Jump to content

அமேஸான் - புத்தக விற்பனையிலிருந்து பூதாகர வளர்ச்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமேஸான் - புத்தக விற்பனையிலிருந்து பூதாகர வளர்ச்சி!

எஸ்.எல்.வி. மூர்த்தி

 
 
amazon_2321001f.jpg
 

இ-காமர்ஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இணையதள வியா பாரம் இந்தியாவில் சுமார் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

பிளிப்கார்ட், ஜபாங், ஜங்லீ, மைந்த்ரா, ஸ்நாப்டீல் போன்ற இ காமர்ஸ் கம்பெனிகள் புத்தகங்கள், சமையல் சாதனங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், செல்போன்கள், உடைகள், வாட்ச்கள், நகை கள் என நமக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களையும், ஏகப்பட்ட பிராண்ட்களில் தருகிறார்கள்.

பெரும்பாலான இ-காமர்ஸ் கம்பெனிகளின் ஆண்டு விற்பனை பல்லாயிரம் கோடிகளுக்கும் அதிகம். பல லட்சம் பேருக்கு இந்தக் கம்பெனிகள் வேலை வாய்ப்புத் தருகின்றன.

இது மட்டுமல்ல, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் வாய்ப்பை இ-காமர்ஸ் தருகிறது. சிதம்பரம், கோயம்பத்தூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய தமிழகத்தின் பல ஊர்களில் இ காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

புத்தகங்கள், எலெக்ட்ரானிக் சாமான்கள், ஜூவல்லரி மட்டுமல்லாமல், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, தூத்துக்குடி மக்கரூன்ஸ், நாகர்கோவில் சிப்ஸ், சாத்தூர் காரச்சேவு என, நாம் இணையதளங்களில் விற்கும் என்று நினைத்தே பார்த்திராத பல ஐட்டங்களை இந்தப் புதிய தொழில் முனைவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.

இத்தனைக்கும் காரணம் என்ன தெரியுமா? ``தரமான பொருட்களை மலிவான விலையில், கடை கடையாகத் தேடி அலையாமல், வீட்டில் இருந்தபடியே, நாம் கேட்கும் பொருள் வீடு தேடி வரும் வசதி கொண்டது ஆன்லைன் மார்க்கெட்டிங்” என்னும் அபிப்பிராயம் ஆழமாக மக்கள் மனங்களில் பதிந்திருப்பதுதான். இந்தப் பொசிஷனிங்கை உருவாக்கியிருப்பவர், ஜெஃப் பெஸோஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜெஃப்ரி பெஸோஸ் (Jeffrey Bezos).

இ-காமர்ஸ் என்கிற கோடிக் கோடியாய்ப் பணம் கொட்டும் புதுத் துறையைக் கண்டுபிடிக்கிற ஐடியா ஜெஃப் பெஸோஸூக்கு எப்படி வந்தது?

ஜெஃப் படிப்பில் எப்போதும் முதல் ராங்க்தான். புகழ் பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் துறைகளில் பட்டம் பெற்றார். கம்ப்யூட்டர் தொடர்பான வேலையில் தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொள்ள முடிவு செய்தார்.

பங்குச் சந்தையில் கம்ப்யூட்டர் அதிகமாகப் பயன்படத் தொடங்கியிருந்த காலம் அது. கம்ப்யூட்டரில் அபாரத் திறமை கொண்ட அவரைத் தேடி வேலைகள் வந்தன. பிட்டெல் (Fitel), பாங்கர்ஸ் டிரஸ்ட் (Bankers Trust), டி. ஈ. ஷா கம்பெனி (D. E. Shaw and Co) ஆகிய பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்களில் பணியாற்றினார். முப்பது வயதில் மூத்த துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.

1994 ம் வருடம். 1993 ஐவிட, இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 23 மடங்கு அதிகமானது. ஜெஃப் இன்டர்நெட்டின் மாபெரும் சக்தியை உணர்ந்தார். இந்த வலிமையான ஆயுதம் தகவல் பரிமாற்ற வட்டத்துக்குள் மட்டுமே முடங்கி விடக்கூடாது என்று உணர்ந்தார்.

‘என்ன செய்யலாம்?’ ஜெஃப் மனதுக்குள் ஆயிரம் ஆயிரம் கனவுகள், திட்டங்கள், கணக்குகள். அப்போது மெயில் ஆர்டர் பிசினஸ் என்னும் . தபால் அஞ்சல் முறை வியாபாரம் பிரபலமாக இருந்தது.

