Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம் காணப்போகும் படைக் கட்டமைப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்­பட்ட தோல்வி, இலங்­கையில் ஒட்டு மொத்த நிர்­வாக கட்­ட­மைப்­பு­க­ளை­யுமே, மாற்­றி­ய­மைக்கும் நிலைக்குத் தள்­ளி­யுள்­ளது.

காரணம், ஒன்­பது ஆண்­டு­க­ளாக, ஆட்சி செலுத்­திய மஹிந்த ராஜபக்ச தனது செல்­வாக்கை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக எல்லாக் கட்­ட­மைப்­பு­க­ளி­லுமே தனக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளையும், விசு­வா­ச­மா­ன­வர்­க­ளையும் நிய­மித்­தி­ருந்தார்.

பாது­காப்புக் கட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் எதிர்க்கேள்­விக்கு இட­மற்ற வகையில் அது ராஜபக்ச மய­மாக்­கப்­பட்­டது. 2010ம் ஆண்டு நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவின் தோல்­வியை அடுத்து, அவ­ருக்கு நெருக்­க­மாக இருந்த மூத்த இரா­ணுவ அதி­கா­ரிகள் அனை­வரும் பதவி நீக்­கப்­பட்­டனர் அல்­லது பத­வியில் இருந்து விலக நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.

இதன் பின்னர் ராஜபக்ச குடும்­பத்­துக்கு விசு­வா­ச­மாகச் செயற்­படக் கூடிய அதி­கா­ரி­களே எல்லா மட்­டங்­க­ளிலும் முதன்மை பெற்­றனர். முக்­கிய பத­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டனர். பாது­காப்பு அமைச்சு அப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக்சவி­டமே இருந்­தாலும் அதனை கோத்­தபாய ராஜபக்சவே தனது முழுக்­கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்தார்.

பாது­காப்புக் கட்­ட­மைப்பில் தமக்கு சாத­மாகச் செயற்­படக் கூடிய அதி­கா­ரி­க­ளையே நிய­மித்து, தமது தீர்­மா­னங்கள் அனைத்தும் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார் கோத்­தபாய ராஜபக்ச.

ஆனால், என்­னதான், தனக்கு விசு­வா­ச­மா­ன­வர்­களை பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­க­ளுக்கு தலைமை தாங்க அவர் நிய­மித்­தி­ருந்­தாலும், கூட கடந்த 9ம் திகதி அதி­கா­லையில், அவர்­க­ளுக்கு உதவ பாது­காப்பு உயர்­மட்டம் முன்­வ­ர­வில்லை என்­பது அவர்­களின் துர­திர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். இதன் கார­ண­மாக, பத­வியில் இருந்து நீங்க வேண்­டிய கட்­டாய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருந்தார் மஹிந்த ராஜபக்ச.

அதை­ய­டுத்து ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்­றங்கள் நிச்­சயம் பாது­காப்புத் துறை­யிலும், மாற்­றங்கள் நிகழ்­வ­தற்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

புதிய அர­சாங்கம் உட­ன­டி­யாக அர­சியல் மற்றும் நிர்­வாகத் துறை­களில் மாற்­றங்­களைச் செய்து வரு­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் புதிய அர­சாங்கம் பாது­காப்­புத்­து­றையில் உட­ன­டி­யாக கை வைக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும், குறிப்­பி­டத்­தக்க சில மாற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

அதில் முத­லா­வதும் முக்­கி­ய­மா­ன­து­மான மாற்றம், பாது­காப்புச் செயலர் பத­விக்கு நிர்­வாக சேவை அதி­கா­ரி­யான பஸ்­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாகும்.

இது­வரை காலமும், இந்தப் பதவி ஜனா­தி­ப­திக்கு அடுத்த நிலையில் இருந்­த­வ­ரான கோத்­தபாய ராஜபக்சவினால் கையா­ளப்­பட்­டது. அதற்கு அவர் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யாக இருந்­தது மட்­டு­மன்றி, மஹிந்த ராஜபக்சவின் சகோ­த­ர­ரா­கவும் இருந்தே முக்­கிய காரணம்.

ஆனால், புதிய பாது­காப்புச் செயலர் அந்­த­ள­வுக்கு வலு­வா­ன­வ­ராக ஒரு­போதும் இருக்க முடி­யாது. அவர் ஒரு முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரியும் அல்ல. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சகோ­தரர் அல்­லது உற­வி­னரும் அல்ல.

அதே­வேளை, பாது­காப்பு அமைச்­ச­ராக சரத் பொன்­சேகா பொறுப்­பேற்­க­வுள்­ள­தாக முன்னர் ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­னரே, தன்னைப் பாது­காப்பு அமைச்­ச­ராக நிய­மிக்க வேண்டும் என்றும், பழை­ய­படி குடி­யு­ரிமை மற்றும் இரா­ணுவ பட்­டங்கள், விரு­துகள் மீள அளிக்­கப்­பட வேண்டும் என்றும், 'பீல்ட் மார்ஷல்' பட்டம் தரப்­பட வேண்டும் என்றும் நிபந்­தனை விதித்­தி­ருந்தார் சரத் பொன்­சேகா.

