Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் - 8

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்

எட்டாம் பதிவு

20.05.2015

 

 

திங்கள் கூட்டம்

     மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் மூன்றாவது திங்கள் கூட்டம் கடந்த 09.05.2015-ல் தென்காசியில் நடைபெற்றது.

 

     நாம் தமிழர் அமைப்பின் தோழர் திரு. டெரிசன் (அலைமகன்) முன்னெடுப்பில், வழக்குரைஞர் திரு. சிவக்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் 30 பேர் கலந்து கொண்டனர். ஒரு பகல் எல்லை நடை பெற்ற அக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கருத்தியலின் அரசியல் அடித்தளம் பற்றியும், அதில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் வல்லுநர்களின் பங்களிப்பு பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

 

மாநாகன் இனமணி

     மின்னஞ்சல் பகிர்வாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த மாநாகன் இனமணி என்ற ஒற்றைப் பக்க ஓவியச் சிற்றேட்டின் 92 ஏடுகள் தோரணமாகக் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன. பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

 

தமிழ்ப்புத்தாண்டும் தொழூஉப் புகுத்தலும்

     தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாகவும், தொழூஉப் புகுத்தல் என்ற மஞ்சிவெருட்டு தொடர்பாகவும் உண்மைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுச் சான்றுகளை உயர் ஆய்வுக்குப் பயன்படும் வகையில் பட்டியல் இட்டுக் கொடுத்திருக்கிறார். இவற்றை வல்லுநர்களே மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மக்களிடம் புரிதலை உருவாக்கிய பிறகு தமிழ்ப்புத்தாண்டும், தொழூஉப் புகுத்தலும் எதிர்கொண்டுள்ள சட்டச்சிக்கலை முறியடித்துத் தமிழ் இனத்தின் ஆளுமையை எடுத்து நிறுத்த வேண்டும்.

 

     இவ்வாறாக உறுப்பினர்கள் மனம் விட்டுப் பேசியும், எதிரும் புதிருமாகக் கருத்தியல் திறனாய்வு செய்தும் கலந்து உரையாடல் கூட்டம் மாலைவரை இனிதே நகர்ந்தது.

 

நன்றி !

     கூட்டத்தில் கலந்து கொண்ட நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் தனது உளமார்ந்த நன்றியைத் தெரியப்படுத்துகிறது.

 

ஐந்தாவது முழுநிலவு

     09.05.2015-ல் நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் தனது எட்டாம் பதிவுச் செய்தியை வெளியிடுகிறது. இதுவரை வெளிவந்துள்ள அனைத்துப் பதிவுகளையும் படியெடுத்து முறையாகத் தொகுத்துக் கோப்பு இட்டு ஆவணப்படுத்தி அவற்றில் பிழைகளையும் திருத்தங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் எடுத்துக் காட்டிச் செம்மைப்படுத்த முன்வர வேண்டுமாய் உறுப்பினர்கள் அனைவரையும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அன்புடன் வேண்டுகிறது.

 

     பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி 132-ஆவது நாளில் கூடி வரவேண்டிய இவ்வாண்டின் ஐந்தாவது முழுநிலவு தோல்வி அடைந்தது.

 

அறிகுறிகள்

     வழக்கத்திற்கு மாறாக ஒரு நாள் முன்னதாகவே முதிர்ந்து தோன்றி 03.05.2015 அன்றே விரைவாக ஓடி மறைந்தது முழுநிலவு. 04.05.2015-ல் முறையாகத் தோன்றாமல் அன்று முன்னிரவு 7 மணிக்கு மேல் தோன்றி நடுஇரவில் தலைக்கு நேர்மேல் வராமல் பிந்தியதுடன் விடிந்த பின்னும் போகாது இருந்தது.

 

     இந்த அறிகுறிகள் முழு நிலவின் வழி நாளுக்கான அறிகுறிகள் ஆகையால் 04.05.2015 அன்று இரவில் தோன்றிய நிலவுக்கு முழு நிலவுத் தகுதியைத் தர இயலாது.

 

ஒருநாள் குறைவு

     இவ்வாண்டில் முதல் முறையாக 30 நாளில் ஒருநாள் குறைவு பட்டு 29-ம் நாளில், அதாவது 03.05.2015-ல் தோன்றிய நிலவையே முழுநிலவு நாளாகக் கணக்கில் கொள்ள வேண்டும்.

 

     அந்த நாளைச் சித்திரா பவுர்ணமி என்று கருதிக் கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களது புரிதல் நிலை. அந்த நிலவு இவ்வாண்டின் வைகாசி நிலவு என்பதும், அது ஒரு நாள் குறைவுபட்டு உள்ளது என்பதும் தமிழர்களின் கவலை.

