Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையுடன் நெருங்கும் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையுடன் நெருங்கும் அமெரிக்கா
 
america_srilanka_001.jpg
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் விரிவாக்கப்படவுள்ளது என்பதை கடந்த 4 ஆம் திகதி வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ,அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஏற்கனவே, இதுபற்றி இலங்கைக்கான பயணத்தின் போது, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, மேலோட்டமாகத் தெரிவித்திருந்தார்.

அது குறித்து விபரம் கோரியபோதே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர், இலங்கைக்கு கடல்சார் ஒத்துழைப்பு உதவிகளை அமெரிக்கா அளிக்கவுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், அவை எத்தகைய உதவிகள் என்பது தொடர்பான விரிவான தகவல்கள் எதையும் வழங்கவில்லை. அவை எதுவும் தன்னிடம் கைவசம் இல்லை என்று கூறிவிட்டார்.

எனினும் இலங்கையுடன் கடல்சார் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது.

கடந்த வாரம் இதே பத்தியில் கூறப்பட்ட சம்பவத்தை இங்கு மீள நினைவுப்படுத்துவதும் அவசியம். அமெரிக்க கடற்படையின், யு.எஸ்.எஸ்.கார்ல் வின்சன் என்ற விமானந்தாங்கி கப்பலுக்கு, வெளிவிவகார அமைச்சர், மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த விடயமே அது.

ஜோன் கெரியின் வருகைக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக ,ஏப்ரல் 19ஆம் திகதி இந்தக் குழுவினர், அமெரிக்க விமானந்தாங்கி கப்பலுக்கு விருந்தினர்களாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்தக் குழுவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் இடம்பெற்றிருந்தார் என்று கடந்த வாரப் பத்தியில் கூறப்பட்டிருந்தது அதில் ஒரு திருத்தம்.

அந்தக் குழுவில் மங்கள சமரவீரவுடன் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி,பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க,கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா மற்றும் கடற்படை அதிகாரிகளே இடம்பெற்றிருந்தனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அழைத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை. இவர்களை இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் அன்ரூ மான், அமெரிக்க போர்க்கப்பலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அமெரிக்க கடற்படைக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வாக இது கருதப்பட்டது. இந்த நிலையிலேயே ,கடந்தவார இதே பத்தி,”அடுத்து வரும் வாரங்களிலோ, மாதங்களிலோ ,இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படலாம்.

ஏனென்றால்,இந்தியப் பெருங்கடலில் சீனாவின் அசைவியக்கத்தை முடக்குகின்ற முக்கியமான மூலோபாயப் பங்காளியாக இலங்கையை அமெரிக்கா கருதுகிறது”என்று முடிக்கப்பட்டிருந்தது. அதன்படியே தான் ,இலங்கைக்காக கடல்சார் உதவிகளை வழங்கப் போவதான அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இலங்கையை ஒரு பங்காளராகவே பார்ப்பதாகவும் ,அதன் கடல்சார் பாதுகாப்புத் திறனைக் கட்டியெழுப்புவதற்கு உதவவுள்ளதாகவும் கூறியிருக்கிறார் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே.

கடற்கொள்ளை முறியடிப்பு, ஆட்கடத்தல் முறியடிப்பு நடவடிக்கை, மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் போன்றவை அதில் அடங்கும். இவை ஏற்கனவே பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவுகள்தான். ஆனால்,இலங்கையுடன் இதற்கு அப்பாலும் சென்று உறவுகளைப் பலப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் முன்னணி கடல்சார் நாடாக இலங்கையை விளித்துள்ள ஜெப் ரத்கே, கடல்சார் பாதுகாப்புக்கு இலங்கை அளிக்க விரும்பும் பங்களிப்பை நிறைவேற்ற அமெரிக்கா உதவவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது நிச்சயம் சீனாவை முடக்குகின்ற மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.வெளிப்படையாகவே பார்க்கப்படுகிறது.வெளிப்படையாக அதனை அமெரிக்கா கூறவில்லை.ஆனால்,அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கேயின் கருத்தில் ஒரு விடயம் உட் பொதிந்துள்ளது.

அமெரிக்காவும் இலங்கையும் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், பிராந்திய அல்லது கடல்சார் பகுதிகளை பலாத்காரமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும்,இணைந்து பணியாற்றுகின்றது.

பெரிய நாடுகள், சிறிய நாடுகள் என்றில்லாமல் எல்லா நாடுகளுக்குமே,தமது எல்லைக்குட்பட்ட கடல் மற்றும் வானத்தைப் பயன்படுத்தும் சட்ட ரீதியான உரிமையைக் கொண்டுள்ளன என்ற அடிப்படையில் நாம் இணைந்து பணியாற்றுகிறோம்”என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

அது தென்சீனக் கடலுக்கு உரிமை கோரும் சீனாவுக்கு எதிரான பொது நிலைப்பாட்டில்,இரு நாடுகளும் இணைந்திருக்கின்றனவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னொரு தடவை மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில்,தென்சீனக் கடல் உரிமை தொடர்பாக வியட்நாமுக்கு சார்பாக அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.

