Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரிகளை திகைக்க வைத்த குடாரப்பு மண்! தியாக நினைவுக் கல்லினை சிறீதரன் எம்.பி உள்ளிட்ட குழுவினர் பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி கிழக்குஇ குடாரப்பு மண் தமிழர் வரலாற்றில் பெருமை மிக்கது. திருப்பு முனையை தந்தது. போராட்டத்தின் ஒரு பெரும் மைல் கல். பால்ராஜ் எனும் போர் வீரனும் அவர் தம் தமிழ் படையும் தரையிறங்கி எதிரிகள் மீது தாக்குதல் தொடுத்து எதிரிகளை திகைக்க வைத்த மண் என கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க லண்டன் குணா அறக்கட்டளை வடமராட்சி கிழக்கு குடாரப்பு மாணவர்களுக்கு இன்று அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வு குடாரப்பில் வடமாராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் நடைபெற்றது.

இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்இ குடாரப்பு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அருள்தாஸ்இ மாதர் சங்க தலைவி செபஸ்ரின் ஜெசிந்தாஇ சமூக சேவையாளர் திக்கம் தினேஸ் உட்பட மாணவர்கள்இ பெற்றார்கள் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றியபோதே வடமாரட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிரிகளும் பால்ராஜ் எனும் தமிழ் வீரனுக்கு தலைவணங்கிய மண். இந்த மண் அர்ப்பணிப்பால் உலகம் அறியப்பட்டது. இந்த மண்ணால் தமிழர்கள் உலகம் அறியப்பட்டார்கள்.

எனவேதான் இந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கும் பிறக்கின்றவர்களுக்கும் வரலாற்று பெருமை உண்டு. அதனால் அந்த வரலாற்றுப் பெருமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின்இ இன மொழிப்பற்றுடன் மிகுந்த பொருளாதாரஇ அறிவியல்இ இராணுவ மதிநுட்ப அறிவுடன் நாம் தேசப்பற்றுள்ள கல்வியை கற்க வேண்டும். சாதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் பா.உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் வரலாற்றுப் பெருமை மிக்க குடாரப்பு தரையிறக்க தியாக நினைவு கல்லினையும் பார்வையிட்டனர்.

http://www.tamilwin.com/show-RUmtyCRcSUnw2H.html

Edited by MEERA

சிறிதரனும்  பதவி  பிடிக்க  எல்லா சீனும்  போடுறார்  யாரும்  கண்டுக்கிறதா  இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விடவா. முன்னாள் புலி என்று கொண்டு.. விட்டா நீங்களே குடாரப்பு தரையிறக்கம்.. தீச்சுவாலை முறியடிப்பு எல்லாம் செய்ததா எழுதினாலும்.. கேட்க ஆக்களில்லை. எல்லாம் காலமப்பு. உங்களுக்கு அதிஸ்ட காலம். பிள்ளை குட்டி குருமன் என்று கொண்டு.. வெளிநாட்டு அகதிப் பிச்சையில் உல்லாச வாழ்கை. இதில.. அந்த மண்ணில்.. வீழ்ந்த போராளிகள் பற்றி தான் அதிகம் கவலைப்பட வேண்டி இருக்குது.  :icon_idea:  :rolleyes:

Edited by nedukkalapoovan

அது  சரி  உங்களை  போல  சீனை  போடுவோர்  காலம்  ஆகிட்டே  அதுதான்  இப்படி  புது புதுசா  காசு  பார்க்க கிளம்புறது  ...

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு வந்திட்டு திரிக்கிறதை காட்டிலும்.. நாட்டில இருந்திட்டு நினைவுகூற ஒரு தில்லு வேணும். அது உங்கள் சிலரை விட அவரட்டா நல்லா இருக்குது. அதைச் செய்தாவது அவர் பிழைக்கட்டும். நீங்கள் எல்லாம் பிழைச்ச வழிகள் நியாயம் தானே. வந்திட்டாங்க வகுப்பெடுக்க.  :lol:  :icon_idea:

வரலாற்றுப்பெருமை மிக்க குடாரப்பு தரையிறக்க தியாக நினைவுகளை பார்க்கையில்...... போராட்டத்தின் ஒரு பெரும் மைல் கல் அண்ணன் பால்ராஜ் நினைவுகள்.......

எமது வேண்டுகோளுக்கிணங்க இலண்டன் குணா அறக்கட்டளை வடமராட்சி கிழக்கு குடாரப்பு மாணவர்களுக்கு இன்று அப்பியாசக்கொப்பிகளை வழங்கியுள்ளது.இந்த நிகழ்வு குடாரப்பில் வடமாராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் நடைபெற்றது.

இதில் எம்முடன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அருள்தாஸ் மாதர் சங்க தலைவி செபஸ்ரின் ஜெசிந்தா சமுகசேவையாளர் திக்கம் தினேஸ் உட்பட மாணவர்கள் பெற்றார்கள் கலந்துகொண்டனர்.இதில் உரையாற்றிய வடமாரட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந்

இந்த குடாரப்பு மண் தமிழர் வரலாற்றில் பெருமை மிக்கது.திருப்பு முனையை தந்தது.போராட்டத்தின் ஒரு பெரும் மைல் கல்.பால்ராஜ் எனும் போர் வீரனும் அவர் தம் தமிழ் படையும் தரையிறங்கி எதிரிகள் மீது தாக்குதல் தொடுத்து எதிரிகளை திகைக்க வைத்த மண்.எதிரிகளும் பால்ராஜ் எனும் தமிழ் வீரனுக்கு தலைவணங்கிய மண்.

இந்த மண் அர்ப்பணிப்பால் உலகம் அறியப்பட்டது.இந்த மண்ணால் தமிழர்கள் உலகம் அறியப்பட்டார்கள். எனவேதான் இந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கும் பிறக்கின்றவர்களுக்கும் வரலாற்று பெருமை உண்டு.

அதனால் அந்த வரலாற்றுப்பெருமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமாயில் இன மொழிப்பற்றுடன் மிகுந்த பொருளாதார அறிவியல் இராணுவ மதிநுட்ப அறிவுடன் நாம் தேசப்பற்றுள்ள கல்வியை கற்கவேண்டும் சாதிக்கவேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் வரலாற்றுப்பெருமை மிக்க குடாரப்பு தரையிறக்க தியாக நினைவு கல்லினையும் தரசித்தனர்.

 
 

வரலாற்றுப்பெருமையோடு எதிர்காலம் நோக்கி பயணிப்போம் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியகாந்

 

10497866_409773255850111_587147090813849

 

 

10847396_409773182516785_24001941554917211012810_409773259183444_311792789964974
 
11029497_409773195850117_808377215887559
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.