Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் அதன் வல்லரசுக் கனவு வேல் தர்மா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில்
அதன் வல்லரசுக் கனவு பெரும் பங்கு வகிக்
கின்றது. இந்த வல்லரசுக் கனவிற்கு சீனா
தடையாக இருப்பதை மாற்றி அமைக்க இந்தியா
தனது வெளிநாட்டுக் கொள்கையிலும் அதன்
வர்த்தகத்திலும் பெரும் விட்டுக் கொடுப்புக்
களைச் செய்து கொண்டிருக்கின்றது. இதனால்
தான் இந்தியா ஜப்பானிய, சீன மற்றும் அமெரிக்க
அரசுத் தலைவர்களை ஒன்றன் பின் ஒன்றாக
இந்தியாவிற்கு வரவேற்று உபசரித்தது.
 கவர்ச்சிகரமான இந்தியா கவர்ச்சிகரமான இந்தியா
உலகின் இரண்டாவது பெரிய மக்கள்
தொகை, மூன்றாவது பெரிய பொருளாதாரம்,
உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொரு
ளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர
வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக்
கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு உலகி
லேயே மிக இளமையான சராசரி மக்கள்
தொகைக்கட்டமைப்பு ஆகியன உலக
அரங்கில் இந்தியாவின் கவர்ச்சிகரமான அம்
சங்களாகும். இந்தியாவின் இந்த அம்சங்கள் பல
நாடுகளை இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து
இந்தியாவுடனான வர்த்தகங்களை விருத்தி
செய்ய விரும்புகின்றன.
 
 
 அமெரிக்க இந்திய முறுகல் ஒரு அமெரிக்க இந்திய முறுகல் ஒரு
தொடர்கதை.
ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் ஐக்கிய
இராச்சியத்துடன் போராடித் தமது சுதந்திரத்
தைப் பெற்றுக் கொண்ட நாடுகள். இப்படிப்பட்ட
ஒற்றுமையுடன் உருவான இந்த இரு நாடுக
ளுக்கும் இடையில் ஒரு சீரான உறவு இருத
தில்லை. பாக்கிஸ்தானை இரசியா அல்லது
இரண்டும் இணைந்து ஆக்கிரமிக்கலாம் என்ற
அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது.
இதனால் 1954-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானிற்கு
பெரும் படைக்கலன்களை ஐக்கிய அமெரிக்கா
உதவியாக வழங்கியது. இவை கஷ்மீரில்
இந்தியாவிற்கு எதிராகப் அப் படைக்கலன்கள்
பாவிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்
துடன் வழங்குவதாக அமெரிக்கா சொன்னது.
ஆனால் அதை அப்போதைய இந்தியத்
தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்றுக்
கொள்ளவில்லை. இது இந்திய அமெரிக்க
உறவில் முறுகலை உருவாக்கியது. பின்னர்
சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தமது
அணிகளில் இந்தியாவை இணைக்க பெரு
முயற்சி எடுத்தன. ஆனால் நேரு இந்தோனேசியா,
எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டுச்
சேரா நாடுகள் அமைப்பை 1961-இல் உரு
வாகினார். இந்த அமைப்பு சோவியத் ஒன்றியத்
துடன் நட்புறவை வளர்த்தமை அமெரிக்க இந்திய
உறவைப் பாதித்தது. அமெரிக்க இந்திய உறவு
சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று
பாதுகாத்துக் கொள்ளும் உடனபடிக்கையை
ரிச்சட் நிக்சன் அதிபராக இருந்த போது மோச
மடைந்தது. இந்த உடன்படிக்கைக்குப் பதிலடி
யாக இந்தியாவும் சோவியத் ஒன்றியமும்
பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்து
கொண்டன. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்
கும் இடையில் உறவு மிக மோசமான நிலையை
அடைந்தது பங்களாதேசப் போரின் போதே.
அப்போது இந்தியா பங்களாதேசத்தைப் பிரிப்
பதைத் தடுக்க சீனப் படைகளை இந்திய எல்
லையை நோக்கி நகர்த்தும் படி சீனாவை
அமெரிக்கா வலியுறுத்தியது. அப்போது அமை
தியான எμச்சியை தனது கொள்கையாகக்
கொண்ட சீனா இந்திரா காந்தியின் உறுதிப்
பாட்டை உணர்ந்து கொண்டு அமெரிக்காவின்
வேண்டுதலை நிராகரித்து விட்டது. பின்னர்
அமெரிக்க இந்திய உறவு மன்மோஹன் சிங் -
சோனியா காந்தியின் ஆட்சியில் சீரமைக்கப்பட்டது.
