய்யமுடியாது . தேசியத்தலைவர் இந்தியாவை எப்படியும் அணைக்க முயட்சி செய்தார் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபடியால் அது முடியாமல் போய்விட்டது .இதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் இந்தியாவின் சார்பில்லாமல் எங்களுக்கு எந்த தீர்வும் இல்லை . ஆதலால் நாம் புத்தியாக காய் நகர்த்தவேண்டும் . 
 
இந்த  கட்டுரையாளர் எவ்வளவு பணம் வாங்கினர் மகிந்தவிடம் இருந்து.

இந்த கட்டுரையாளர் எப்பொழுதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமையை விமர்சிப்பவர்தான் ,கஜேந்திரகுமாரை புகழ்ந்து எழுதுவர் .இதே கஜேந்திரன்குழு ஜெனிவா விசாரணைகளை சொதப்பியது தெரியவில்லையாக்கும் .


சம்பந்தன் ஐயா தனித்து ஓடவுமில்லை ,தீர்மானம் எடுக்கவும் இல்லை ,TNA யில் உள்ள கட்சிகள் எல்லாம் அவர்களுடைய பொதுக்குழு ,நிர்வாகக்குழுவில் மைத்திரிக்கு ஆதாரவாக எடுத்த தீர்மானங்களை ,பின்பு TNA இன் அரசியல்குழு கூடி முடிவெடுத்து .

சம்பந்தர் ஐயா இந்தியாவிலை இருந்தாலும் மாகாண ,மாவட்ட ,கிராமரீதியான கட்டமைப்புக்கள் வட -கிழக்கில் உள்ளது .சம்பந்தர் ஐயா இந்தியாவிலிருந்து வர முன்பு மாவையும் மற்றவர்களும் மக்களிடமும் ,கட்சி அங்கத்தவர்களிடமும் கருத்து கேட்கப்பட்டு அதன் அறிக்கை சம்பந்தர் ஐயாவிடம் கொடுக்கப்பட்டது .தனடிப்படையில் TNA யின் அரசியல் குழு கூடி முடிவெடுக்கப்பட்டது.

 

தற்போது தவராசா கொண்டுவரப்படுகின்றார்

.

 

இந்த கட்டுரையாளருக்கு எவரையும் அடையாளம் தெரிவதில்லை போலுள்ளது ,குட்டிமணியின் வழக்கிலிருந்து தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்காக பல ஆபத்துக்களுக்கு மத்தியிலும் இன்றுவரை வாதாடுபவர் ,இவர் அண்மையில் புங்குடுதீவு கலை விழாவுக்காக கனடா வந்து சென்றவர்

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.