Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
 

 

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் ராஜ் குந்த்ரா மற்றும் குருநாத் மெய்யப்பனுக்கான தண்டனை குறித்து தீர்மானிக்க முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்படும்.

சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கை தனிநபர் சார்ந்ததல்ல அவர்கள் சார்ந்த அணியையும் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதான நடவடிக்கை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளது.

 

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றால், அவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பர் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. இது குறித்த 130 பக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் வாசித்து வருகின்றனர்.

 

 

சுமார் 18 மாத கால தொடர் விசாரணை அமர்வுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் பொதுத்தன்மையானது என்றும், சட்டத்திற்கு இணங்கியதே என்றும் கூறியுள்ளது.

மேலும், என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால், சூதாட்டத்தில் ஈடுபட்டோர்களை சீனிவாசன் காப்பாற்ற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கான நிரூபணம் இல்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உச்ச நீதிமன்றம் வாசித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

> பிப்ரவரி 2008-ல் விதிமுறை எண் 6.2.4 மீது திருத்தங்கள் கொண்டு வந்து பிசிசிஐ பதவி வகிப்பவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டின் வணிக நலன்களில் பங்கேற்க வழங்கியது ரத்து செய்யப்பட்டது.

 

> லாப நோக்கிலான முரண்பட்ட இரட்டை நலன்கள் விவகாரத்தில் சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் நற்சான்றிதழ் அளிக்கவில்லை.

 

> பிசிசிஐ, அல்லது ஐபிஎல் இதில் ஏதாவது ஒன்றை சீனிவாசன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 

> சீனிவாசன் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை.

 

> குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியிருக்கிறது. இவர்கள் இருவரும் அணியைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகளே.

 

> முத்கல் கமிட்டி தனது விசாரணையில் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தது. குந்த்ரா மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தது.

 

> முத்கல் கமிட்டியின் விசாரணையை அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை.

 

> பிசிசிஐ தலைவராகவும் ஐபிஎல் அணி உரிமையாளராகவும் இரட்டைப் பதவி வகித்ததன் மூலம் லாப நோக்கிலான இரட்டை நலன்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திவிட்டார் சீனிவாசன்.

 

> ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விசாரணையில் நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளை பிசிசிஐ கடைபிடிக்கவில்லை.

 

> எந்த ஒரு பிசிசிஐ அதிகாரியும் வணிக நலன்களை வைத்துக் கொள்ள முடியாது.

 

> வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றால், அவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பர் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

 

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிசிசிசை வழக்கறிஞர் மற்றும் சீனிவாசனின் வழக்கறிஞர், தவிர, பிஹார் கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் வாதங்களை கேட்டனர்.

 

குறிப்பாக, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநராக இருக்கும் சீனிவாசன், பிசிசிஐ தலைவராகவும், ஐபிஎல். அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் செயல்பட்டதில் முரண்பட்ட இரட்டை நலன்கள் இருப்பதாக எழுப்பப்பட்ட ஆட்சேபத்தில் உச்ச நீதிமன்றம் சீனிவாசனின் இத்தகைய நலன்களை கண்டித்திருந்தது.

 

அதிலும் குறிப்பாக, 2008ஆம் ஆண்டு பிசிசிஐ தனது விதிமுறைகளைத் திருத்தும் போது பிசிசிஐ-யில் பதவி வகிப்பவர்கள் ஐபிஎல் வணிக நலன்களிலும் ஈடுபட வழிவகை செய்தமை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதுகுறித்தும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.

சாம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்று ரத்து செய்யப்பட்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கு ரூ.13 கோடி அளிக்க ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்ததை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.

 

"அந்தத் தொகையை சென்னை சூப்பர் கிங்ஸ் திருப்பி அளித்துவிட்டது என்பது முரண்பட்ட லாபநோக்கிலான இரட்டை நலன் உள்ளது என்பதை மறுதலிக்காது” என்று உச்ச நீதிமன்றம் கண்டித்தது கவனிக்கத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-சூதாட்ட-வழக்கில்-குருநாத்-மெய்யப்பன்-குற்றவாளி-சீனிவாசன்-குற்றமற்றவர்-உச்ச-நீதிமன்றம்-தீர்ப்பு/article681158

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் கதி என்னாகும்?.. 6 மாதத்தில் தெரியும்!
 

 

டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய சட்ட திட்டங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 3 நபர் குழுவின் பரிந்துரை அறிக்கைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கதி குறித்து முடிவு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீ்ம் கோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்புள்ளது, அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் கதி என்னாகும்?.. 6 மாதத்தில் தெரியும்!

 

இதனால் இந்த இரண்டு அணிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார் என்றும் சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இந்த இரு அணிகளுக்கும் தடை வரலாம் என்று தெரிகிறது. இருப்பினும் இன்றைய தீர்ப்பில் இந்த அணிகள் குறித்து முக்கிய உத்தரவை நீதிபதிகள் பிறப்பிக்கவில்லை.

 

மாறாக பிசிசிஐ சட்ட திட்டங்களை ஆய்வு செய்ய 3 நபர் கமிட்டியை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த கமிட்டி தனது பரிந்துரை அறிக்கையை 6 மாதத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் நிலை குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவெடுக்கவுள்ளது.

 

http://tamil.oneindia.com/news/india/the-fate-csk-rr-be-decided-after-3-member-committiee-s-report-219438.html

  • தொடங்கியவர்

பிசிசிஐ விதிகளை "பட்டி டிங்கரிங்" பார்க்க 3 நபர் குழு அமைப்பு!

 

டெல்லி: ஓட்டை உடைசலான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளையும், சட்டத் திருத்தங்களையும் மறு ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக நிலை குலைய வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தற்போது உள்ள பிசிசிஐ சட்ட விதிகள் பெரும்பாலும், சட்டத்தின் பிடியிலிருந்தும், அரசின் பிடியிலிருந்தும், ஆர்டிஐ வரம்புக்குள் சிக்காத வகையிலும் மிகவும் சுயநலனுடன் கூடியதாக, மக்கள் விரோத விதிகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிசிசிஐ விதிகளை ஆனால் அரசுக்கும், சட்டத்திற்கும், மக்களுக்கும் கட்டுப்பட்டது கிரிக்கெட் வாரியம். அது சட்ட வரம்புக்குள் வராதது அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக இன்று கூறி விட்டது. மேலும் வாரியத்தின் அத்தனை விதிகள், சட்ட திட்டங்கள், திருத்தங்கள மறு ஆய்வு செய்து பரிந்துரை அளிக்குமாறு 3 நபர் கமிட்டியை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தக் கமிட்டியின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பான், ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோரை பெஞ்ச் அறிவித்துள்ளது.

 

இந்தக் கமிட்டி இன்றிலிருந்து 6 மாதத்திற்குள் ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டிடம் பரிந்துரைகளை அளிக்கும். வாரியத்தின் சட்டவிதிகள், தேவையில்லாதது, சட்டவிரோதமானது என்று எது இருந்தாலும் அதுகுறித்து மறு ஆய்வு செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை நீதிபதிகள் பிறப்பிக்கும்போது பிசிசிஐ ஒரு சொசைட்டி என்று அதன் வக்கீல்கள் சார்பில் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், சொசைட்டியாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று கூறி விட்டனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-forms-3-member-committee-review-bcci-rules-regulations-219437.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.