Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர்! - நால்வர் கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
murder-200-news.jpg

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருணோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

   

பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்காம் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 20, 31 மற்றும் 39 வயதுடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மிட்லேன்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

http://seithy.com/breifNews.php?newsID=128088&category=TamilNews&language=tamil

லண்டன் தமிழர் கொலை! உண்மையில் நடந்தது என்ன ?

 

48 வயதுடைய அருணாச்சலம் அருனோதயன் என்னும் இலங்கை தமிழர் , பிரித்தானியாவின் கொவன்ரி பகுதியில் வைத்து கடந்த 4ம் திகதி கொலைசெய்யப்பட்ட சம்பவம்.அங்கே நடந்தது என்ன என்பது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தினூடாக நாம் பொலிசாரை வினவியபோது கிடைக்கப்பெற்ற தகவல்.மற்றும் அவரது உறவினர் தந்த தகவல்களை இங்கே வெளியிடுகிறோம்.

48 வயதுடைய அருணாச்சலம் அருனோதயன் தனது மனைவியோடு தங்கியிருந்த வீட்டிற்கு , அவரது நண்பர் ஒருவர் வந்துள்ளார். அவரோடு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கூடவே வந்துள்ளார்.

தாம் காதலிப்பதாகவும் , அதனால் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாகவும் நண்பர் கூறியுள்ளார். அருனோதயன் வீட்டில் தங்கலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு அருனோதயன் ஒத்துக்கொள்ளவில்லை. குறித்த பெண்ணை அங்கே விட்டுவிட்டு, தாம் வேறு வீடு ஒன்று பார்த்துவிட்டு வருவதாக கூறி அந்த நண்பரும் அவரது 2 நண்பர்களுமான மூவரும் வெளியே சென்றுள்ளார்கள்.

இதேவேளை ஓடி வந்த இளம் பெண்ணிடம் அருனோதயன் ஏன் இவ்வாறு அப்பா அம்மாவை ஏமாற்றி விட்டு வீட்டை விட்டு ஓடி வந்தீர்கள் ? இது நியாயமா ? என்று கேட்டுள்ளார்.

அப்பா அம்மாவோடு பேசி , அவர்களை இணங்கச் செய்து குறித்த பையனக் கல்யாணம் செய்யலாம் தானே. இதுவரை காலமும் உங்களை வளர்த்த அப்பா அம்மாவை ஏன் ஏமாற்றுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார்.

இன் நிலையில் வீடு திரும்பிய தனது காதலன் மற்றும் அவரது 2 நண்பர்களிடம் , குறித்த இந்தப் பெண் ஓடிச் சென்று ,இவரே எங்களை காட்டிக்கொடுத்துவிடுவார் போல உள்ளதே என்று கோள்மூட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் மற்றும் அவனது 2 நண்பர்களும் , தூக்கத்தில் இருந்த அருனோதயனை பலமாக தாக்கியுள்ளார்கள்.

இதனால் அவர் கட்டில் இருந்து கீழே விழுந்து தலை அடிபட்டுள்ளது. அவரது மனைவி ஓடி வந்து , ஒன்றாக சாப்பிட்டீர்கள் பேசிப் பழகினீர்கள் , இப்ப வயசு வித்தியாசம் பார்காமல் அடிக்கிறீர்களே என்று கதறியுள்ளார்.

காதலனும் அவன் சகாக்களும் பின்னர் வீட்டில் இருந்து ஓடிவிட்டார்கள். தனக்கு தலை சுற்றுவதாக கூறிய அருனோதயன் தான் ,தூங்கப்போவதாகவும் தூங்கினால் சரியாகிவிடும் என்றும் மனைவியிடம் கூறியுள்ளார்.

பின்னர் எழுந்து நடக்க முற்பட்டவேளையும் மீண்டும் நிலத்தில் விழுந்துள்ளார். பின்னர் அவர் தன்னை எழுப்பவேண்டாம் என்று சொல்லி தூங்கிவிட்டார். சில மணி நேரம் கழித்து அவர் எழுந்திருக்கவில்லை என்று , அவரது மனைவி சென்று பார்த்தவேளை அவர் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டு , உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

உடனடியாக அம்பூலன்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளார்கள் இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி , அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

காதலித்து தனது காதலியோடு வாழாமல் சிறையில் அடைபட்டுள்ளார்கள். இதில் வீட்டை விட்டு ஓடிவந்த காதலியையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்துள்ளார்கள்.

அருனோதயனை தாக்கிவிட்டு இவர்கள் , அங்கிருந்து ஓடிச் சென்றவேளை , வெளியே வீதியில் உள்ள CCTV கமராவில் இந்த 4 பேரது முகங்களும் பதிவாகியுள்ளது. பிரித்தானியப் பொலிசாரை ஏமாற்றுவது என்பது எவ்வளவு கஷ்டமான விடையம் என்று எமக்கு முதலில் புரியவேண்டும். எமது இளைஞர்கள் இவ்வாறு நடந்துகொள்ள அவர்களை வளர்க்கும் பெற்றோரும் ஒரு காரணமா தெரியவில்லை.

01 Four arrested in city murder case 02 FOURTH MAN CONTINUES TO BE HELD FOR COVENTRY MURDERLondon-Dath-600x399.jpg

 

 


London-Dath-01-600x399.jpg

 

 

London-Dath-02-600x399.jpg

 

 

http://www.jvpnews.com/srilanka/100852.html

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.