Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தியை நீக்கவேண்டாம் வலிமேற்கு பிரதேச பொதுமக்கள் தமிழரசு கட்சிக்கு எச்சரிக்கை!

Featured Replies

வள்ளுவன் கூறியதை நினைவிலே கொள்ளுங்கள் திருமதி அனந்தி சசிதரன் அவர்களே!

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன நெஞ்சே தன்னைச் சுடும். (குறள் - 293)

சட்டம் என்பது வேறு, நீதி என்பது வேறு! இல்லையா? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். எமது பண்டைய தமிழ் மன்னர் ஆட்சியிலே பெரும்பாலும் இரண்டும் ஒன்றாக இருந்துள்ளன. அதனாலேயே கோவலன் கள்வனல்லனென்று கண்ட பாண்டிய மன்னன் உடனேயே உயிர் துறந்தான். சட்டம் பிழைத்ததென்றல்ல; நீதி பிழைத்ததென்றே! சட்டம் மனிதராலே ஆக்கப்படுவது; மாறக்கூடியது. நீதி இயற்கையானது; மாறாதது. ஆனால், பொதுவாக எமக்குச் சட்டமும் நீதியும் ஒன்றாகத் தெரியுங் குழப்ப நிலையே உளது. காரணம் நாம் நீதியை எதிர்பார்த்துச் சட்டத்தின் முன்னாலே செல்கின்றோம். நீதிமன்றம், நீதவான் அல்லது நீதிபதி என்று பிழையான சொற்களைப் பயன்படுத்தியும் வருகின்றோம். இதுவென்றல்ல ஆயினும் இது போன்றதொரு குழப்பம் உங்கள் நிலைபற்றிச் சிலருக்கு! 

தமிழரசுக் கட்சியின் சட்டங்களா அல்லது கொள்கைகளா பெரியவை? தமிழரசுக் கட்சியின் உட்கட்சி ஒழுக்காற்றுச் சட்டங்கள் எமக்குத் தேவையில்லை. 40000 ற்கு மேற்பட்ட எமது படைவீரர் எதற்காகத் தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்தாரோ 150000 தமிழர்கள் எதற்காகத் தமது இன்னுயிரைப் பறி கொடுத்தனரோ அவர்களுக்கு யாரும் துரோகஞ் செய்ய விடலாகாது.

எதற்காக நீங்கள் அரசியலெனும் ஆயுதத்தைக் கைகளிலே எடுத்தீர்களோ அதற்காகவே அதனை என்றும் கைகளிலே வைத்திருங்கள். தேவை வரும்போது சரியாகப் பயன்படுத்துங்கள். அதிகூடிய விருப்பு வாக்கினை உங்கள் கொள்கைக்காகவே மக்கள் இட்டனர். புயலுக்கு வேலியிட முனைவதும் பொங்கும் கடலுக்கு அணை கட்ட முனைவதும் வீணான முயற்சிகள். தொழிலுக்காக அரசியலைக் கைகளிலே எடுத்தவர்களுக்குக் கட்சி முக்கியம். மற்றவர் வாழ்வுக்காக அரசியலைக் கைகளிலே எடுத்தவர்களுக்குக் கொள்கை முக்கியம். எனவே வள்ளுவனை மனத்திருத்தி உங்கள் மனச்சாட்சி சொல்வதன்படி நடவுங்கள்! என்றும் தமிழர் மனதில் இருப்பீர்கள்.

 

முகப்புத்தகத்தில் இருந்து 

 
நன்றி ராஜா மனோகரன் அண்ணா 
  • Replies 53
  • Views 3.6k
  • Created
  • Last Reply

அனந்தி சசிதரன் பற்றி கூச்சல் இடுபவர்கள் தளபதி சூசை அண்ணையின் மனைவி பிள்ளைகள் எங்க என்று இன்னும் கேட்கவில்லை என்பதுதான் வியப்பு ..

ஒருவேளை அவரு அரசியலில் இறங்கி இருந்தால் தேடி இருப்பர் .இப்படி  பல  போராளிகளின் மனைவிகள் உள்ளார்கள் ஆனால் இவருக்கு  மட்டும் இவ்வளவு  சினிமாத்தனம்  கூடாது ,புலம்பெயர்த்து  உள்ள  சிலர் சாப்பிட்டு  சேமிக்க தேசியம் கதைக்கினம்  என்றால் ஊரில  இருக்கும்  இவருக்கு  தெரியாதே  இப்ப  மக்களுக்கு  என்ன  வேணும்  என்று .

சூசையின் மனைவியையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்களா ???? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உங்கட காமொடி தாங்க முடியல :lol:  :lol:  :lol:  :lol:  :D  :D  :D  :D  :icon_mrgreen:  :icon_mrgreen:


நான் எண்ணுகின்றேன் அனந்தி அக்கா உவர்களுடன் சண்டையிட்டு கொண்டு இருப்பதை விட வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று வென்று எல்லோர் முகத்திலும் கரியை பூசவேண்டும். அதுதான் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.