ஆனாலும், மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற பின்­னரும், பாது­காப்பு அமைச்சு சரத் பொன்­சே­கா­விடம் வழங்­கப்­ப­ட­வில்லை.

அதற்குக் காரணம், பாது­காப்பு அமைச்சு ஜனா­தி­ப­தி­யி­டமே இருக்க வேண்டும் என்­பது விதி­மு­றை­யாக உள்­ளது. அடுத்து சரத் பொன்­சேகா இப்­போது குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டுள்ள ஒருவர். அவ­ரது குடி­ய­ரிமை உள்­ளிட்ட பறிக்­கப்­பட்ட அனைத்து உரி­மைகள், சலு­கைகள், பதக்­கங்கள், பட்­டங்கள் அனைத்­தையும், மீள வழங்­கு­வ­தற்­கான சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

எனினும் அது இன்­னமும் வர்த்­த­மானி மூலம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. குடி­யு­ரிமை இல்­லாத ஒரு­வரை அமைச்­ச­ரா­கவோ பிரதி அமைச்­ச­ரா­கவோ நிய­மிக்க முடி­யாது. மூன்­றா­வது சரத் பொன்­சேகா ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அல்ல.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரைத் தான் அமைச்­ச­ராக நிய­மிக்­கலாம். இந்த மூன்று கார­ணங்­க­ளாலும் தான், சரத் பொன்­சேகா பாது­காப்பு அமைச்­சையோ பிரதிப் பாது­காப்பு அமைச்­சையோ பெற முடி­ய­வில்லை.

எனினும், அவர் பாது­காப்­புத்­து­றையில் முக்­கி­ய­மான முடி­வு­களை எடுக்கும் ஒரு­வ­ரா­கவே இருக்கப் போகிறார். அவ­ருக்கு ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு ஆலோ­சகர் பதவி அளிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அது சில­வே­ளை­களில், இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­விக்கு நிக­ரா­ன­தாக தர­மு­யர்த்­தப்­படும் வாய்ப்­பு­களும் உள்­ளன. அதன் ஊடாக பாது­காப்புக் கட்­ட­மைப்பில் சரத் பொன்­சேகா தனது அதி­கா­ரத்தை நிலை நிறுத்த வழி­யேற்­ப­டுத்­தப்­ப­டலாம்.

சரத் பொன்­சேகா பாது­காப்பு உயர்­மட்­டத்­துக்கு வரு­வ­தை­யிட்டே முன்னாள் ஜனா­ப­தி­பதி மஹிந்த ராஜபக்சவும் கோத்­தபாய ராஜபக்சவும் கவலை கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்­கி­டையே மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்­ட­வுடன், பத­வியில் இருந்து வில­கி­ய­வர்­களில் முக்­கி­ய­மா­னவர் அரச புல­னாய்வுச் சேவையின் தலை­வ­ரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ரண. அவர் கடந்த 9ம் திக­தியே தனது பதவி விலகல் கடி­தத்தை அனுப்பி விட்டார்.

மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ரண, கடந்த ஆட்­சியில் பாது­காப்பு அமைச்சில் கோத்­தபாய ராஜபக்சவுக்கு அடுத்த நிலையில் சக்­தி ­வாய்ந்­த­வ­ராக இருந்து வந்­தவர். விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ராக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மேற்­கொள்­ளப்­பட்ட புல­னாய்வு நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவரே பொறுப்­பாக இருந்­தவர்.

ஆழ ஊடு­ருவும் படை­ய­ணியை இரா­ணு­வத்தில் உரு­வாக்­கு­வதில் முக்­கிய பங்­காற்­றி­யவர். விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டிப்­பதில் இவர் மிகப் பெரி­ய­ள­வி­லான பங்­க­ளிப்பை செய்­தவர். ஆனால், போருக்குப் பிந்­திய இவ­ரது நட­வ­டிக்­கைகள், அவரை அர­சியல் சார்­பு­டை­ய­வ­ராக மாற்றி விட்­டது.

அதனால் தான், அவர் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­த­வுடன், பதவி விலக நேரிட்­டுள்­ளது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் புதிய அர­சாங்கம், முப்­படைத் தள­ப­திகள், கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி உள்­ளிட்­டோ­ரையும் வீட்­டுக்கு அனுப்பும் என்றே கரு­தப்­ப­டு­கி­றது.

மஹிந்த ராஜபக்சவினால் நிய­மிக்­கப்­பட்ட இவர்கள், பெரும்­பாலும் கோத்­தபாய ராஜபக்சவுக்கு நெருக்­க­மா­ன­வர்கள். இதனால், இவர்­களை உயர் படைத் தள­ப­தி­க­ளாக வைத்­தி­ருப்­ப­தற்கு புதிய அர­சாங்கம் விரும்­ப­வில்லை எனத் தெரி­கி­றது.

