Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா

Featured Replies

போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா APR 16, 2015 | 9:03by கார்வண்ணன்in செய்திகள்

Gwadar-port1-300x200.jpgசிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடலில், தமது போர்க்கப்பல்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத் தேவைகளுக்காக பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது.

குவடார் துறைமுகத்தை சீன 40 ஆண்டு குத்தகைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பெற்றிருக்கிறது.

இதுகுறித்து சீனாவின் குளோபல் ரைம் நாளிதழக்கு கருத்து வெளியிட்டுள்ள, அனைத்துலக கற்கைகளுக்கான சங்காய் நிறுவகத்தின், தெற்காசிய கற்கைகள் பிரிவின் பணிப்பாளர், சாவோ கன்செங்,

“இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படைக்கப்பல்களை பராமரிப்பதற்கும், விநியோகத்துக்கும் குவடார் துறைமுகம் உத்தரவாதம் அளிக்கும்.

சீன போர்க்கப்பல்களுக்கு சிறிலங்கா தனது துறைமுகங்களைத் திறந்து விடும் வாய்ப்பில்லாத சூழ்நிலையில்,  இது சீனாவுக்கும் மிகவும் பரந்தளவிலான முக்கியத்துவம் அளிக்கின்ற விடயமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த துறைமுகம், சீனப் பொருட்கள் இந்தியப் பெருங்கடல் வழியாக கொண்டு செல்வதற்கு பிரதான வழியாக இருக்கும்.

சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு, முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் வழியாக, ஜின்ஜியாங் பகுதியை பொருளாதார கேந்திரமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளால், இந்த திட்டத்துக்கு ஆபத்து உள்ளதாக சீன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், குவடார் துறைமுகம் அமைந்துள்ள பகுதி நீர்ப் பற்றாக்குறை உள்ள பிரதேசம் என்றும், இதனால் வீடுகள், போக்குவரத்து, மற்றும் பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களுக்கு ஏனைய வசதிகளை செய்து கொடுப்பது சிரமமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2015/04/16/news/5240

 

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை துறைமுகத்தை 40 ஆண்டு குத்தகைக்குத் தர தமிழர்கள் தயார்.. :D அதற்கு முதலில் தமிழர்கள் தனி நாடு பெற வேண்டும்.. :huh: அதற்கு உதவ சீனா முன்வரவேண்டும்.. :icon_idea:

  • தொடங்கியவர்

சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்குள் வருவதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை மற்றும் பராமரிப்பு, விநியோகம் என்பவற்றை பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகம் (Gwadar port) பொறுப்பேற்றுள்ளது.

இந்த நகர்வு சீனாவை பொறுத்தவரை முக்கியமான ஒன்று என்று சங்காய் நிறுவக தென்னாசிய கற்கை நெறிகளுக்கான பணிப்பாளர் ஸாவோ கன்சேங் (Zhao Gancheng) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் க்வாடார் துறைமுகம் இனிவரும் காலங்களில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருட்களை ஏற்றி இறக்கும் முக்கிய துறைமுகமாக மாற்றமடையும் என்று கன்சேங் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனாவின் சியான்ஜிங் பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானால் கையகப்படுத்தப்பட்டுள்ள காஷ்மீர் பிராந்தியம் ஊடக க்வாடர் துறைமுகம் இணைக்கப்படவுள்ளதாக கன்சேங் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மலை சார்ந்த பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாத செயல்களால் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று சீனாவின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் க்வாடர் துறைமுக பிரதேசத்தில் நீர்பற்றாக்குறை மற்றும் நிர்மாணங்கள், போக்குவரத்து, தொழிலாளர்களின் வெற்றிடங்கள் என்பன சீனாவின் முயற்சிக்கு தடையாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

இருப்பினும் பாகிஸ்தான் – சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை நோக்காகக் கொண்டு இந்த துறைமுகத்தில் சீன நிறுவனம் ஒன்று இந்த மாதத்தில் இருந்து நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

http://www.jvpnews.com/srilanka/105350.htmlchinas.jpg?resize=600%2C450

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.