Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவில் இரண்டு பிரதமர்கள் – சர்ச்சையில் ரணிலின் நியமனம்

Featured Replies

சிறிலங்காவில் இரண்டு பிரதமர்கள் – சர்ச்சையில் ரணிலின் நியமனம் JAN 11, 2015 | 0:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

RANIL-300x198.jpgசிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண பதவியில் இருந்து விலக மறுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகப் பதவியேற்றதும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்திருந்தார்.

ஆனால், முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண தனது பதவியை விட்டு விலக மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால், தாம் பதவி விலகத் தயார் என்றும் டி.எம்.ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் 20ம் நாள் கூடவுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் ஆதரவைப் பெறும் வரை அதிபர் மைத்திரிபால சிறிசேன காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே ஒரு பிரதமர் பதவியில் இருக்கும் நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தது, அரசியலமைப்புச்சட்டத்துக்கு முரணானது என்று சிறிலங்காவின் மூத்த சட்ட நிபுணர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியாக இன்னமும் டி.எம்.ஜெயரட்ணவே பிரதமர் பதவியில் இருப்பதாகவும் கூறிய அவர், அவர் அந்தப் பதவியில் இருக்கும் போது மற்றொருவர்  நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய பிரதமர் பதவியில் இருந்து விலகினால் மட்டுமே, புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு உள்ளது.

அதேவேளை, புதியவர் ஒருவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்றால், ஏற்கனவே பதவியில் இருக்கும் பிரதமரை விலகுமாறு கோரி சிறிலங்கா அதிபர் கடிதம் அனுப்ப முடியும் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/01/11/news/2754

 

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி எதையும் செய்யலாம்..... :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுள்ள நிறைவேற்று அதிகாரத்தை மாற்றமின்றி நிலைநிறுத்த இந்த இழுபறிநிலை ஒரு கருவாகலாம்... :o 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.