அது சீனாவுக்கு கோபமூட்டிய நிலையில்,உடனடியாகவே மஹிந்த ராஜபக்ச அவரை அழைத்துக் கடித்து கொண்டதுடன்,வெளிவிவகார அமைச்சு சார்பில் ஓர் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்தப் பிரச்சினையை இரு நாடுகளும் பேசித் தீர்த்ததுக் கொள்ள வேண்டும் என்று பூசி மெழுகியிருந்தது வெளிவிவகார அமைச்சு.

இப்போது சீனாவுக்கு எதிராக நிலைப்பாட்டில் உள்ள அமெரிக்காவுடன்,இந்த விவகாரத்தில் இலங்கை ஒத்துப்போகிறதா என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் கருத்துப் படி பார்த்தால் ,தென் சீனக்கடல் விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கடல்சார் விவகாரங்களில் ,சீனாவுக்கு எதிரான நிலையையே இலங்கை எடுத்திருக்க வேண்டும்.

அதேவேளை ,இலங்கையை இந்தோ-பசுபிக் பிராந்தியத்திலுள்ள முன்னணி கடல்சார் நாடாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா,இலங்கையுடன் கடல்சார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதன் மூலம் தனது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் திறனை மேலும் விரிவாக்கிக் கொள்ள எத்தனிக்கிறது.

கடற்கொள்கை எதிர்ப்பு, ஆட்கடத்தல் முறியடிப்பு தீவிரவாத எதிர்ப்பு இவை மூன்றும் தான்,தற்பொது பொதுவாக கடல்சார் பலத்தை விரிவாக்கிக் கொள்வதற்கு வல்லரசு நாடுகளால் கூறப்படுகின்ற காரணங்களாகும். இப்போது சீனக் கடற்படை, ஏடன் வளைகுடா வரைக்கும் தனது நீர்மூழ்கிகளை அனுப்பி கண்காணிப்பை மேற்கொள்கிறது.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து தமது நாட்டுக் கப்பல்களைப் பாதுகாக்கவே அவற்றை அங்கு அனுப்பியதாக நியாயம் கூறிகிறது சீனா. சிறிய படகுகளில் வரும் ,கடற்கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடுவதற்கு,எதற்காக நீர்மூழ்சிகள் என்ற கேள்விக்கு சீனாவினால் பதிலளிக்க முடியவில்லை.

கடற்கொள்ளை, தீவிரவாதம், ஆட்கடத்தல் இந்த மூன்றும் தற்போது கடல்சார் பாதுகாப்புக்கு சவாலான விடயங்களாக உள்ள நிலையில், வல்லரசு நாடுகள் இவற்றை வைத்து, பெருங்கடல் பகுதிகளின் ஆதிக்கத்தை விரிவாக்க முனைகின்றன.

இலங்கையுடன் இணைந்து அமெரிக்காவும், இத்தகையதொரு வலைப்பின்னலைத் தோற்றவிக்கவே முனைகிறது. முன்னர் சீனா இதற்கான முயற்சியில் ஈடுபட்டது.கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், சீனாவின் அந்த திட்டங்களைக் குழப்பி விட்டது.

இலங்கை ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய சூழலை இந்தியாவும் அமெரிக்காவும் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இலங்கையுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடல்சார் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக, இந்தோ-னேசிய பசுபிக் கடற் பிராந்தியத்தில், அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் 6 விமானந்தாங்கிக் கப்பல்கள், 200 போர்க்கப்பல்களை நிறுத்தும் பாரிய கடலாதிக்க விரிவாக்க கொள்கையை அமெரிக்கா நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதன் ஒரு பங்காளியாக, இலங்கையையும் இணைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. இதன் ஒரு கட்டமாக, இலங்கையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும், உதவிகள் அமெரிக்காவிடம் இருந்து கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்து போயிருந்தன. இராஜதந்திர ரீதியான உறவுகளில் ஏற்பட்டளவுக்கு, பாதுகாப்பு உறவுகளில் மோசமான பாதிப்பு ஏற்படாது போனாலும், அவை வெறும் மனிதாபிமான உதவிகள் ஒத்துழைப்புகளாகவே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு கடைசியாகக் கிடைத்த மிக முக்கியமான பாதுகாப்பு உதவி என்றால், அது, 2010ஆம் ஆண்டு விமானப்படையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட, Real Time Data Link system தான். இதற்குப் பின்னர், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பாதுகாப்பு உதவிகள் எதுவும் அமெரிக்காவிடம் இருந்து கிடைத்திருக்கவில்லை.

போர்க்குற்ற விவகார இழுபறிகள் அதற்குத் தடையாக இருந்தது. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடல்சார் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப முனைகிறது.

இது மறைமுகமாக சீனாவை முடக்குகின்ற முயற்சியாக இருந்தாலும், அதனை வெளிப்படையாக கூற அமெரிக்காவோ, இலங்கையோ முன்வரப் போவதில்லை. ஏனெனில், சீனாவுடன் வெளிப்படையான பனிப்போரைத் துவக்க இந்த இரண்டு நாடுகளும் விரும்பவில்லை.

சுபத்ரா

tamilwin

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.