Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளின் வாழ்க்கைக்காக மருமகன் வீட்டின் முன்பு தீக்குளித்த தாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

motherfire_sucide_001.jpg

விழுப்புரம் மாவட்டத்தில் மகளை சேர்த்து வைக்க மருமகன் வீட்டு முன்பு மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் கேசவராம் (28). மென்பொருள் பொறியாளரான இவருக்கும், சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அமுதராணி மகள் சிவரஞ்சனி (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

 

திருமணத்துக்கு பிறகு மனைவியை விழுப்புரத்தில் தனது வீட்டில் தங்கவைத்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

 

இதனால் அவருடைய தாய் அமுதராணி மனமுடைந்தார். திருமணமான சில மாதங்களிலேயே தனது மகள் வீட்டிற்கு வந்துவிட்டாளே என்ற கவலையுடன் இருந்த அவர், கேசவராம் குடும்பத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதற்காக இரண்டு லிட்டர் மண்ணெண்ணையும், வாங்கிக்கொண்டு கேசவராம் வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததை கவனிக்காமல், சத்தம்போட்ட அமுதராணி அவர்களை வெளியே வருமாறு அழைத்துள்ளார்.

 

ஆனால் யாரும் வரவில்லை. இதனால், அமுதராணி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார், இதில் காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 

இதுகுறித்து விழுப்புரம் நகர காவல்நிலைய பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

http://www.newindianews.com/view.php?224W04md204ymDpd4e2KAOldecb0CgA4edd0AKMCe2bcb7lOc3e4b1DmK2202cO40Qc3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.