 இந்திய சீன உறவும் பஞ்சாகிப் போன இந்திய சீன உறவும் பஞ்சாகிப் போன
பஞ்சசீலக் கொள்கையும் பஞ்சசீலக் கொள்கையும்
இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால்
நேருவினது பொருளாதாரக் கொள்கையில்
இந்திய முதலாளிகளை மேற்கு நாட்டு முதலா
ளிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது
ஒரு முன்னணி அம்சமாகும். இதை மனதில்
கொண்ட நேரு அமெரிக்காவிற்கு 1949-இல் மேற்
கொண்ட பயணம் இருதரப்பினருக்கும் திருப்தி
கரமாக இருக்கவில்லை. சீனப் பொதுவுடமைப்
புரட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற
அமெரிக்காவின் வேண்டு கோளை நேரு ஏற்றுக்
கொள்ளவில்லை. செஞ்சீனாவை அங்கீகரித்த
முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. செஞ்
சீனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்
புரிமை வழங்க வேண்டும் என்பதையும் நேரு
வலியுறுத்தினார். 2014-ம் ஆண்டு இலண்டனில்
நடந்த நேரு நினைவுப் பேருரையில் எஸ் மேனன்
அவர்கள் நேரு சீனாவை உலக ஒμங்கில்
இணைப்பதன் மூலம் அதனிடம் இருந்து பொறுப்
பான நடத்தையைப் நம்பிக்கையுடன் எதிர்பார்க்
கலாம் என நேரு கருதியிருந்தார் என்றார்.
நேருவின் சீனா தொடர்பான கொள்கை இந்தி
யாவிலும் உலக அரங்கிலும் கண்டனங்களுக்கு
உள்ளானது. இருந்து நேரு சீனாவுடனும் பர்மா
வுடனும் பஞ்ச சீலக் கொள்கை அடிப்படையில்
உறவை வளர்க்க விரும்பினார். 1954-ம் ஆண்டு
உருவாக்கப்பட்ட பஞ்ச சீலக் கொள்கை:
 
1. ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை
யும் இறைமையையும் மற்ற நாடுகள்
மதித்தல்.
2. ஒரு நாட்டை மற்ற நாடுகள் ஆக்கிரமிக்
காதிருத்தல்
3. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மற்றைய
நாடுகள் தலையிடாதிருத்தல்.
4. சமத்துவமும் இருதரப்பிற்கும் நன்மைய
ளிக்கக் கூடிய ஒத்துழைப்பும்.
5. அமைதியாக ஒத்திருத்தல்.
6. ஆனால் 1962ம் ஆண்டு சீனா இந்தியா மீது
படையெடுத்தது.
 
 புதிய இந்திய அமெரிக்க உறவு - புதிய இந்திய அமெரிக்க உறவு -
காசேதான் கடவுளடா! காசேதான் கடவுளடா!
2016- ம் ஆண்டு உலகிலேயே மிக வேகமாக
வளரும் பொருளாதாரமாக இந்தியா அமையும்
எனப் பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு
கூறியுள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்
கும் இடையில் நடக்கும் நூறு பில்லியன் டொலர்
கள் பெறுமதியான வர்த்தகத்தை ஐநூறு பில்
லியன் டொலர்களாக உயர்த்த மோடியும் ஒபா
மாவும் ஒத்துக் கொண்டுள்ளனர். ஒபாமா இந்தி
யாவிற்கு நான்கு பில்லியன் டொலர்கள் கடன்
வழங்க உறுதியளித்தார். ஒபாமாவைப் பொறுத்த
வரை உலகிலேயே மூன்றாவது பெரிய அளவில்
சூழல் அசுத்தம் செய்யும் இந்தியாவை சூழல்
பாதுகாப்பு தொடர்பாக உடன்பட வைத்தமை
பெரு வெற்றியாகும். இந்தியாவிற்கு அதிக
படைக்கலன் விற்கும் நாடாக இருந்த இரசி
யாவை இரண்டாம் இடத்திற்கு அமெரிக்கா
தள்ளி விட்டது. தற் போது அமெரிக்கா இந்தியா
விற்கு இரண்டு பில்லியன் டொலர்களுக்கு
படைக்கலன்களை ஏற்றுமதி செய்கின்றது.
