Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இரண்டாவது தடவையாக தர்மசேன

Featured Replies

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இரண்டாவது தடவையாக தர்மசேன
 

 

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்ற இலங்கையின் நடுவர் குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2najxgk.jpg

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டி ஒன்றில் நடுவராக கடமையாற்றும் முதலாமவர் குமார் தர்மசேன என்பது குறிப்பிடத்தக்கது.

 

1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலக சம்பியன் ஆகிய வேளை, இலங்கை அணியில் குமார் தர்மசேன விளையாடி இருந்தார்.

43 வயதான குமார் தர்மசேன, 19 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டி ஒன்றில் மைதானத்துக்குள் களமிறங்கவுள்ளார்.

 

2011ஆம் ஆண்டு சிறந்த நடுவர் விருதைப் பெற்ற இவர், கடந்த இரண்டு வருடங்களும் சிறந்த நடுவர் விருதைப் பெற்ற ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ உடன் இணைந்து கடமையாற்றவுள்ளார்.

 

மூன்றாவது நடுவராக தென் ஆபிரிக்காவின் மறையஸ் ஏறஸ்மஸ் கடமையாற்றவுள்ள அதேவேளை, இங்கிலாந்து நடுவர் இயன் குட் கடமையாயற்றவுள்ளார்.

 

இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு கடந்த இரண்டு தடவைகள்  தெரிவாகியமையினால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை போட்டி மத்தியஸ்தராக பல வருடங்களாக திகழ்ந்து வரும் ரஞ்சன் மடுகல்ல அந்த வாய்ப்பை இழந்தார்.

 

இம்முறை 2003, 1999 ஆண்டு இறுதிப்போட்டிகளுக்கு  பின்னர், ரஞ்சன் மடுகல்ல மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/142824#sthash.cgCCLd0O.dpuf

  • தொடங்கியவர்

உலக கோப்பை பைனலில், வீரராகவும், நடுவராகவும் களமிறங்கி தர்மசேனா புது சாதனை

 

மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது மட்டுமின்றி நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை இலங்கை நடுவர் குமார் தர்மசேனா படைத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு நடுவர்களாக இலங்கையை சேர்ந்த குமார தர்மசேனா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்ஃபாரோ ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

 

உலக கோப்பை பைனலில், வீரராகவும், நடுவராகவும் களமிறங்கி தர்மசேனா புது சாதனை கொழும்பு நகரில் பிறந்த தர்மசேனாவுக்கு தற்போது 43 வயதாகிறது. ஆல்ரவுண்டரான இவர் கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றவர். அந்த வகையில் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நடுவராக பணியாற்றுவது இதுவே முதல்முறை.

 

இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகலும் 141 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக நடுவராக பணியாற்றத் தொடங்கினார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/kumar-dharmasena-first-play-umpire-final-223587.html

  • தொடங்கியவர்

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியதில் மகிழ்ச்சி : குமார் தர்மசேன
 

 

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சியென  குமார்  தர்மசேன தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின்  நடுவர் குமார் தர்மசேன இடம்பெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நடுவராக செயல்பட்டார

 

இதன் மூலம் உலகக்கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒருவர் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நடுவராக செயல்படுவது இதுவே முதன்முறையாகும். அதற்குரிய பெருமையை குமார் தர்மசேன பெற்றார்.

இது தொடர்பில் குமார் தர்மசேன கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

இந்த நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் இருந்து சர்வதேச போட்டியின், அதுவும் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் நடுவராக செயற்பட வாய்ப்பு கிடைத்தமை எனக்கு கிடைத்த பாக்கியம்.

 

அதேநேரம் வெற்றி பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நான் விளையாடியிருந்தேன். இம்முறை நாட்டிற்காக உலகக்கிண்ணத்தில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் ஒரு அதிகாரியாக, நடுவராக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி.

 

மொத்தமாக சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக செயற்பட 12 பேர் இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில காலங்களாக நான் தான் முதலிடத்தில் இருந்தேன். அதனால் எனக்கு இந்த வாய்ப்பு குறுகிய காலத்தில் கிடைத்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
 

 

http://www.virakesari.lk/articles/2015/04/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.