Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிஷாந்த ரணதுங்க, மஹிந்தானந்த எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தனர்: சங்கா குற்றச்சாட்டு

Featured Replies

நிஷாந்த ரணதுங்க, மஹிந்தானந்த எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தனர்: சங்கா குற்றச்சாட்டு
 

 

இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மறைமுகமாக செயற்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார காரசாரமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கட் செயற்பாட்டுப் பணிப்பாளர் கார்ல்டன் பேர்னாட்ஸ{க்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் கொண்டு குமார் சங்கக்கார அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவதற்காக தெரிவுக் குழுவினரால் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நீங்கள் (கார்ல்டன் பேர்னாட்ஸ்), இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மறைமுகமாக செயற்பட்டீர்கள்.
இதனால் நான் மன உளைச்சலுக்கு உள்ளானேன். பொதுமக்களிடம் என்னை இழிவாகக்காட்ட முயற்சி செய்தீர்கள். இது மிகவும் அநாகரிகமான செயலாகும். குறிப்பாக உங்களை போன்றவர்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவும் இல்லை.

 

மேலும் நிஷாந்த ரணதுங்க எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் விமர்சனங்களை செய்தார். ஊடகங்களில் கருத்து தெரிவித்தார். 

2013 சம்பியன்ஸ் லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபதாத் அணிக்கு நான் தலைவராக இருந்தேன். இதன்போது எனது தலைமையிலான உள்ளூர் அணியும் தெரிவானது. ஆனால் நிஷாந்த ரணதுங்க பணத்திற்காகவா? நாட்டிற்காகவா விளையாடுவது என தீர்மானிக்க வேண்டும் என என்னை சுட்டிக்காட்டி கூறியிருந்தார்.

இது என்னை இழிவுபடுத்தும் வகையில் அமைந்தது. நிஷாந்த ரணதுங்க இவ்வாறு எப்படி செயற்பட முடியும். இந்த விடயங்கள் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

http://www.virakesari.lk/articles/2015/01/28/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

  • தொடங்கியவர்

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயற்பட்டதாக சங்கா குற்றச்சாட்டு
 

 

 

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சூட்சுமமாக முயற்சி எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.


கடும் வார்த்தைப் பிரயோகங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள அக் கடிதத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் நிஷான்த ரணதுங்க, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் தன்னை மன உளைச்சலுக்குள்ளாக்கியதாகவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

சம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவதற்கு தனக்கு விடுகை வழங்குவதற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவாளர்களின் கடிதம் தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் வகையிலும் அமைந்திருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கிரிக்கெட் செயற்பாட்டுப் பணிப்பாளர் கார்ல்டன் பேர்னாடஸுக்கு சங்கக்கார அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


"நீங்களும் நிஷான்த ரணதுங்க மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட அனைவரும் வேண்டுமென்றே எனக்கு மனஉளைச்சலலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டீர்கள். அத்துடன் மிகவும் வெட்கக்கேடான வகையிலும் தவறான வகையிலும் பொதுமக்கள் மத்தியில் எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்தீர்கள். இது கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர்களைப் போன்றவர்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றல்ல" என 21ஆம் திகதியிட்டு அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலில் சங்கக்கார குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
"இந்த விடயம் தொடர்பில் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் விளக்கும் வகையில் செயலாளர் நிஷான்த ரணதுங்க எவ்வாறு ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்களை வெளியிட்டார்?

""எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றும் பொது இடத்திலும் செயலாளர் ஏன் செயற்பாட்டார்? அதுமட்டுமல்லாமல் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக எவ்வித கேள்வியும் எழாதவேளையில் பணத்திற்கும் நாட்டிற்கும் இடையில் நான் ஒன்றைத் தீர்மானிக்கவேண்டும் என ஒழுக்கக் குறைவாக என் மீது அளுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் அவர் ஏன் செயற்பட்டார்? என சங்கக்கார தனது மின்னஞ்சலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

"இந்த விடயத்தில் கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் நிஷான்த ரணதுங்க, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரது நடவடிக்கைகள் இழிவானதும் பக்கசார்பானதும் வெட்கத்துக்குரியதுமாகும்|" என பேர்னாடஸுக்கு 2015 ஜனவரி 10 ஆம் திகதி அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலில் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.


2013 சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகளின்போது தான் அணித் தலைவராக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபதாத்துக்குப் பதிலாக இலங்கை வாணிப அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழு;நிலை ஏற்பட்டமை தொடர்பான சம்பவத்தையே சங்கக்கார தனது மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது அபிப்பிராயங்களை வெளியிடும்வகையில் பொதுமக்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொடுத்ததால் சங்கக்கார அசௌகரியத்திற்குள்ளாகியிருந்தார்.
அணித் தலைவர் பதவியை வகித்த காலத்தில் ஸ்ரீலங்கா  கிரிக்கெட்  நிறுவனத்துடன் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்ததால் 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் அணித் தலைவர் பதவியை குமார் சங்கக்கார துறந்தமை குறிப்பிடத்தக்கது.


அணித் தலைவர் பதவியைத் துறந்த சில மாதங்களில் லோர்ட்ஸில் அவர் ஆற்றிய கௌட்றி சொற்பொழிவு, பலரது புகழாரத்தை வென்றிருந்தது. ஆனால் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரோ இந்தப் பேருரை குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கூறியிருந்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் குழாமில் இடம்பெறும் குமார் சங்க்கக்கார, நியூஸிலாந்துக்கு எதிராக ஏழு போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாமிலும் இடம்பெறுகின்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8669#sthash.E7ZqO6eU.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.