விமா­னப்­படைத் தள­ப­தியின் பத­விக்­காலம் இன்னும் சில நாட்­களில் முடி­வ­டை­ய­வுள்­ளது. அதன் பின்னர் புதிய தள­பதி நிய­மிக்­கப்­ப­டுவார். இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் தயா ரத்­நா­யக்க, தேர்­தலின் போது, ஜனா­தி­ப­திக்கு சார்­பாக பிர­சாரம் செய்­தவர் என்று குற்­றம்­சாட்­டப்­பட்­டவர்.

எனினும், கடந்த 9ம் திகதி அதி­கா­லையில், இரா­ணுவப் புரட்­சிக்கு ஒத்­து­ழைக்க அவர் மறுத்து விட்­டதால், அவர் தனது பெயரைக் கொஞ்சம் காப்­பாற்றிக் கொண்­டி­ருக்­கிறார். இதனை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர செய்­தி­யாளர் மாநாட்டில் வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருந்தார். இதனால் இரா­ணுவத் தள­பதி உட­ன­டி­யாக மாற்­றப்­ப­டு­வாரா என்­பதில் சந்­தேகம் நில­வு­கி­றது.

எனினும் கடற்­ப­டை­யிலும், விமா­னப்­ப­டை­யிலும் உயர் மட்­டத்தில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டலாம். அதை­விட, இரா­ணு­வத்தின் டிவிசன் மட்­டங்­க­ளி­லுள்ள தள­ப­தி­களும் மாற்­றப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

பொது­வா­கவே வருடத் தொடக்­கத்தில் இத்­த­கைய மாற்­றங்கள் அறி­விக்­கப்­ப­டு­வ­துண்டு. இந்த ஆண்டில் அத்­த­கைய மாற்­றங்கள் ஏதும் இன்­னமும் இடம்­பெ­ற­வில்லை. எனவே விரைவில் அத்­த­கைய மாற்ற அறி­விப்பு வெளி­வரக் கூடும்.

குறிப்­பாக கோத்­த­பாய ராஜபக்சவுக்கு நெருக்­க­மான கஜபா படைப்­பி­ரிவு அதி­கா­ரிகள் பலர் முக்­கி­யத்­து­வ­மற்ற பத­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­படக் கூடிய வாய்ப்­புகள் உள்­ளன.

இதற்­கி­டையே, மஹிந்த ராஜபக்சவின் தோல்­வியைத் தொடர்ந்து, சரத் பொன்­சே­கா­வுக்கு நெருக்­க­மான முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் நாடு திரும்பத் தொடங்­கி­யுள்­ளனர். தேர்தல் முடிந்த மூன்­றா­வது நாளே மேஜர் ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவும், பிரி­கே­டியர் கெப்­பிட்­டி­வ­லன்­னவும் நாடு திரும்­பினர்.

சரத் பொன்­சேகா 2010ம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்­றதும் இவர்கள் இரா­ணு­வத்தை விட்டு கட்­டா­ய­மாக ஓய்­வு­பெற வைக்­கப்­பட்­டனர்.

இவர்­க­ளுடன் சேர்த்து 14 மூத்த இரா­ணுவ அதி­கா­ரிகள் சேவையில் இருந்து விலக நேரிட்­டது. அவர்­களில் பலரும் வெளி­நா­டு­களில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­தனர். அவுஸ்­தி­ரே­லி­யாவில் தஞ்­ச­ம­டைந்த மேஜர் ஜெனரல் சமந்த சூரி­ய­பண்­டார அண்­மையில் மர­ண­மாகி விட்டார்.

இவ்­வாறு வெளி­நா­டு­களில் தஞ்­ச­ம­டைந்த சில படை அதி­கா­ரிகள் தான், சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு சாட்­சி­ய­ம­ளித்­துள்­ள­தா­கவும் கூறப்­பட்­டது. மேஜர் ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, புலி­க­ளுக்கு எதி­ரான போரில் சரத் பொன்­சே­கா­வுக்கு வல­து­க­ர­மாக விளங்­கி­யவர்.

விசேட நட­வ­டிக்கைப் பணிப்­பா­ள­ரா­கவும், திட்­ட­மிடல் பணிப்­பா­ள­ரா­கவும் இருந்­தவர் அவர். அவர் மீளத் திரும்­பி­யி­ருப்­பது, மீண்டும் இரா­ணுவ சேவையில் அவர் உள்­ளீர்க்­கப்­படும் வாய்ப்­பு­களை எதிர்­பார்த்தே என்று கரு­தப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும், புதிய அர­சாங்­கத்தில் பாது­காப்பு விவ­கா­ரங்­களில் முக்­கிய இடத்தை தான் வகிக்கப் போவ­தாக சரத் பொன்­சேகா வெளிப்­ப­டை­யா­கவே ரைம்ஸ் ஒவ் இந்­தி­யா­வுக்கு கூறி­யி­ருக்­கிறார்.

அவர் தனக்கு நம்­பிக்­கை­யா­ன­வர்­களைக் கொண்டு படைக் கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்த முனைவார் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இதனால், வரும் நாட்களில், பாதுகாப்புக் கட்டமைப்புகளில் மாற்றங்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத விடயமாகவே இருக்கும். 

சுபத்ரா

tamilwin.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.