Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடக்கிவிட நான் துடித்தேன்

முடங்கிவிட நீ துடிக்கிறாயே

முடங்கப் போகிறாயா?

முடக்கப் போகிறாயா?

முடிவு உன் கையில்

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

கையில் கிடைத்த

காதலியைக்

காணவில்லை

தேடிப்பார்க்கிறேன்..

திரும்பிப்பார்க்கிறேன்..

ஓடிஓடிப்பார்க்கிறேன்

ஓரிடத்திலும் இல்லை..

உள்ளே ஓர்குரல்..

அன்பே என்னையா தேடுகிறாய்

நான்தான் உன் இதயத்தில்

ஒளிந்து இருக்கிறேனே என்று..

இருந்தும் நான் இப்போதும்

தேடுகிறேன் என்

இதயத்தைக் காணவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காணவில்லை என்றால்

காதலியைத் தேடதே

கால் போன போக்கில் நடவாதே

காலம் தந்த மாற்றத்தை

உன்னால் தடுக்க முடியுமா?

முடியுமா என்று

கேட்டால் முடியாது...

முடியாத என்று

கேட்டிருந்தால்

முடிந்திருக்கும்..

என் பதிலைப்

பிழைக்கவைத்த

உங்கள் கேள்வி

வளர..வாழ்க..

அழகுத் தமிழை

வித்திடுக...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்திடுக தமிழுக்கென்றால்

வித்தகனா நான் சொல்

விகடம் புரிந்திடவே

விவேகம் நமக்கில்லை

நமக்கில்லை சரக்கென்று

வெடுக்கென்று கூறி

விலகிவிட விடுவேனா..

அறிவில் அடக்கமும்..

அனுபவத்தில் முதிர்வும்..

அன்பில் ஆகாயமாயம்..

என்னைக் கவர்ந்ததால்..

நான் விடுவதாய் இல்லை

அண்ணா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணனாகவும் அன்னையாகவும்

அரவனைத்திட தம்பியாகி - நீ

அண்ணன் சொல் கேட்டிடடா

வாழ்க்கையை உயர்த்திடு

அண்ணன் மனம் ஆற

ஆற ஆறக் கீறும்

மானிடத்தின் நடுவே

மனிதம் மரிக்காமல்..

சூரியனாய் ஒளிவீசும்..

சுந்தர உள்ளங்கள்

வாழிய வாழியவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழியவே வாழியவே

உன் எண்ணங்கள் வாழியவே

உன் திறமைகள் வளர்ந்திட

உன்னை உறவுகள் வாழ்த்த

உன்னை வந்தடையும் உன் உறவு

உறவு வரும்

ஊர்வரும்...என்

ஊர்வலம்....

ஊர்வீதி ஊர்ந்து செல்ல

ஊரெல்லாம் என்னுடன்

சேர்ந்து வந்த

என் தேவதை வருவாளா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருவாளா உன் தேவதை?

வருவாளே உன் தேவதை

நீ மனைவியாக்கிக் கொண்ட

உன் தேவதை

உன்னுடன் வருவாளே

காலம் முழுவதும்

காலம் முழுவதும்

நெய்தவன் நெய்கின்றான்..

உழுதவன் உழுகின்றான்..

அழுதவன் அழுகின்றான்..

இல்லாத கடவுள்

இருக்கின்றான் என்போரே..

இருந்தால் அவன்

கருணையாளனா..

காட்டுமிராண்டியா..

மதம் என்ற பேர்

மக்களுக்கு எதிரான போர்

தெளிவு பெறாமல்..

மயக்கத்தில் சுழலும்..

சமுதாயமே..அன்புதானே

தெய்வம்

அதை என்றுதான்

தெரிந்துகொள்வாய்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்து கொள்வாய் நீ

தெய்வத்தின் சித்தங்களை

தெரியமால் நீ ஏங்காதே

தெரிந்ததை செய்து முடி

தெரியாதவை தெக்கு நிற்கட்டுமே

நிற்கட்டுமே என்று

செருப்பைக் கழட்டி வைக்கலாம்..

