Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வீரர்களின் போர்', வெள்ளிக்கிழமை ஆரம்பம்

Featured Replies

'வீரர்களின் போர்', வெள்ளிக்கிழமை ஆரம்பம்

 

வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கும் இடையிலான 15ஆவது பெரும் துடுப்பாட்டப் போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை(27) காலை 8.30 மணிக்கு ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

4dg6v.jpg

கடந்த ஆண்டு, பெரும் துடுப்பாட்ட போட்டிக்கு இலக்கணமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொன் அணிகள் போர், கொலையிலும் வடக்கின் மாபெரும் போர் குழப்பத்திலும் முடிவடைந்தன.

 

ஆனால் வீரர்களின் போர் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.

இரு அணிகளைப் பொறுத்த வரையிலும் ஒரு அணி மற்றைய அணிக்கு சளைத்தவர்கள் இல்லையென்ற நிலைமை காணப்பட்டாலும் கூட, பயிற்சிகள், ஆட்டங்கள் ரீதியாக ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி சற்று முன்னிலையில் காணப்படுகின்றது.

 

ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி, இந்தாண்டு விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒன்றை சமப்படுத்தியும் ஒன்றில் தோல்வியையும் தழுவியுள்ளார்கள்.

 

பந்துவீச்சு ரீதியாக வேகப்பந்து வீச்சாளர்கள், மத்திய அளவிலான பந்து வீச்சாளாகள் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதுடன், துடுப்பாட்ட ரீதியாகவும் அரைச்சதங்களை பெற்ற பல வீரர்களையும் உள்ளடக்கிய அணியாக காணப்படுகின்றது.

 

இதற்கு மேலதிகமாக இரண்டு, மூன்று வருட அனுபவங்களை கொண்ட  வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியாகவும் காணப்படுகின்றது.

மகாஜனா கல்லூரி இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்புடன் பயிற்சி ஆட்டங்களை விளையாடியுள்ளார்கள்.
இந்தாண்டில், இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் கண்டதுடன் ஒரு போட்டியை சமப்படுத்தியும் உள்ளார்கள்.

 

அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்வாங்கிய அணியாக காணப்படுகின்றமை ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து தீர்மானங்களை மேற்;கொள்ளக் கூடியவர்களாகவும் காணப்படுகின்றது.

 

இவர்களும் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதுடன்  அரைச்சதம் பெற்ற வீரர்களையும் துடுப்பாட்ட ரீதியாக கொண்டுள்ளார்கள்.

 

மகாஜனாக் கல்லூரி அணியினர் டி.சாரங்கன் தலைமையிலும், ஸ்கந்தவரோதயா கல்லூரி வி.சுஜிதரன் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.

இரண்டு நாட்களை கொண்ட போட்டியாக காணப்படுகின்ற போதிலும் இரு அணிகளும் சளைக்காது வெற்றிவாய்ப்பை தமதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இறுதி வரை போராடுவாகள் என்பதில் சந்தேகம் இல்லை.

 

இதுவரையில் நடந்து முடிந்த 14 போட்டிகளில மகாஜனாக் கல்லூரி 3 போட்டிகளிலும் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றன. 7 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

- See more at: http://www.tamilmirror.lk/140562#sthash.h7gBHjxa.dpuf

  • தொடங்கியவர்

வீரர்களின் போரில் வென்றது மகாஜனா

 

வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோயத கல்லூரிக்கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கும் இடையிலான 15ஆவது ஆண்டு கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

 

இந்த போட்டியானது, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற மகாஜனாக் கல்லூரி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தவரோதயா, 41.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.கதியோன் 52, என்.சஞ்சயன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

மகாஜனாக் கல்லூரி சார்பில் பந்து வீசிய என்.தனுஸ்டன் 12.4 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஒவருடன் 39 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், ஆர்.லக்ஸ்மன் 07 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

 

பதிலுக்கு முதலாவது இனிங்ஸுக்காக களமிறங்கிய மகாஜனாக் கல்லூரி, 76 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.  என்.ஜசிந்தன் 33, எம்.பிரணவன் 32, எம்.கபிலன் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயா அணி சார்பாக என்.சுகிர்தரன் 14 ஓவர்கள் பந்து வீசி, 10 ஓட்டமற்ற ஓவர்களுடன் 12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் எம்.விதுசாந் 08 ஓவர்கள் பந்து வீசி 03 ஓட்டமற்ற ஒவர்களுடன் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும்  எஸ்.துசிதரன் 10 ஓவர்கள் பந்து வீசி 48 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

50 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா அணி, 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.கதியோன் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

பந்துவீச்சில் மகாஜனா சார்பாக, என்.தனுஸ்டன் 14 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், எம்.ஜெரோம் 9.3 ஓவர்கள் பந்துவீசி 16 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

61 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஜனா 19 ஓவர்களில 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. என்.ரதிகரன் 17, எம்.சாரங்கன் 15 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

 

ஸ்கந்தவரோதயா  சார்பில் பந்து வீசிய என்.சஞ்சயன் 08 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கதியோன் 03 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

சிறந்த துடுப்பாட்ட வீரன் கதியோன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி)

சிறந்த பந்து வீச்சாளர் என்.தனுஸ்ரன் (மகாஜனாக் கல்லூரி), சிறந்த களத்தடுப்பாளர் எஸ்.சயந்தன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), சகலதுறை வீரன் ஆர்.ஜெயந்தன் (மகாஜனாக் கல்லூரி), ஆட்டநாயகன் என்.தனுஸ்டன் (மகாஜனாக் கல்லூரி), சிறந்த துடுப்பாட்ட வீரன் எஸ்.கதியோன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/140927#sthash.U2RCaIJE.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.