இன்டர்நெட் என்பது தபால் அஞ்சலின் இருபதாம் நூற்றாண்டு அவதாரம். தபால் அஞ்சலில் பொருள்களை விற் பதைப்போல் இன்டர்நெட்டில் விற்றா லென்ன? இதுதான் ஜெஃப்பின் ஐடியா.

ஜெஃப் வித்தியாசமான ஆள். ``கிடைச்சாச்சு ஐடியா” என்று கண்ணை மூடிக்கொண்டு ஆக்‌ஷனில் குதிப்பவரல்ல, பக்காவாகப் பிளான் போட்டுத்தான் முயற்சியைத் தொடங்கு வார்.

தொடங்கியது ஆராய்ச்சி

முதல் படி - தபால் அஞ்சல் முறை வியாபாரம் செய்யும் 20 முன்னணி நிறுவனங்கள் யார் யாரென்று கண்டுபிடித்தார்.

இரண்டாம் படி - அவர்கள் என்னென்ன பொருட்களை விற்கிறார்கள்?

மூன்றாம் படி - இவற்றுள் எந்தப் பொருட்களை இன்டர்நெட் மூலமாக விற்றால் வியாபாரம் அதிகரிக்கும்?

அந்த நாள்களில், ஆடைகள், காமிராக் கள், வீட்டு பர்னிச்சர், விளையாட்டுப் பொருள்கள், சூட்கேஸ் போன்ற பயண சாமான்கள், ஆடியோ மற்றும் வீடியோ காஸெட்டுகள், புத்தகங்கள், ஆகியவற்றைத்தாம் பெரும்பாலான மக்கள் தபால் அஞ்சல் முறையில் வாங்கிக் கொண்டிருந் தார்கள்.

ஒவ்வொரு கம்பெனியும் தமது தயாரிப்புப் பொருள்களின் படங்கள், விவரங்கள், விலை ஆகியவற்றை விலாவாரியாகச் சொல்லும் காட்டலாக் வெளியிடுவார்கள். அதைப் பார்க்க வேண்டும், தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆர்டர் செய்ய வேண்டும், பணம் கொடுக்கவேண்டும், பொருள் வீடு தேடி வரும்.

ஆடைகள், டிரெஸ்கள், காமிராக்கள், வீட்டு பர்னிச்சர், ஸ்போர்ட்ஸ் சாமான்கள், சூட்கேஸ் போன்ற பயணச் சாமான்கள், ஆடியோ வீடியோ காஸெட்டுகள், ஆகியவற்றுக்கு காட்டலாக் சரி. ஆனால் புத்தகங்களுக்கு?

ஆயிரம் ஆயிரமாய்ப் புத்தக வெளியீட்டாளர்கள், லட்சம் லட்சமாகப் புத்தகங்கள். எனவே புத்தகம் விற்கும் கம்பெனி காட்லாக்குகளில் புத்தகம், எழுத்தாளர், பதிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் கொண்ட லிஸ்ட் மட்டுமே இருக்கும்.

தான் வாங்கப்போகும் புத்தகத்தின் அட்டைப்படம் எப்படி இருக்கும், புத்தகத்தின் உள்ளடக்கம் என்ன, முக்கிய அம்சங்கள் என்ன என்பதை வாடிக்கையாளர்களால் தெரிந்துகொள்ளவே முடியாது.

காட்லாக்கில் கொடுக்க முடியாத இத்தனை விஷயங்களையும் இணையதளத்தில் கொடுக்க முடியும். தான் வாங்கப்போகும் புத்தகம் பற்றி வாசகன் மனத்தில் ஒரு டிரெய்லரே ஓட்ட முடியும் என்பதை ஜெஃப் உணர்ந்தார். இப்போது ஜெஃப் மனத்தில் தெளிவு. இன்டர்நெட்டில் புத்தகம் விற்பதுதான் நம் பிஸினஸ்.

``புத்தகங்களை விவரமாகப் பார்த்து அறிந்து, கடைக்கே போகாமல் வீட்டில் இருந்தபடியே வாங்கும் வசதி தரும் கடை” என்னும் சுகானுபவப் பொசிஷனிங்கை மக்கள் மனங்களில் இந்தப் புதிய பிசினஸ் உருவாக்கவேண்டும் என்று ஜெஃப் முடிவு செய்தார்.

வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பிசினஸ் தொடங்கினார். தன் கம்பெனிக்கு அவர் வைத்த பெயர் அமேஸான்.காம். ஏன் இந்தப் பெயர்?

இரண்டு காரணங்கள்

அமேஸான் ஆறு உலகிலே மிகப்பெரிய ஆறு. இதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் உண்டு. தன் கம்பெனியும் பிரம்மாண்டமாக வளர வேண்டும், புத்தகங்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேலான பொருள்கள் சங்கமிக்கிற இணையதளச் சந்தையாக இருக்கவேண்டும் என்பது முதல் காரணம்.

இரண்டாவது காரணம்? இணைய தளத்தில் விவரம் தேடுகிறீர்கள். யாஹூ, கூகிள் ஸெர்ச் எஞ்சின்களைப் பயன் படுத்துகிறீர்கள். இணையதளங்கள் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டு இருக்கும். தேடுதலில் A என்ற எழுத்தில் தொடங்கும் இணையதளங்கள்தாம் முதலில் வரும்.

B எழுத்தில் தொடங்கும் இணையதளங்கள் அடுத்துத் தொடரும். அமேஸான் என்று பெயர் வைத்தால் முதல் பக்கத்தில் வாடிக்கையாளர் கண்ணில் படுமே? ஜெஃப் எத்தனை நுணுக்கமாகத் தன் பிஸினஸ் திட்டத்தைத் தீட்டினார் என்பதற்கு இந்தப் பெயர் வைத்தல் ஒரு உதாரணம்.

ஜூலை 16, 1995. குட்டி வாடகை ஆபீஸ், மூன்று கம்ப்யூட்டர்கள். அமேஸான் ஆரம்பம். முதல் சில மாதங்களி லேயே, பிரமிக்கவைக்கும் வெற்றி. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களி லிருந்தும் மட்டுமல்லாமல், உலகின் 45 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் கொட்டின.

முக்கிய காரணம்? உலகின் எல்லாப் பதிப்பாளர்களின் புத்தகங்களையும் ஒரே இணையதளத்தில் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு, புத்தகங்களைப் புரட்டிப் படிப்பதுபோன்ற உணர்வு. புத்தகம் வாங்குவதைச் சுகானுபவமாக மாற்றிய புதுமை.

பத்தொன்பது வருடங்கள் ஓடி விட்டன. இன்று 89 பில்லியன் டாலர்கள் (சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்) வருட விற்பனை.

புத்தகங்கள், ஆடியோ, வீடியோ சிடிக்கள், இசைக் கருவிகள், டிவிக்கள், கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், வீட்டு சாமான்கள், ஆடைகள், ஆபரணங்கள், செருப்புகள், விளையாட்டு சாமான்கள். அத்தனையையும் அள்ளித்தரும் அட்சய பாத்திரம் அமேஸான். ஜெஃப்பின் சொத்து 34 பில்லியன் டாலர் (சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய்).