மானிடரே

காலைக் கழட்டி வைக்கலாமா...

வைப்பான் மகிந்தா வைப்பான்..

செத்துபோக நாளாகி...

சொத்து சேர்க்கும் பித்தனவன்..

அவன் வைப்பான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைப்பான் மானிடனே உன்னை

பூவுலகில் மகிழ்ச்சியாக

பூ அவளை நீ மறந்து

புது பூ வை சூடிடவே

சூடிடவே தேடியவள்

வாங்கி வைத்த

பூமாலை மாலைக்குள்

வாடிவிடக்கூடுமென

யாரறிவார்..

விதி ஆடுகிற

நாடகத்தில்

வேதனைக்காட்சிகளோ

அப்பபா..

எக்கச்சக்கம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எக்கச்சக்கம் வேதனைகள் வந்தாலும்

சோதனைகள் வந்தாலும்

எதிர் கொண்டிட வேண்டும்

வேதனைக் காட்சிகளை

வேண்டியாரும் கேட்பதில்லை

வீட்டினுள் தொலைத்து விட்டு

வீதியில் யாரை தேடிகிறாய்?

யாரைத்தேடுகிறாய்....

என்னைத்தான்

உன்னைத்தானா....

ஆம் என்னைத்தான்...

உன்னைத் தேடுகிறாயா..

ஆம்..என்னைத்தான்

இருபது வயதில்

இருந்த என்னைத்தான் தேடுகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேடுகிறேன் தேடுகிறேன்

நான் உன்னைத் தேடுகிறேன்

கடந்த உன்னை நீ தேடும் போது

நடக்கும் உன்னை நான் தேடுகிறேன்

கடந்தவை கடந்ததாக

நடப்பபை தான் நாளையாக

நாளை..

வரும் நாளை

பார்த்து

நானும் அவளும்..

பல படிகள் தாண்டி...

தடைகள் கடந்து..

இருவரும் தவம் செய்து

போராடி..உங்கள் வெற்றிக்காக..

காத்திருக்கும் நாளை..

ஆனாலும்..ஆசை..

அவளைவிட ஒருபுள்ளியாவது..

அதிகமாக வாங்க வேண்டும்..

நாளை வரும் நாளை

பார்த்து அவளும் நானும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நமதும்

என்றும் நிரந்தரமில்லை

கிடைத்ததை நழுவ விடும்

நேரமும் இதுவில்லை

தேடியதை தொலைத்தாலும்

தேடி வரும் உனை நாடி வரும்

புள்ளி மான் ஒன்று

புள்ளிமான் ஒன்று துள்ளி செல்கிறது..

பக்கம் வா வா என தள்ளிச்செல்கிறது..

அவள் பிரம்மதேவனின் அஸ்திரமே..

ஏழைமேல் விழுந்த வஸ்திரமா..

அவள் அட்சய பாத்திரமா

இல்லைக் காதல் தோத்திரமா..

என் இருளைப்போக்கும் அழகு நிலவா நிலவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவா அழகு நிலவா?

அந்தி சாயும் போது வருவாளே

அது உனக்கு சரியா?

அழகு காட்டி உன்னை

அழவைப்பாளே

ஆயிரம் சொன்னாலும்

ஆதவனைக் கண்டால்

உன்னை விட்டகன்றிடுவாளே

நாதன்............. விகடகவி.......

உங்களுக்குள்ள போட்டியா ????

நான் ஆசையா கவி எழுத நீங்கள் எழுதி முடிக்கின்றீர்கள் :blink: :angry: :angry: :blink:

நான் சும்மா............. :P :P :P

உங்கள் கவி அழகு

Edited by இனியவள்

விட்டகன்றுவிடுவாளே என்று

வேறிடம்

போக அறியாத இதயம்..

இருந்தாலும்..கேட்கட்டும்

இது ஆலோசனை நேரம்

சுயநலம் இல்லாத

சுத்தக்காதல் போல்...

தெளிந்த வான்..

சின்னச்சின்ன மின்மினிகள்..

அந்த நிலா..அடடா

அது அழகிய நிலவேதான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.