Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முதல்நாள் இந்தியாவை ஆளும் பாஜக வின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களில் எவரையும் பாஜக கட்சி ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, மகிந்த ராஜபக்ச நேபாளத்தில் நடந்த சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

அந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக் கூறியிருந்தார்.

இதுபோன்று வாழ்த்துக் கூறுவது பொதுவான மரபுதான்.

அந்த வாழ்த்து விருப்புடன் கூறப்பட்டதாகவும் இருக்கலாம். வெறுப்புடன் கூறப்பட்டதாகவும் இருக்கலாம். வாழ்த்துக் கூறுவது ஒரு மரபு. ஆனால் அப்போது மகிந்த ராஜபக்சவுக்கு எப்படி நரேந்திர மோடி வாழ்த்துக் கூற முடியும் என்று தமிழ்நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் போர்க்கொடி எழுப்பியிருந்தன.

நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியதற்காக இந்தியா மகிந்த ராஜபக்சவின் வெற்றியை விரும்பியதாக அர்த்தம் கொள்ள முடியாது. ஏனென்றால் மகிந்த ராஜபக்ச தனது 2வது பதவிக் காலத்தில் இந்தியாவுக்கு போக்கு காட்டுகின்ற ஒருவராகவே இருந்து வந்திருந்தார்.

சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கம் காரணமாக அவரால் இந்தியாவுடன் அதிகமான நெருக்கத்தைப் பேண முடியாமல் போனது. அது இருதரப்பு உறவுகளில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி இருந்தது.

எனினும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமரான பின்னர் அந்த இடைவெளியைக் குறைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட அந்த முயற்சியில் பெரும் பாயச்சல் ஏதும் நிகழ்ந்துள்ளதாகக் கருத முடியாது.

மகிந்த ராஜபக்ச அரசுடன் இனிப்பும் கசப்புமான உறவே நீடித்திருந்தது. என்று புதுடில்லியின் மூலோபாய ஆய்வாளரான நிதின் ஹோக்லி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் மகிந்த ராஜபக்சவுக்கு சார்பான நிலைப்பாட்டை இந்தியா எடுப்பதென்பது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று தான்.

ஆனாலும் மகிந்த ராஜபக்ச தரப்பில் இந்தியாவின் உதவியைப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று உறுதியாகக் கூறமுடியாது.

ஏனென்றால் தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமானவரான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவரான சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.

பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்திப்பதில் அப்படியென்ன முக்கியத்துவம் என்று கேள்வி எழுப்பப்படலாம்.

ஆனால் அந்தச் சந்திப்பே இலங்கை விவகாரம் குறித்து பேசுவதற்காகத் தான் இடம்பெற்றது.

சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் நேரத்தில் தமிழர்கள் சார்பாக அஜித் டோவலுடன் சந்தித்துப் பேசியிருப்பார் என்று எவராலும் எதிர்பார்க்க முடியாது.

அவர் யாரைச் சார்ந்திருக்கிறாரோ யார் பக்கம் நின்று பேசுகிறாரோ அவரது பிரதிநிதியாகவே சந்தித்திருக்க வேண்டும்.

எனினும் அது பற்றிய விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இத்தகைய பின்னணியில் தான் தேர்தலுக்கு முதல்நாள் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கூறி அறிக்கையை வெளியிட்டிருந்தார் பாஜக தலைவர் விஜய் ஜோலி.

இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொழும்பு வந்திருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுக்களையும் நடத்தியிருந்தார்.

ஒரு வாரத்திற்கு மேலாக கொழும்பில் தங்கியிருந்து இலங்கை நிலைவரத்தை மதிப்பிட்ட விஜய் ஜோலி தான், தேர்தலில் யாரையும் பாஜக ஆதரிக்கவில்லை என்பதை தனது அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்தினார். அது கிட்டத்தட்ட இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது போலத் தான் கருதவேண்டும்.

விஜய் ஜோலி இதனை மட்டும் தனது அறிக்கையில் வலியுறுத்தவில்லை.

அவர் குறிப்பிட்ட முக்கியமான விடயம் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்பதேயாகும்.

இதனை புதிதமாகப் பொறுப்பேற்கும் ஜனாதிபதிக்கு இந்தியா காட்டிய முதலாவது அழுத்த சமிக்ஞையாகவும் கருதலாம்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.

ஆனால் அதனைச் செயற்படுத்தவில்லை. நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும், 13வது திருத்தச் சட்டத்டதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியது.

எனினும் அதற்குரிய எந்த முனைப்புகளிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஈடுபட்டிருக்கவில்லை.

மீண்டும் மகிந்த ராஜபக்சவே பதவிக்கு வந்தாலும் இந்தியா இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் என்பதையே விஜய் ஜோலியின் கருத்து கோடிகாட்டியிருந்தது. 

அதேவேளை மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் இந்தியயாவுடன் நெருக்கத்தைப் பேண முனையும் அவருக்கும் இந்த விடயத்தில் இந்தியா அழுத்தங்களைக் கொடுக்கும் போலத் தெரிகிறது.

மகிந்த ராஜபக்ச தான் இந்தியாவுக்கு வாக்குக் கொடுத்தார் என்றும் எனவே புதிய ஜனாதிபதி மைத்திரிபால, அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இல்லை என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவை அவ்வாறு மடக்க முடியாது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில் காஷ்மீர் தொடக்கம் கன்னியாகுமரி வரை பாஜகவின் கொடியை நாட்ட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.

காஷ்மீரில் அண்மையில் நடந்த தேர்தலில் பாஜக 28 ஆசனங்களைப் பிடித்துக் கொண்டு விட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ பாஜக விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய ஆசனங்களைக் கூட வெல்லக் கூடிய நிலையில் இல்லை.

பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந் போன்ற ஒரு பிரமாண்டமான சக்தியை களமிறக்க வேண்டும்.

அல்லது தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.

ரஜினிகாந் பாஜகவின் கனவை நிறைவேற்ற தயாராக இல்லை.

அதேவேளை மீனவர்களின் பிரச்சினை மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆகியவற்றைக் கையில் எடுத்து தீர்வு கண்டால் அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரசாரமாக அமையும்.

இதனைக் குறிவைத்து நரேந்திர மோடி இயங்கலாம் என்று ஏற்கனவே சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அது சரியா தவறா என்று கூறமுடியாவிடினும் அதற்கான வாய்ப்புகளை முற்றாக நிராகரிக்க முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே நிலையான அமைதி உருவாகும் என்ற விடயத்தில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்பதை விஜய் ஜோலியின் அறிக்கை மீளவும் நிரூபித்துள்ளது.

ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதனையே வலியுறுத்தியிருந்தார்.

இந்தியா தொடர்ந்தும் அதனை வலியுறுத்தி வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக அதிலிருந்து நழுவ முடியாத நிலை ஏற்படும். அதுவும் அவரது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது தமிழர்களும், முஸ்லிம்களும் தான் என்பதை அவரால் இலகுவாக மறந்துவிட முடியாது.

ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்காது போனாலும் கூட, இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் தனது செல்வாக்கை நிரூபித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கவே செய்தது.

இப்போது புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில் அதனூடாக இந்த விவகாரத்தை அணுகுவது இந்தியாவுக்கு சற்று சுலபமானதாக இருக்கலாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கை வரும் திட்டத்தைக் கொண்டிருக்கிறார்.

அவரது வருகையுடன் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா புதிய நகர்வுகளில் இறங்கும் வாயப்புகள் தென்படுகின்றன.

அது எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சுபத்ரா

tamilwin.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.