இப்போது இரு நாடுகளும் தமது பாதுகாப்பு
ஒத்துழைப்பை மேலும் பத்து ஆண்டுகள்
நீடித்துள்ளன. 2006-ம் ஆண்டு இந்தியாவிற்குப்
பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர்
ஜோர்ஜ் புஷ் இந்தியத் தலைமை அமைச்சர்
சிங்குடன் இணைந்து இரு நாடுகளும் கேந்தி
ரோபாய பங்காண்மையை வளர்ப்பதாகக் கூட்ட
றிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து அமெரிக்கப்
பாரளமன்றத்தின் மக்களவையில் இந்தியாவு
டன் அணுவலு ஒத்துழைப்புச் சட்டம் நிறைவேற்
றப்பட்டது. அமெரிக்க இந்திய அணுவலு ஒத்
துழைப்பில் அமெரிக்கா இந்தியாவிற்கும் வழங்கும்
யுரேனியத்தை இந்தியா அணுகுண்டு உற்பத்
திக்குப் பாவிக்காமல் இருக்க அமெரிக்கா
இந்தியாவில் அதன் பாவனையை கண்காணிக்
கும் உரிமை அமெரிக்காவிற்கு வழங்கப்பட
வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்
பாடாக இருந்தது. இது இந்தியாவின் உள்விவ
காரங்களில் அமெரிக்காவின் தலையீடு என
இந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பி இது இந்தியப்
பாராளமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கையை இந்திய இடது சாரிக்
கட்சிகள் வலியுறுத்தின. 2007-ம் ஆண்டு ஓகஸ்ட்
மாதம் அமெரிக்க இந்திய அணுவலு ஒப்பந்தம்
இறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்
கையை மன்மோகன் சிங் இந்தியப் பாராள
மன்றத்தில் வாசித்த போது இடதுசாரிக் கட்சிகள்
தேன்நிலவு முடிந்து விட்டது இப்போது திருமண
அறிவிப்பா எனக் கேள்வி எμப்பின. போபால்
நச்சு வாயுக் கசிவு போல் மீண்டும் நடக்காமல்
இருக்க உத்தரவாதம் இந்தியாவின் பலதரப்பி
னரிடமிருந்தும் எμந்தது. இதற்கு மாற்றீடாக
பராக் ஒபாமாவும் மோடியும் 122மில்லியன்
அமெரிக்க டொலர்களுக்கு ஒரு காப்பீட்டுத்
திட்டம் ஒன்றை உருவாக்க ஒத்துக் கொண்டனர்.
அத்துடன் யுரேனியத்தை கண்காணிக்கும் விவ
காரத்திலும் அமெரிக்கா விட்டுக் கொடுத்தது.
 பாக்கிஸ்தானுடன் அமெரிக்காவும் பாக்கிஸ்தானுடன் அமெரிக்காவும்
சீனாவும் வைக்கும் உறவு சீனாவும் வைக்கும் உறவு
ஒபாமா புதி டில்லியில் இருக்கும் போது
பாக்கிஸ்தானியப் படைத்தளபதி ரஹில் ஷரிஃப்
சீனாவிற்குப் பயணம் செய்தார். இந்திய
அமெரிக்க உறவிற்குப் போட்டியாக சீன பாக்கிஸ்
தானிய உறவு வளருமா என்பதும் ஒரு நியாய
மான கேள்வியே! இந்தியாவின் பொருளாதாரம்
1.25பில்லியன் டொலர் பெறுமதியானது.
