Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்சலில் வந்த 14 லட்சம்ஐஸ்வர்யாவிடம் விசாரணை

Featured Replies

நெதர்லாந்து நாட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 14 லட்சம் பணம் தபால் மூலம் வந்தது குறித்து அவருக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் பார்சல்களை ஸ்கேன் செய்து பார்ப்பது தபால் துறையின் வாடிக்கையான விஷயம். பாதுகாப்பு கருதி இந்த நிநவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராய்க்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலையும் அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் ஐரோப்பிய நாணயமான யூரோ பணக் கட்டுக்கள் இருந்தன.

பார்சலில் பணம் அனுப்பக் கூடாது என்பது விதியாகும். எனவே ஐஸ்வர்யாவுக்கு வந்திருந்த அந்த பார்சலைப் பிரித்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ. 14 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சி இருந்தது.

இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத் கூறுகையில், மின்னணுப் பொருட்களுக்குள் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் குறித்து அந்த பார்சலில் எந்தவிதக் குறிப்பும் இல்லை. இதுதொடர்பாக ஐஸ்வர்யாவிடம் விளக்கம் கேட்கவுள்ளோம். அவருக்கு தெரிந்து அனுப்பப்பட்டுள்ளதா அல்லது தெரியாமல் வந்த தபாலா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

ஐஸ்வர்யா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்ட நிலையில் தற்போது யூரோ பணத்தால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

http://thatstamil.oneindia.in/specials/cin...ishwarya_6.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐஸ்சு எல்லாம் கிளிஞ்சுது போ.இவவுக்கு அடிக்கடி இப்படியான பார்சல்கள் வாறதுதானாம்.அதிலும் பாகிஸ்தான் மாம்பழத்தோட்ட பண்ணையார்களிடமிருந்து அதிகமாம். :rolleyes::D:D B)

  • தொடங்கியவர்

நெதர்லாந்திலிருந்து தனது பெயருக்கு ரூ. 13 லட்சம் பணம் அனுப்பியவர் யார் என்று எனக்குத் தெரியாது என நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராயின் ¬கவரிக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து பார்சல் மூலம் சில மின்னணுப் பொருட்களையும் அத்தோடு 23,000 யூரோ பணத்தையும வைத்து (இந்திய மதிப்பில் ரூ. 13 லட்சம்) ஒருவர் அனுப்பியுள்ளார்.

இந்தப் பணம் எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து சுங்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் ஐஸ்வர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பணம் குறித்து ஐஸ்வர்யா வியப்பு தெரிவித்துள்ளார்.

அக்பத் ஜோதா என்ற படத்தின் ஷýட்டிங்குக்காக ஜெய்ப்பூர் வந்த ஐஸ்வர்யா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், யார் பணத்தை அனுப்பியது என்று எனது பெற்றோரும், நீங்களும், உலகின் பல்வேறு பகுதியில் இருப்போரும் வியப்படைந்ததைப் போலவே நானும் வியப்படைந்துள்ளேன்.

இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. யார் அனுப்பியது என்பது தெரியவில்லை. இந்தப் பிரச்சினை சுமூகமாக முடியும் என நம்புகிறேன் என்றார். இதற்கிடையே, சுங்கத் துறை விசாரணைக்கு ஐஸ்வர்யா ராய் கண்டிப்பாக வர வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பார்சலை அனுப்பியவர் இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு ஐஸ்வர்யா தரப்பில் பதில் ஏதும் இல்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். விசாரணைக்கு அவர் ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரசாத்.

இந்த நலையில், ஐஸ்வர்யாவின் தந்தை கிஷன் ராஜ் ராய் சுங்கத்துறை அலுவலகத்திற்குச் சென்று உரிய அதிகாரிகளை சந்தித்தார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

http://thatstamil.oneindia.in/specials/cin...ishwarya_7.html

நெதர்லாந்திலிருந்து தனது பெயருக்கு ரூ. 13 லட்சம் பணம் அனுப்பியவர் யார் என்று எனக்குத் தெரியாது என நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

ஜய்யோ அது நான் தான் தெரியாம அனுப்பிட்டேன் உடனே திருப்பி அனுப்புங்கோ ஜஸ்

மனுசிக்கு தெரிச்சா நான் வாழவெட்டியாகி விடுவேன் :rolleyes::lol:

எனக்கு அப்பவே சந்தேகம்..இது எங்கட யாழ் ம--- ஒராள் என்று :P

எனக்கு அப்பவே சந்தேகம்..இது எங்கட யாழ் ம--- ஒராள் என்று :P

அது தான் தூயா எப்படி அந்த காசை திருப்பி எடுப்பது :rolleyes::)

  • தொடங்கியவர்

உண்டியலில போட்ட காசுதான் அது வினித்

உந்தா சாறியை பற்றி கேட்ட்தும் உவருக்கு அனுப்பவோ :):D:rolleyes: :P

சகோதரா, ம்ம்ம்ம் ஐஸ்வர்யாவிடம் இருந்து வந்தாலும் வரலாம்..ஆனால் இது எத்தனை அதிகாரிகளின் கையில் இருந்து வரவேணும்...ஹிம்ம்ம்ம்ம் தேறாது..சொல்லிட்டன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே அண்ணே வினித் அண்ணே ஐஸ்சுட்டை போன காசு கோவிந்தோ கோவிந்தா! :P ஐஸ்சுட்டை போன காசு ஒரு வழிப்பாதையால் போன வாகனம் மாதிரி போனால் போனது தான் திரும்பி வரவே வராது :rolleyes: பண்ணியில் பண்ணிப்பாரும் இல்லாட்டி ஒரு வேளை அபேக் பச்சனிடம் சொல்லிப்பாரும் B)

  • தொடங்கியவர்

பார்சல் பணம்: ஐஸுக்கு தொடர்பு இல்லை

நெதர்லாந்து நாட்டிலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அனுப்பப்பட்ட பணத்திற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என மும்பை சுங்கத் துறை அறிவித்துள்ளது.

ஐஸ்வர்யாவின் பழைய வீட்டு முகவரிக்கு சமீபத்தில் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒரு பார்சல் அனுப்பப்பட்டது. அந்தப் பார்சலை ஸ்கேன் செய்து பார்த்த சுங்கத் துறை அதிகாரிகள், அதில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள யூரோ பணமும், சில மின்னணு எந்திரங்களும் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இந்தப் பணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஐஸ்வர்யாவுக்கு சுங்கத் துறை உத்தரவிட்டது. இருப்பினும் அப்போது படப்பிடிப்பில் ஐஸ்வர்யா பிசியாக இருப்பதால் வர முடியவில்லை என அவரது சார்பில் சுங்கத் துறையிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பதிலாக ஐஸ்வர்யாவின் தந்தை மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இருப்பினும் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தியே ஆக வேண்டும் என்று சுங்கத் துறை கண்டிப்பாக கூறி விட்டது.

இந் நிலையில், நேற்று முபைக்கு வந்த ஐஸ்வர்யாவிடம் விமான நிலையத்தில் வைத்தே சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது பார்சல் பணம் குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் துருவித் துருவி கேள்விகள் கேட்டனர்.

விசாரணையின்போது பலமுறை ஐஸ்வர்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக பின்னர் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின்னர் ஆணையர் பிரசாத் கூறுகையில்,

விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தார் ஐஸ்வர்யா. சிலமுறை அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம். விசாரணை முடிவில், அப்பணத்திற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது. அவர் நிரபராதி என்றார்.

இதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சையிலிருந்து ஐஸ்வர்யா விடுபட்டுள்ளார். விசாரணைக்குப் பின்னர் ஐஸ்வர்யாவின் வழக்கறிஞர் கிரீஷ் குல்கர்னி செய்தியாளர்களிடம் பேசுகையில், இது தேவையில்லாத பிரச்சினை. எங்களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டு விட்டனர். எங்களது தரப்பை விளக்கி விட்டோம்.

நெதர்லாந்திலிருந்து இந்தப் பார்சலை அனுப்பியவர் யார்? உண்மையிலேயே அவர் அந்தப் பெயரில் இருக்கிறாரா? எதற்காக அனுப்பினார் என்பதை விசாரிக்க வேண்டியது சுங்கத் துறையின் வேலை என்றார்.

http://thatstamil.oneindia.in/specials/cin...ishwarya_5.html

அடேயப்பா..அது என் பணம்..முகவரி மாறி.வந்திருச்சுடோ....

திருப்பி கொடுங்கப்பா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.