 

அரவு தீண்டிய அறிகுறி

     இவ்வாண்டின் நான்காவது முழுநிலவை அரவு தீண்டிய அறிகுறியைத் தொடர்ந்து, அதனை அடுத்து வரும் முழுநிலவுகளில் முறையே நாள்குறைவு ஏற்படும் என்று அச்சப்பட வாய்ப்பு இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்டுள்ள செய்திகளில் இருந்து இவ்வாறான ஒரு பார்வை தோன்றுவதைத் தவிர்ப்பதற்கு இல்லை. ஆயினும் அதனை உறுதி செய்ய வேண்டுமாயின் உயர் ஆய்வு தேவைப்படுகிறது.

 

இழப்பு

     ஒரு திங்களின் தேய்பிறைக் கூட்டல் வளர்பிறையில் ஒருநாள் பிந்துதல் என்பது ஆண்டு நாட்களின் கணக்கீட்டில் ஈடுகட்ட முடியாத இழப்பு. அதுபற்றிப் பேசாது இருப்பதும், கவலைப்படாது இருப்பதும், அறியாது இருப்பதும் அறிவார்ந்த செய்கை ஆகாது.

 

     முழுநிலவு தடுமாறியதால் வெள்ளிக்கிழமை தடுமாறும். அதனை ஈடுகட்டிடத் தமிழர்கள் செவ்வாய்க் கிழமையைக் கணக்கிட்டு மீண்டும் வெள்ளிக்கிழமையைப் பொருத்துவர். அந்த நுட்பத்தில் தமிழர்கள் மட்டுமே இவ்வுலகில் அறிவு முன்னோடிகள். உரிய நாளில் முழுநிலவும் வெள்ளிக்கிழமையும் கூடி வர வேண்டுமானால் தைத்திங்கள் முழுநிலவு நாள் வரையிலும் காத்திருந்து கண்காணிக்க வேண்டும்.

 

நிமிர்வும் சீர்மையும்

     கடந்த ஆண்டில் ஏற்பட்ட பிழையினால் 7 முழுநிலவுகள் குறைவுற்று 353 நாட்களில் அந்த ஆண்டு சுருண்டது. மீண்டும் தைத்திங்கள் முழுநிலவே முறையாக நிமிர்ந்து சீர்மையை நிறைவு செய்து 30 நாட்களில் முழுநிலவாக மலர்ந்தது. அந்த முழுநிலவு இவ்வாண்டுக்கான முதல் முழுநிலவான படியால் அதனைத் தொடர்ந்து நான்காவது முழுநிலவு வரையில் 30 நாள் முறை காப்பாற்றப்பட்டது. நான்காம் நிலவை அரவு தீண்டியது. ஐந்தாம் நிலவு குறைவு பட்டது. இனிமேல் மார்கழி முழுநிலவு வரையிலும் இந்த நிலையே நீடித்து, அதாவது 29நாள் முறை நீடித்து அடுத்த தையில்தான் 30-ஐத் தொடமுடியுமோ என்று எவரும் ஐயப்படலாம்.

 

     இந்த நிலை நீடித்தால் இவ்வாண்டில் 8 முழு நிலவுகள் பிழைபட்டுப்  போவதுடன் இந்த ஆண்டுக்கான மொத்த நாட்கள் 352-ல் சுருண்டு விடவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த நாளில் கதிரவனின் தென்செலவுப்பயணம் நிறைவுற்றுச் சரியாக வடக்கு நோக்கித் திரும்புகிறதா அல்லது அடி (நிழல்) இற்றுப் போகிறதா என்பதனை அக்கறையோடு கண்காணிக்க வேண்டும்.

 

வல்லுநர்களின் பொறுப்பு

     இவ்வாண்டின் முழு நிலவுகளின் நாள் முதிர்வில் முதற்பிழை கண்டுகொள்ளப்பட்டுள்ள படியால், இனிவரும் நாட்களை உற்றுப் பார்த்து அடுத்த ஆண்டின் தொடக்க நாளை அறிவிக்க வேண்டிய பொறுப்பு அறிஞர்களுக்கு இருக்கிறது.

 

     அதனில் அக்கறையுள்ள வல்லுநர்களில் தமிழ் இனத்தாரைத் தக்கார் அவையம் தேடிக் கொண்டிருக்கிறது.

