Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக: பாமக ராமதாஸ்

Featured Replies

பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக;

இனி பாமக எதிர்க்கட்சி ராமதாஸ் அதிரடி

அக்டோபர் 30, 2006

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது. இனிமேல் பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவற்றை திமுக போட்டி வேட்பாளர்கள் கைப்பற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதனால் பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டார்.

இந்த அறிக்கைக்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராமதாஸுக்கு விளக்கம் அளித்து விரிவாக கூறியிருந்தார். இந்த அறிக்கையில் திமுகவினர் மட்டும் துரோகம் செய்யவில்லை, பாமகவினரும் சில இடங்களில் கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார். அப்போது முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து ராமதாஸ் பேட்டி அளித்தார்.

ராமதாஸ் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் பாமக வேட்பாளர்கள் பல இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை திமுகவினர் கடைப்பிடிக்கவே இல்லை.

இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது?

இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல், தவறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார் கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.

தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை திமுக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் மதிக்கவே இல்லை. எங்களை இழிவுபடுத்தி விட்டனர்.

பாமகவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிடப் போவதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட கருணாநிதி, அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல 6 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை பாமகவுக்கு தருவதாக கூறியிருந்தார் கருணாநிதி. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த உடன்பாட்டையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு அதிருப்தி உள்ளது உண்மைதான். ஆனால் திமுக ஆட்சிக்கு எங்களால் எந்தப் பாதக¬ம் ஏற்படாது. இறுதி வரை திமுக ஆட்சிக்கு ஆதரவு தருவோம்.

பாமக இனிமேல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும். இப்போது உள்ள அதிமுகவை பொறுப்பான எதிர்க்கட்சி என்று கூற முடியாது. பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இனிமேல் செயல்படும் என்றார் ராமதாஸ்.

திமுக மீதும் முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசியுள்ள ராமதாஸ், இனிமேல் பாமக எதிர்க்கட்சியாக செயல்படும் என்று ஆவேசமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவைப் போலவே அதிருப்தி அடைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுபோல முடிவுகளை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2006/10...30/ramdoss.html

  • தொடங்கியவர்

பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக;

இனி பாமக எதிர்க்கட்சி ராமதாஸ் அதிரடி

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக;

இனி பாமக எதிர்க்கட்சி ராமதாஸ் அதிரடி

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

  • தொடங்கியவர்

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

என்ன நடக்குது தமிழ் குடிதாங்கிக்கே துரோகம் செய்துவிட்டாரா

  • கருத்துக்கள உறவுகள்

ராம தாஸ் புலம்ப தொடங்கிட்டார் என்ன தான் கத்தினாலும் மத்தியில மகன் அமைச்சரா இருக்கும் வரைக்கும் இவரால ஒன்டும் செய்ய முடியா..மகன பொருத்த வரைக்கும் தான் 5 ஆண்டுகள் அமைச்சரா இருக்னும் இப்பொழுது எல்லம் மகனோட சொல்படி தானே நடக்கிறார்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் மதிப்புக்குரிய மருத்துவரே, கடந்த மாதத்தில் எங்கள் ஒரு சிலரின் கருத்துக்களில் திமுகவின் மாற்று முகத்தை விமர்சித்தோமே! இந்த துரோக நிகழ்வுகள் இன்று நேற்றல்லவே!

மேற்கோள்: உள்ளாட்சித் தேர்தலில் பமக உள்ளிட்ட தோழமை கட்சிகளுக்கு திமுக பச்சை துரோகம் செய்து விட்டது. கூட்டணி தர்மத்தை மீறி ஏராளமான தோழமைக் கட்சியினரை அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள் என்று டாக்டர் ராமதாஸ் பகிங்கரமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அதிகமுவில் ஜெயலலிதா, சசிகலாவைத் தவிர அக்கட்சியில் அனவருமே நல்லவர்கள். ஆனால் திமுகவில் கருணாநிதி, அன்பழகன் ஆகியோரை தவிர அனைவருமே மோசமானவர்கள் என்றும் அவர் ஆவேசமாககூறினார்.