பாக்கிஸ்தானின் பொருளாதாரம் 190மில்லியன்
டொலர்கள் மட்டுமே. பாக்கிஸ்தானின் ஆட்சி
யாளர்கள் இந்தியா ஆட்சியாளர்களிலும் மோச
மானவர்கள். இந்தியாவிலும் மிக மோசமான
ஊழல் பாக்கிஸ்தானில் தலைவிரித்தாடுகின்
றது. இரு நாடுகளிடமும் அணுக் குண்டுகள்
இருக்கின்றன என்பதைத் தவிர வேறு எத
வகையிலும் இந்தியாவிற்கு கிட்டவும் பாக்கிஸ்
தானால் நிற்க முடியாது. ஆப்கானிஸ்த்தானில்
அமெரிக்காவுடன் பல வகையிலும் கடந்த பல
ஆண்டுகளாக இரகசியமாகவும் பகிரங்கமாக
வும் ஒத்துழைத்த பாக்கிஸ்தானுடன் அமெரிக்கா
செய்ய முடியாத அணுவலு உற்பத்தி உடன்
பட்டை அமெரிக்கா இந்தியாவுடன் செய்வது
பாக்கிஸ்தானியர்களை கடும் அதிருப்திக்கு
உள்ளாக்கியுள்ளது. இந்தியாவை ஆப்கானிஸ்
தானுக்குள் அமெரிக்கா இμப்பதைப் பாக்கிஸ்
தான் விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் பராக்
ஒபாமா தனது பதவிக்காலத்தில் இரண்டு தட
வைகள் இந்தியாவிற்குப் பயணம் மேற் கொண்
டமை பாக்கிஸ்தானில் பல தரப்பினரையும்
எரிச்சல் பட வைத்துள்ளது. இதற்கு முன்னர்
டுவைற் ஐஸ்ன்ஹோவர், லிண்டன் ஜோன்சன்,
ரிச்சர்ட் நிக்சன் பில் கிளின்டன் ஜோர்ஜ் டப்ளியூ
புஷ் ஆகிய அமெரிக்க அதிபர்கள் பாக்கிஸ்
தானிற்குப் பயணம் மேற்கொண்டார்கள்.
 
பாகிஸ்தானில் மக்களால் தெரிவு செய்யப்
பட்டவர்கள் ஆட்சியில் இருக்கும் போது எந்த
ஓர் அமெரிக்க அதிபரும் பாகிஸ்தானிற்குப்
பயணம் செய்யவில்லை. சர்வாதிகார இராணுவ
அதிகாரிகள் பாகிஸ்தானை ஆட்சி செய்யும்
போது மட்டும் அமெரிக்க அதிபர்கள் பாகிஸ்
தானிற்குப் பயணம் மேற்கொண்டனர். பாகிஸ்
தானில் மக்களாட்சியில் அக்கறை கொள்வ
திலும் பார்க்க பாகிஸ்தானை பொதுவுடமை
வாதத்தின் விரிவாக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்
துவதில் அமெரிக்கா அதிக அக்கறை காட்டியது.
பனிப்போர் முடிந்த பின்னர் ஆப்கானிஸ்தானில்
உருவான இசுலாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான
போரில் பாகிஸ்தானை அமெரிக்காவிற்கு
அதிகம் தேவைப்பட்டது. இந்தியாவுடன் சீனா
தனது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்
புகின்றது. அது சீனாவிற்கு அவசியமா ஒன்றும்
கூட. அதே வேளை பாகிஸ்த்தானும் இந்தியா
வும் தமக்கிடையிலான வர்த்தகத்தைப் பெருக்
குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றன.
 நீண்ட தூரம் இருக்கு நீண்ட தூரம் இருக்கு
2015ம் ஆண்டின் சீனாவிற்கான முதல் அடி
யாக இலங்கையில் சீனாவிற்கு உகந்த ஆட்சி
யாளர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். இரண்
டாவது அடியாக இந்திய அமெரிக்க உறவு பராக்
ஒபாமாவின் பயணத்தால் விμமா என்ற எதிர்
பார்ப்பு சீனாவில் இருந்தது. அமெரிக்காவிற்கும்
இடையில் படைத்துறையில் ஒத்துழைப்பு மேம்
படுத்தப்பட்டாலும் காத்திரமான படைத்துறைக்
கூட்டமைப்பு உருவாகியதற்கான அறிகுறிகள்
ஏதும் இல்லை என்பதால் சீனா ஆறுதல் அடைந்
ததாக சீன ஊடகங்களில் வெளிவந்த கருத்துரை
கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனா இந்தி
யாவை ஒரு வல்லரசாக அனுமதிக்கும் என்று
சொல்லிவிட முடியாது. இந்தியா ஒரு வல்லர
சாக வருவதைத் தடுக்க சீனாவால் தனது
வீட்டோ அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை
யின் பாதுகாப்புச் சபையில் பாவிக்க முடியும். 
 
வேல் தர்மா
(ஒரு பேப்பருக்காக)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.