 

கண்டிப்பான செவ்வாய்

     கடந்த 03.05.2015-ல் 29 நாளில் நிலவு முற்றி உதிர்ந்து விட்ட நிலையில், அந்த நாளைத் தவிர்த்து அதன் வழிநாள் முறையில் 15-ஆம் நாளில் கண்டிப்பாக மறைநிலவு நாளைக் கணக்கிட வேண்டும். அந்த நாள் 18.05.2015-ல் அமைகிறது. அதில் எந்த ஐயப்பாடும் கிடையாது.

 

     பெருந்தச்சு நிழல் நாள் காட்டியைப் பயன்படுத்துவோர், செவ்வாய்க் கோட்ட நாளையும் நடப்புச் செவ்வாய் நாளையும் கண்டிப்பாகப் பொருத்தித் தவமுறையில் தம்மை அகநேர்த்தி செய்து கொண்டு முழுமையை எதிர்நோக்கி, வருவதை எதிர்கொள்ள வேண்டும்.

 

     நாட்களின் வேறுபாட்டை நன்கு விளங்கிக் கொண்டு அழகாகத் தாவி வர வேண்டும்.

  1. இந்தப் பிழைக்காகப் பொதுவில் யாரையும் குறை சொல்ல வேண்டாம்.
  2. குறிப்பாகத் தமிழ் அறியாத யாரையும் அச்சுறுத்த வேண்டாம்.
  3. கண்டிப்பாகத் தமிழ் அறிஞர்களை உறங்க விட வேண்டாம்.

தமிழ் வாடினால் அந்த வாட்டம் இயற்கையில் வாட்டத்தை ஏற்படுத்தி விடும். தமிழ் அறிஞர்கள் உறங்கினால் அறிஞர் உலகம் செத்து விடும். தமிழ் மலர்ந்தால் இயற்கை மலரும்.

 

தானாக நேர்த்தியாதல்

     18.05.2015-ன் மறைநிலவு நாளைத் தவிர்த்து அதன் வழிநாள் முறையில் 15-ஆம் நாளில் முழுநிலவு தோன்ற வேண்டும் என்று ஆசைப்படலாம். பிழை தானாகவே நேர்த்தியாகி 30 நாள் முறை மீண்டு விட்டது என்றால் அது நடக்கும். அதற்கு இம்முறை வாய்ப்புக் குறைவு. மாறாகக் கடந்த நிலவைப் போலவே 29-வது நாளில் அதாவது 01.06.2015-ல் முழு நிலவு முற்றி விடலாம்.

 

     அவ்வாறு தோன்றினால் ஆண்டு நாட்களில் அன்று வரையில் இரண்டு நாட்கள் விழுந்து விட்டதாகப் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது 162-ஆம் நாளில் வர வேண்டிய ஆறாவது முழுநிலவு 160-ஆம் நாளில் வந்து விட்டதாகக் கணக்கிடவேண்டும்.

 

மருந்து

     ஒரு வேளை 02.06.2015-ல் முழு நிலவு தோன்றி 30 நாட்கள் முறைமையானது மீண்டு விட்டது என்று உறுதி செய்யப்பட்டால் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று ஆய்வு செய்யலாம். அதிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுத் தக்க வேளையில் ஆட்டை நிமிர்வுக்கு மருந்திடலாம். காண்க மாநாகன் இனமணி 101.

 

     இவ்வாறாக எல்லாத் திக்குத் திசைகளில் இருந்தும் மாற்றுப் பார்வையை முன் வைத்துத் தமிழ்ப்புத்தாண்டு முயற்சியை ஊக்கப்படுத்தினால் ‘தமிழர் உலகம்’ தலை மலரும். அதுவே மலர் தலை உலகம் போலும் !.

 

     இது பற்றித் தற்போது தமிழர்கள் அக்கறை எடுத்துள்ள படியால், தமிழர்களின் ஊற்றமான மரபறிவின் வழி நின்று உண்மைத் தன்மையினை அறியவும், தக்க வைக்கவும் தக்கார் அவையம் துணிச்சல் பெற வேண்டும் என்பதுவே இப்பதிவின் வழியே வேண்டுதல்.

___---ooo000OOO000ooo---___

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் மரபறிவை மீட்டெடுக்க தமிழ் வல்லுநர்களைத் உலகம் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒரு தமிழ் வல்லுநரானால் - எந்த துறையானாலும் சரி, மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் சான்றோர் நீங்கள். விருப்பு தெரிவிக்க விரும்பினால்,

 

arivu.iyakkam [at] gmail.com க்கு ஒரு வரி எழுதுங்கள். நாம் இணைந்து நின்று தமிழை உலகை ஆளச் செய்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.