நன்றி மாலைமலர் http://www.maalaisudar.com/3010/hed_news_1.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா...பல இடங்கள்ள பா.ம.கா வும் தி.மு.க க்கு தூரோகம் சென்று இருக்கே..இது தொடப்பாக தி.மு.க தலைவர் அறிக்கை விட்டு இருப்பது..தி.மு.க ஆட்சி எப்பொருது அரியனையை விட்டு இறங்கும் என்று பாத்துக் கொண்டு இருக்கின்ற சில பத்திரிகைகளுக்கு தெரிய வில்லையாக்கும் :evil: :evil:

பா.ம.க.,வால் தி.மு.க., தோற்ற இடங்கள்; பட்டியலிட்டார் முதல்வர் கருணாநிதி

சென்னை: ""கூட்டணிக்கு தி.மு.க., துரோகம் செய்வதாக இருந்தால் இத்தனை இடங்களில் பா.ம.க., வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை ராமதாஸ் எண்ணிப் பார்க்க வேண்டும்'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பா.ம.க.,வினர் செய்த துரோகங்களையும் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலடியாக முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க.,வினராலேயே தோற்கடிக்கப்பட்ட இடங்கள் என்று ஒரு பட்டியல் பா.ம.க., சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கான இடங்களில் பா.ம.க.,வுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன என்றும், அதில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவருக்கான தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். பா.ம.க., வேட்பாளர்களைத் தோற்கடிப்பது தான் தி.மு.க.,வின் நோக்கம் என்றால் கடலுõர், தர்மபுரி, விழுப்புரம், சேலம் ஆகிய நான்கு இடங்களிலும் அதாவது ஐந்தில் நான்கு மாவட்ட ஊராட்சித் தலைவர்களாக பா.ம.க.,வினர் தான் தி.மு.க., கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்தில் ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே பா.ம.க., சார்பில் வெற்றி பெற்றிருந்த போதிலும், 14 இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றிருந்த போதிலும், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி வேண்டுமென்று வலியுறுத்தியதன் பேரில் பா.ம.க.,வுக்கே அந்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே போட்டி தி.மு.க., வேட்பாளர் ஒருவர் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மீது தி.மு.க., நடவடிக்கை எடுக்க இருக்கிறது. தி.மு.க., தலைமையின் சார்பில் தேர்தல் தொடங்கிய நாளில் இருந்து கூட்டணி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படுமென கூறி வந்ததை அனைத்துக் கட்சியினரும் அறிவர். "கூட்டணிக்கு துரோகம் செய்து வெற்றி பெற்று பதவிக்கு வந்தாலும், அப்படி வந்த பதவி அற்ப ஆயுளில் முடிக்கப்பட்டு விடும் என்பதால் அதை அற்ப சந்தோசம் என்று சொல்லலாம்' என்றே நான் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி ஒவ்வொரு கட்சியிலும் இருப்பதைப் போல தி.மு.க.,விலும் உள்ள சிலர் தவறு செய்திருக்கலாம்.

அப்படி செயல்ப்பட்டவர்கள் மீதும், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகியோர் மீதும், ஒன்றிய செயலர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உட்பட 20 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து அவர்களை நீக்க நேற்றைக்கே முடிவெடுக்கப்பட்டது. முடிவுகள் முழுவதுமாக வருவதற்கு முன்பாகவே மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 20 முக்கியஸ்தர்கள் மீது தி.மு.க., நடவடிக்கை எடுத்திருப்பதில் இருந்தே, எந்த அளவுக்கு கூட்டணிக் கட்டுப்பாட்டை காப்பாற்ற கட்சித் தலைமை முன் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். கூட்டணி கட்சிகள் என்றல்ல, தி.மு.க., அதிகாரபூர்வமாக அறிவித்த இடங்களிலேயே தி.மு.க., போட்டி வேட்பாளர்கள் நின்று வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அதன் காரணமாக வேண்டுமென்றே தி.மு.க., தோற்கடித்துவிட்டது என்று கூற முடியுமா? நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்ட வேட்பாளரை எதிர்த்து ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ., ராமசாமி தன் மனைவியையே நிறுத்தி ஆதரவு தந்தார் என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சித் தலைவராக தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அதிகாரபூர்வ வேட்பாளர் ஆறுமுகம் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவரது தோல்விக்கு பா.ம.க.,வும் தான் காரணம் என்று கூறப்பட்டாலும் கூட ஏட்டிக்குப் போட்டியாக அவ்வாறு குற்றம்சாட்ட விரும்பவில்லை.

