Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 கோடி ரூபா வலைகளை நாசமாக்கிய இந்தியப் படகுகள்

Featured Replies

7754_content_Mu-10.jpg377sd.jpg

 

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் குடாநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான வலைகளை முற்றாகச் சேதமாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

குடாநாட்டுக் கடற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் அத்துமீறல்கள் தொடர்பில் கடற்படையினர் கண்ணை மூடிக்கொண்டிருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை பகுதியில் கரையிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலையில் இந்திய இழுவைப் படகுகள் வந்து மீன்பிடித்துள்ளதுடன் குடாநாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 2 கோடி ரூபா மதிப்புள்ள வலைகளை அறுத்து அழித்துவிட்டுச் சென்றுள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.  

 

மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்வதைக் கண்டித்து இந்திய தூதுவராலயத்திற்கு முன்பாக எதிர்வரும் சில நாட்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அதற்கும் பதில் கிடைக்காவிட்டால் சட்டத்தை நாங்களே கையில் எடுத்துக்கொள்வோம் எனவும் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.

 

இது தொடர்பாக கடற்றொழிலாளர்கள் மேலும் குறிப்பிடுகையில்; நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை முனை, மூக்கம், கொட்டடி, தொண்டமானாறு,சக்கோட்டை, பொலிகண்டி ,தும்பளை கிழக்கு பகுதிகளில் கரையிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரம் வரையில் நுழைந்துள்ளனர்.  மேலும் மேற்படி பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் போட்டுவைத்திருந்த வலைகளையும் அறுத்து அழித்துள்ள நிலையில் இதனால் சுமார் 2 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

 

இந்திய இழுவைப் படகுகள் கடலில் நின்று கொண்டிருக்கும்போதே அந்தப் பகுதியில் இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகுகளும் நின்றிருந்தன. எனினும் அவர்கள் அந்தப் படகுகளை சோதனையிட்டு போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமான பொருட்கள் எவையேனும் உள்ளனவா என தேடியபோதும் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுங்கள் எனக் கூறவில்லை.

 

எங்கள் வலைகள் அறுக்கப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு கொடுத்தபோதும்  இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மேலிடத்திலிருந்து தமக்கு உத்தரவு எவையும் வழங்கப்படவில்லை  எனக்கூறியதுடன் தங்கள் படகுகளுக்கு அருகே நின்று இந்திய இழுவைப் படகுகள் தொழில் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

 

 இதன்போது எங்கள் வலைகள் அறுக்கப்பட்டதுடன் இந்திய இழுவைப் படகுகளை நோக்கி தாங்கள் கத்தியபோது தங்கள் படகுகளை இழுவைப் படகுகள் மோதவந்ததாகவும் தெரிவித்த யாழ். கடற்றொழிலாளர்கள் ஒரு படகு மீது இழுவைப் படகு மோதியதில் அந்தப் படகின் இயந்திரம் சேதமடைந்த நிலையில் அதனை இன்னொரு படகு மூலமாக இழுத்தே கரைக்குக் கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் வைத்திப்பிள்ளை இக்னேசியஸ் அருள்தாஸ் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்; ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்திய இழுவைப் படகுகள் எங்கள் கடற்பகுதிக்குள் நுழைவதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தன. ஆனால் தற்போது நாங்கள் கடற்படையிடம் முறைப்பாடு கொடுத்தாலும் கடற்றொழில் திணைக்களத்திடம் முறைப்பாடு கொடுங்கள் எனவும் தங்களுக்கு மேலிடத்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும் கடற்படையினர் கைவிரிக்கின்றனர்.

 

பார்க்கக்கூடியதாக இந்திய இழுவை படகுகள் கரையிலிருந்து 4 கிலோமீற்றர் தூரம் வரை வந்துள்ளன. எங்களுக்கு உடனடியாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 2 கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை முனை பகுதியில் மட்டும் 25 படகு உரிமையாளர்களுடைய வலைகள் அறுக்கப்பட்டும் காணாமல் போயுமுள்ள நிலையில் 75 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறான அழிவுகளை எம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது.

 

எனவே நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம், அடுத்துவரும் நாட்களில் யாழ்நகர் பகுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவது என.  அதன்போது எங்கள் நிலைப்பாட்டைக் கூறுவோம். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எங்கள் பகுதிக்குள் வரும் இந்திய இழுவைப் படகுகளை பிடிப்பதற்கு எங்களால் முடியும் . அதனைச் செய்வோம்.

 

எங்களை கைதுசெய்ய நினைத்தால் கைதுசெய்யட்டும் என்றார். இதேவேளை இது தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சுகிர்தன் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன் இந்திய துணைத் தூதுவர் தட்சண மூர்த்தியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பவத்தையும் இதனால் ஏற்பட்ட இழப்பு தொடர்பாகவும் முறைப்பாடு தெரிவித்தார்.  இதன்போது கடற்றொழிலாளர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மாகாண சபை உறுப்பினருக்கு உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

 

 

 http://thinakkural.lk/article.php?local/sokncbtod07182ef70e26a0b22118lohpn5da778eda3f48014d087cdkjyyy#sthash.n0db21pC.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இதையே சிங்கள மீனவர்கள் செய்திருக்க வேண்டும் யாழ் களத்தை இரண்டாக்கி இருப்பினம்.

இதையே சிங்கள மீனவர்கள் செய்திருக்க வேண்டும் யாழ்கள ஒட்டு குலுகல் கருத்து தெரிவிக்கமாட்டர்கள். 

Edited by VENDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.