Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் சூழ்நிலையை சரியாக பயன்படுத்த வேண்டும்! - கூட்டமைப்புக்கு ஜோன் கெரி அறிவுரை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

புதிய அரசியல் சூழ்நிலையை சரியாக பயன்படுத்த வேண்டும்! - கூட்டமைப்புக்கு ஜோன் கெரி அறிவுரை!!

b0c252b2-e467-45ab-a6e1-7fe3bc5f42bb1.jp

 

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நல்லதொரு அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமே, சுமுகமான அரசியல் தீர்வொன்றை காணமுடியும் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு கொழும்பைச் சென்றடைந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் இன்று காலை 9.30 மணியிலிருந்து 10.15 மணிவரை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்புக் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், 'இச்சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தரப்பு விரும்புகிறது என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரியிடம் நாங்கள் தெரிவித்தோம்.

அத்துடன், வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அமெரிக்க இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம். 

அதேவேளை, சிறிலங்கா படைத்தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார். 

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் நீக்கப்பட்டு, அனைத்து மக்களும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா கோரவேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.  

வடக்கில் சிறிலங்கா படையினரே முடிவெடுக்கும் சக்தியாக இருக்கின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட்டு அரசியல் ரீதியாக தீர்க்கமான முடிவொன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரியிடம் நாங்கள் எடுத்துக் கூறினோம். 

எமது கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்' என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பை அடுத்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி hனர் சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு பயணமானார்.

http://ponguthamizh.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=b0c252b2-e467-45ab-a6e1-7fe3bc5f42bb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.