அதேபோல, காஞ்சிபுரம் ஒன்றிய தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் குமார் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அங்கே பா.ம.க., வேட்பாளராக ஸ்ரீதர் என்பவர் போட்டியிட முன்வந்து, அ.தி.மு.க., உறுப்பினர்களையும், பா.ம.க., உறுப்பினர்களையும் துõக்கிக் கொண்டே போய்விட்டனர். இதைப் பற்றி பா.ம.க.,வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஏ.கே.மூர்த்தியிடம் ஸ்டாலின் பேசிய பின்னரும் கூட அவர் சொல்லையும் கேட்காமல் ஸ்ரீதர் போட்டியிட்டு, அங்கே தேர்தல் தகராறில் முடிந்துள்ளது. இதற்கு பா.ம.க., மீதா பழி போட முடியும்? அதே காஞ்சியில் செவிலிமேடு பேரூராட்சித் தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட போதிலும், அங்கே பா.ம.க.,வைச் சேர்ந்த செல்வராஜ் எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார். எனவே ஒவ்வொரு கட்சியிலும் ஒரு மிகப் பெரிய தேர்தல் நடக்கும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற நேரிட்டுவிடும். திண்டிவனம் நகராட்சியில் உறுப்பினர் பதவிக்கு பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த பூபாலன் என்பவர் தனக்கு இடம் கொடுக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை தி.மு.க.,வில் இருந்து நீக்க இருந்த நிலையில் அவரை பா.ம.க., தங்கள் கட்சியிலே உறுப்பினராக்கிக் கொண்டு விட்டது. அந்தத் திண்டிவனம் நகராட்சித் தலைவர் பதவி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், பா.ம.க.,வையே தோற்கடித்த பூபாலனை சேர்த்துக் கொண்டு அவரைத் தான் தற்போது பா.ம.க., வேட்பாளராக நிறுத்தி, அவருக்கு தி.மு.க., உறுப்பினர்கள் எல்லாம் ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட திண்டிவனம் நகராட்சியை அவர்களுக்கு தர இயலாமல் போய் விட்டது.

ஒரு மிகப் பெரிய தேர்தலில், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஓரிருவர் தவறு செய்வதை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, உடனடியாக அறிக்கை மூலம் தி.மு.க.,வே தோற்கடித்து விட்டது என்பது போல செய்தி வெளியிட்டு, இரண்டு கட்சித் தொண்டர்களிடத்திலும் வெறுப்பை ஏற்படுத்தி விட முயல்வது நல்லதல்ல. தி.மு.க., கீழ் மட்டத்தில் நடந்த தவறுகளாலும், அதேபோல கூட்டணிக் கட்சிகளின் கீழ் மட்டங்களில் நடந்த தவறுகளாலும், ஒவ்வொரு கட்சிக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. தி.மு.க.,வை பொறுத்தவரை பா.ம.க.,வுக்கு உண்மையிலேயே துரோகம் செய்திருந்தால், ஊராட்சித் தலைவர் பதவிக்காக ஒதுக்கப்பட்ட ஐந்து இடங்களில் நான்கு இடங்களிலும், நகராட்சித் தலைவர் பதவிக்காக வழங்கப்பட்ட 14 இடங்களில் ஏழு இடங்களிலும், ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்காக வழங்கிய 47 இடங்களில் 31 இடங்களிலும், பேரூராட்சித் தலைவர்களுக்காக வழங்கப்பட்ட 36 இடங்களில் 19 இடங்களிலும் தி.மு.க., கூட்டணி பா.ம.க.,வை வெற்றி பெறச் செய்திருக்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை துணை மேயர் பதவியை தர தயாராக இருந்தோம்': சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவியை பா.ம.க.,வுக்கு வழங்க முன்வந்ததாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ""மாநகராட்சியில் துணை மேயர் பதவி பா.ம.க.,வுக்கு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சி சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. தி.மு.க., சார்பில் சென்னை மாநகராட்சி துணை மேயராக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சத்தியபாமாவின் பெயர் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த வேட்பாளரை திரும்பப் பெற்று அந்த இடத்தை பா.ம.க.,வுக்கு வழங்க தி.மு.க., தயாராக இருப்பதாகவும், ஆனால் தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்மணியை வேட்பாளராக அறிவித்துவிட்டு அவரை நீக்கினால் அவப் பெயர் ஏற்படும் என்பதால், பா.ம.க., சார்பில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும். அவ்வாறே பா.ம.க., சார்பில் 45வது வட்டத்தில் பட்டதாரியான சாந்த லட்சுமி இருக்கிறார் என்று தெரிவித்து, அவரை பா.ம.க., வேட்பாளராக நிறுத்தலாம் என்று தி.மு.க., சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Thanks:Dinamalar.........

ஆணவத்தின் வடிவமான ஜெயலலிதாவையும் அரசுக் கதிரையைக் குடும்பச் சொத்தாக்கி ஆட்டம் போடும் கருணாநிதியையும் புறக்கணித்து தன்மானம் மிக்க தமிழகத் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூன்றாவது அணியொன்றை அமைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. குறுகிய காலத்திலே மக்கள் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுவிட்ட விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் திருமாவளவன் போன்ற தமிழார்வலர்கள் எல்லாம் தமிழினத்தின் முன்னெற்றத்திற்காய் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

இந்தப் புதிய கூட்டணி திமுக, அதிமுக அணியிலிருந்து கொண்டு உள்ளுக்கள் புளுங்கிக் கொண்டிருக்கும் பலரையும் இணைத்துக் கொண்டு வீறுகொண்டு எழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

அர்ரா... அர்ரா... துவங்கிட்டாங்கப்பா... :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.