slvmoorthy@gmail.com

http://tamil.thehindu.com/business/அமேஸான்-புத்தக-விற்பனையிலிருந்து-பூதாகர-வளர்ச்சி/article6928391.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது களுத்துறை – 32% கம்பஹா – 25% கேகாலை – 15% நுவரெலியா – 30% இரத்தினபுரி – 20% அம்பாறை- 30% மன்னார்- 29% முல்லைத்தீவு – 25% வவுனியா – 30% கொழும்பு – 20% கண்டி – 20% காலி – 18% மாத்தறை – 30% மட்டக்களப்பு – 17% குருநாகல் – 30% பொலனறுவை – 38% மொனராகலை – 21% பதுளை – 21% https://athavannews.com/2024/1400397
    • லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்டதளபதி பலி 21 SEP, 2024 | 07:00 AM   லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில்  ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை  ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது. தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194227
    • நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது  ஜனாதிபதி தேர்தல் இன்று Published By: VISHNU   21 SEP, 2024 | 10:05 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்; வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த  சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/194220
    • பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, கடந்த ஆண்டு சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 2040-ல் நிலவில் மனிதர்களை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது. “சந்திரயான் -3 திட்டம் நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்குவது சாத்தியம் என்று உணர்த்தியது. நிலவுக்கு பாதுகாப்பாக சென்று திரும்புவதே அடுத்தக்கட்ட திட்டமாகும். சந்திரயான்3 ஐ விட சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்டது இத்திட்டம்” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார். மனிதர்கள் இல்லாமல் ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நிலவின் மண் மாதிரிகளை எடுத்து வர வேண்டும் என்பதால் சவால்கள் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.   சந்திரயான்-4 திட்டம் என்ன? சந்திரயான் -4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக, LMV-3 மற்றும் PSLV ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. விண்கலம் நிலவில் தரையிறங்கி, தேவையான மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஒரு பெட்டியில் அடைத்து, நிலவிலிருந்து புறப்பட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். அது வெற்றிகரமாக முடிந்தால், விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவை அடுத்த நிலைக்கு இந்த திட்டம் கொண்டு செல்லும். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செய்ய, தனித்தனி கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்.” என்றார். நிலவின் மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் அவர். “சர்வதேச அளவில், நிலவு ஒப்பந்தத்தின் படி (Moon Treaty 1967) நிலவை தனி ஒரு நாடு சொந்தம் கொண்டாட முடியாது. நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், அந்த மாதிரிகளை ஆய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளிடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். காலாவதியாகவுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, உலக நாடுகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாது. இந்நிலையில், இந்தியா தனது நிலவு ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்” என்றார்.   நிலவு மாதிரிகளை இதுவரை எடுத்த வந்த நாடுகள் எவை? நிலவை ஆராய்வது பல நாடுகளுக்கு முக்கியமான செயல். இது அறிவியல் ஆர்வத்தால், புதிய கண்டுபிடிப்புகளால், மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழலாம் என்ற எண்ணத்தால் செய்யப்படுகிறது. சில நாடுகள் நிலவின் மேற்பரப்பிலிருந்து மண் மாதிரிகளை சேகரித்து வந்துள்ளன. இது நிலவு எப்படி உருவானது, அதன் உள்ளே என்ன இருக்கிறது மற்றும் அதன் வரலாறு பற்றி நமக்கு முக்கியமான தகவல்களைத் தருகிறது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இதில் முன்னோடிகள். அமெரிக்கா 1969 முதல் 1972 வரை நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நிறைய மண் மாதிரிகளை கொண்டு வந்தது. 1970களில் சோவியத் யூனியன் தனது லூனா திட்டங்கள் மூலம் ரோபோக்களை கொண்டு, நிலவின் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் 2020ல், Chang’e-5 என்ற விண்கலத்தைக் கொண்டு சீனா நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து வந்தது. இந்தியா மட்டுமல்லாமல், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் விரைவில் நிலவிலிருந்து மண் மாதிரிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் நிலவைப் பற்றி மேலும் புரிதல்களைப் பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் முதன் முதலாக தடம் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும்.   நிலவின் மண், நிலவைப் பற்றி என்ன சொல்கிறது? ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட நிலவின் மண் மாதிரிகள் மூலம் நிலவின் வயது, அதன் உள்ளே என்னென்ன இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் மனிதர்களுக்கு தெரியவந்தன. நிலா ஒரு பெரிய மோதலால் உருவானது, அதில் எரிமலைகள் இருந்தன, அதன் துருவப் பகுதிகளில் உறைந்த நிலையில் நீர் இருக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தத் தகவல்கள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு மிகவும் முக்கியம். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி நமக்குச் சொல்கிறது. அங்கே பயனுள்ள பொருட்கள், கனிமங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்கவும் உதவலாம். அமெரிக்காவின் நாசா பூமிக்கு கொண்டு வந்த மண், பாறை மாதிரிகள் நிலவின் மேற்பரப்புக்கு எத்தனை வயதாகிறது என்பதை கணிப்பதில் முக்கிய பங்காற்றின. அமெரிக்காவின் அப்பொலோ திட்டங்களின் மூலம் கிடைத்த மாதிரிகளை ஆராய்ந்த போது, நிலவில் இருக்கும் Basalt, (எரிமலை வெடிப்பின் காரணமாக உருவான கரும்பாறைகள்) 3.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39l1kmvp3vo
    • இந்த இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை. தமிழ்க் கல்வியை வலியுறுத்தாமல் தமிழராக எவ்வாறு ஒன்றிணைய முடியும்???
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.