Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலத்தடி நீரை மாசுபடுத்தும் வழக்கு சுன்னாகம் நொதர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

2ஆம் இணைப்பு-

2ஆம் இணைப்பு- நிலத்தடி நீரை மாசுபடுத்தும் வழக்கு சுன்னாகம் நொதர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு

சுன்னாகத்திலிருந்து இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை விநியோகித்து வந்த நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக அதனை மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிகப்பட்ட மக்கள் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன்; சுதந்திர ஆணைக்குழுவினை அமைத்து அதனூடாக தகுதி வாய்ந்த நிறுவனங்களின் உதவியுடன் விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைகளை விரைந்து மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை 2009 - 2010 ஆம் ஆண்டுகளில் குறித்த பிரதேசத்தில் கழிவு எண்ணை ஆபத்து காணப்படுகின்ற போதும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அவர் அத்துடன் கழிவு எண்ணெய் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கு எந்தவிதமான விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக பார்வையிட்டு அங்கே எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டு அது தொடர்பான விபரங்களை உடனடியாக மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு தெல்லிப்பழை, உடுவில் மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும அத்துடன் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு மருத்துவ ரீதியிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தடி நீரை மாசுபடுத்தும் வழக்கு சுன்னாகம் நொதர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு:-

இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

நொதர்ன் பவர் நிறுவனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115968/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.