Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது !

Featured Replies

11133743_415764351928993_710292634283354

 

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது !

அது மொரீசியசு (Mauritius) (தமிழ் எண்கள் 
௦ – 0, 
௧- 1, 
௨- 2,
௩- 3, 
௪- 4, 
௫- 5, 
௬- 6, 
௭- 7, 
௮- 8, 
௯- 9) 

மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.5 தமிழில் ௫) இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரிசியசின் பல பகுதிகளில் ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களை தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் வாழ்கின்றனர்.. இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், மேலும் 3300 பேர் தமிழும் இன்னொரு மொழியும் வீட்டில் பேசுவதாகவும் என அரசுக் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்..

தமிழர்கள் திறமைவாய்ந்த உழைப்பாளிகளாக அறியப்பட்டனர். எனவே, மொரிசியசு அரசு, மொரிசியசு ரூபாய் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறித்து வெளியிடுகிறது. தைப்பூசம், தீபாவளிப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பல இன மக்களின் மொழிக் கலப்பால் மொரிசியசு கிரியோல் என்னும் மொழி உருவானது. இம்மொழியின் பல சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

என்று இந்தியாவில் தமிழர்கள் மொழியுரிமை பெற்று தமிழ் மொழி நாணயங்களிலும் பணத் தாள்களிலும் வரப்போகிறதோ ?

நன்றி - தூய தமிழ்ச்சொற்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டும் படியான... மகிழ்ச்சியான செய்தி.
நம்ம தமிழ்நாட்டு அரசு... தை பொங்கலன்று வருடப் பிறப்பா, சித்திரை மாதம் வருடப் பிறப்பா என்று, ஆராய்ந்து கொண்டுள்ளதை விட்டு....
ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு BLUE BIRD.

தமிழ்நாட்டில் தன்னுடைய தாய்மொழி தெலுங்கு செம்மொழி ஆகவேணும் என்பதற்காக தமிழை செம்மொழி ஆக்கியவர் கருனாநிதி தமிழ் தமிழ் என சத்தம் போடுபவரின் பூட்டபிள்ளகள் படிப்பது எல்லாம் ஆங்கில பள்ளிகளில் .

 

 

நல்ல விடயம், ஈழம் மலர்ந்து தனித்தமிழில் அனைத்தும் அமைய வேண்டும் என்பதே எமது அவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.