Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அளிக்கப்பட்டது ராஜபக்ஸ எதிர்ப்பு வாக்குகளே தவிர சிறிசேனசார்புவாக்குகளல்ல"– குமாரவடிவேல் குருபரன்

Featured Replies

guru_CI.jpg

 

 

(“த இந்து” பத்திரிகையில் வெளியான தமிழ் சிவில் சமூகத்தின் பேச்சாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் சனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்)

 

எந்தவொரு தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளுக்கும் சிறிசேனதீர்வு வழங்குவார் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை.

தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் பெருமளவில் வாக்குப்பதிவு இடம்பெற்றமையை ராஜபக்சவிற்கு எதிரான வாக்களிப்பு எனவே நான் விளக்கமளிப்பேன்.

ராஜபக்ச நடாத்திய போரிற்கும் அவர் போரிற்குபிந்தையசூழலில் மேற்கொண்ட தமிழர் விரோத செயற்பாடுகளிற்கும் எதிரான எதிர்ப்புணர்வாகவே இந்த வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது.

இந்த வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவான வாக்குகளாக அர்த்தப்படுத்தலாம் என நான் நினைக்கவில்லை.

 

ஒற்றையாட்சி என்பதற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வுஅரசு, போர்க் குற்றங்களிற்கு பொறுப்புக் கூறல், இராணுவத்தை அகற்றல்,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் கையளித்தல் போன்ற தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு சிறிசேன தீர்வு வழங்குவார் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. சிறிசேன தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழர்களின் நலன்களிற்கு முரணான நிலையையே எடுத்திருந்தார்.

 

தமிழ்சிவில் சமூகமானது சனாதிபதித் தேர்தல் குறித்த தனது அறிக்கையில் வெளிப்படையாக சிறிசேனவை ஆதரிக்கும்நிலைப்பாட்டை எடுக்கவில்லை. பதவியிலிருந்த ராஜபக்சவிற்கு அல்ல வாக்குகள் என்றும் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டது. அதே நேரம் தேர்தலை நிராகரிப்பதற்கான அழைப்பும் விடுக்கப்படவில்லை.

 

தமிழர்களின்வாழ்வில்உண்மையான மாற்றத்தை கொண்டுவர மறுக்கும் தென்னிலங்கை கட்சிகளுடைய நிகழ்ச்சி நிரலின் தீவிரகுறைபாடுகளையே தமிழ்சிவில் சமூகம் வெளிக்காட்டியது. நாம் தமிழர்களை அவர்களின் சொந்த மனச்சாட்சியின் படி முடிவு எடுக்குமாறு கூறினோம். அந்த மனச்சாட்சியானது ராஜபக்சவை தூக்கி எறியும் வாஞ்சையையே உறுதிப்படுத்தியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது சிறிசேனாவை ஆதரிக்கும் படி மக்களை வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டது. நிபந்தனையற்ற அடிப்படையில் அவர்களால் சிறிசேனாவிற்கு வழங்கப்பட்ட ஆதரவு குறித்து விளக்க வேண்டிய பாரிய பொறுப்பு அவர்களின் தோள்களில் உள்ளது. 

கொழும்பில் ஆட்சி மாறினாலும், உள்நாட்டு பொறிமுறைகளால் எதுவும் ஆகப்போவதில்லை என வலுவாக நம்பும் தமிழர்கள், சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலமே பொறுப்புக் கூறலை எதிர்பார்த்திருக்கின்றார்கள் என்பதை சர்வதேச சமூகம் கண்டு கொள்ள வேண்டும்.  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115381/language/ta-IN/article.aspx

இதைக்  கூட சொல்வதற்கு ஒரு அமைப்பு அதற்கு ஒரு சட்ட விரிவுரை அறிஞர் தேவையோ.

அது சரி மன்னார் ஆயர் இப்போ இநத அமைப்பில் இல்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர்களை அவர்களின் சொந்த மனச்சாட்சியின் படி முடிவு எடுக்குமாறு கூறினோம்.

நீங்கள் சொல்லா விட்டால் மக்கள் மனச்சாட்சிக்கு மாறாகவா வாக்களித்திருப்பார்கள்?

மக்கள் அப்படி என்றும் செய்வதில்லை. இதை சொல்ல நீங்கள் தேவையும் இல்லை.

உங்கள் பேச்சை கேட்டு மக்கள் தேர்தலை பகிஷ்கரித்து இருந்தால் ராஜபஷே ஜனாதிபதியாக தொடர்ந்தும் இருந்திருப்பான்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது சிறிசேனாவை ஆதரிக்கும் படி மக்களை வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115381/language/ta-IN/article.aspx

அது தான் தலைமைத்துவம். தலைவர்கள் மக்களை தீர்க்கதரிசனத்துடன் வழிநடத்துபவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பானது அதை சிறப்பாகவே செய்கிறது. நீங்கள் மக்களை குழப்புவதே பாதகமாக அமைகிறது. உங்கள் தர்க்கவியல் வாதங்கள் கற்றறிந்தவர்களுக்கான தர்க்கவியல் அரங்கங்களுக்கு பொருத்தமானதேயன்றி மக்களை வழிநடத்தும் அறிவுறுத்தல்கள் அல்ல அவை. இனியாவது உங்கள் தர்க்கவியல் வாதங்களை உங்களுக்கு பொருத்தமான களங்களுக்குள் மட்டுப்படுத்தி கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.