Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gayantha-200-news.jpg

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அச்சுறுத்தல் நிலவியதால்,வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களை மீள தாய் நாட்டுக்கு வருமாறு புதிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க அழைப்பு விடுத்தார்.

   

புதிய ஊடகத்துறை அமைச்சரான கயந்த கருணாதிலக்க நேற்று பொல்ஹேன்கொடயிலுள்ள ஊடக அமைச்சில் தம் பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் அமைச்சரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்று உரையாற்றிய அமைச்சர்,

எந்த உலக நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அங்கு அரசாங்கங்களில் நான்காவது தூணாக திகழ்வது ஊடகத்துறையே. நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு, நீதிமன்றம் என அதைத் தொடர்ந்து ஊடகமே உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன போன்ற சிறந்த தலைவர் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகத்துறைக்கு அமைச்சரவை அமைச்சராக நம்பிக்கையுடன் என்னை நியமித்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.

ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சியின் ஊடகப் பேச்சாளராக நான் பணியாற்றியுள்ளேன். ஒரே கட்சியில் நீண்ட காலமாக இது போன்ற பொறுப்பொன்றை வகித்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை நான் பெற்றுக் கொண்டுள்ளேன். அதேபோன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பல சவால்களுக்கும் மத்தியில் கட்சியின் நிலைப்பாட்டைக் கட்டிக் காத்து செயற்பட்டுள்ளேன்.

நான் எப்போதுமே ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் தோழமையுடன் செயற்பட்டு வருபவன். அதற்கிணங்க இப்போது ஊடக அமைச்சராகவும் அதற்கு மேலான தோழமையுடனும் நட்புறவுடனும் என்னால் செயற்பட முடியுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஒரு வகையில் இது கஷ்டமான சவால். இலகுவான விடயமல்ல. அதனை நன்கு உணர்ந்து கொண்டுதான் நான் இந்தப் பதவியில் அமர்ந்துள்ளேன். ஊடகச் சுதந்திரம் பற்றி சிந்திக்கையில் இந்த நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற செயற்பாடுகள் நாடு என்ற ரீதியில் நாம் திருப்திப்படக் கூடியதல்ல.

தேச எல்லைகளைக் கடந்த ஊடகவியலாளர்களின் கூற்றுப்படி 180 உலக நாடுகளில் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதில் இலங்கை 165 வது இடத்திலேயே உள்ளது என்பதை நாம் வருத்தத்துடன் நோக்க வேண்டியுள்ளது. நாம் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்கு வலியுறுத்தியதெல்லாம் ஊடக சுதந்திரத்தையே. இதனால் ஊடக சுதந்திரத்தை நாட்டில் நிலை நாட்டும் பொறுப்பை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.

நூற்றுக்கு நூறு வீதம் இதனை செய்ய முடியாது போகலாம் உலகில் முழுமையான ஜனநாயகத்தைக் கொண்டுள்ள நாடுகளிலும் இதை எதிர்பார்க்க முடியாது. எனினும் எமது நாட்டில் அதனை நாம் உச்சளவில் நிறைவேற்ற முயற்சிப்போம். ஊடகவியலாளர்களின் பூரண ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அதனை எம்மால் மேற்கொள்ள முடியும். எதிர்காலத்தில் அதனைச் செய்வதற்கு நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் எமது நாட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாமல் இருந்தது. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் காணாமற் போயும் உள்ள சம்பவங்கள் பாரியளவில் உள்ளன. ஊடகவியலாளர்களின் கை, கால்கள் முறிக்கப்பட்டன. அவர்களின் தலை மயிர் வெட்டப்பட்டது. பல்வேறு அச்சுறுத்தல்களுக்குப் பயந்து எமது நாட்டிலிருந்த சிரேஷ்ட திறமையான ஊடகவியலாளர்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டைத் துறந்திருந்தனர். இதுவே நிலைமை.

நான் எதிர்க்கட்சி எம்.பி. என்ற வகையில் வெளிநாடுகளுக்குச் செல்கின்ற போது அவர்களைச் சந்திக்கத் தவறுவதில்லை. அவர்களின் வேதனையான அனுபவங்களைக் கேட்கும் போது, நாம் இத்தகையதொரு நாட்டிலா வாழ்கிறோம் என்று அதிசயப்பட முடிந்தது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் என நினைத்து நாட்டை விட்டுச் சென்றஅனைத்து ஊடகவியலாளர்களும் திருப்பி வர முடியும். நீங்கள் இங்கு சுதந்திரமாக செயற்பட முடியும். நீங்கள் அனைவரும் மீள தாய் நாடு திரும்பி உங்கள் திறமைகளை நாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும் என நான் இச்சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.

இந்த நாட்டில் குறிப்பாக அரச ஊடகங்களை இன்றுள்ள நிலைமை யிலிருந்து மீட்பது முக்கியமாகும். இதனை ஒரு சவாலாக ஏற்று செயற்பட வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் அரச ஊடகத்துறை அரசாங்கத்தின் ஊது குழலாக மாறியிருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், லேக்ஹவுஸ் நிறுவனம், ரூபவாஹினி, ஐ.ரி.என். போன்ற நிறுவனங்கள் மிக மோசமான நிலையிலேயே செயற்பட்டன. நேற்றும் கூட ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவர் என்னைச் சந்தித்த போது இது பற்றி கலந்துரையாடினேன். தவறான முகாமைத்துவங்களை சரி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=124770&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.