Jump to content

அதீத லாபத்துக்கு ஆசைப்பட்டு கோழிப் பண்ணைகள் செய்யும் முறைகேடுகள்!


Recommended Posts

பணக்கோழி கேட்கும் தீனி!
 
hen_2420926f.jpg
 
அதீத லாபத்துக்கு ஆசைப்பட்டு கோழிப் பண்ணைகள் செய்யும் முறைகேடுகள்!
 
கோழிக்கறியைச் சாப்பிடும் யாரும் கோழிப்பண்ணை எப்படிச் செயல்படுகிறது, கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன, அங்கு சுகாதாரம் எப்படி இருக்கிறது என்ற கவலையே இல்லாமல், வேளாவேளைக்குக் கோழிக் கறியை அவசர அவசரமாக உள்ளே தள்ளுவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
 
இங்கிலாந்தின் மேற்குப்பகுதி நெடுகிலும் மிகப் பிரம்மாண்டமான ‘கோழி ஆலைகள்’ முளைத்து வருகின்றன. ‘பண்ணைகள்’ என்று கூறாமல் ‘ஆலைகள்’ என்று கூறுவதற்குக் காரணம், இவை ஆலைகளைப் போலவே செயல்படுவதுதான். நரகம்கூடப் பரவாயில்லை, இந்த ஆலைக்குள் நுழைந்தவுடனேயே உங்களுக்கு வாந்தி வருவதைப் போல புரட்டல் ஏற்படும். மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் மட்டுமல்ல, கண்ணுக்கு எதிரில் தென்படும் அசிங்கங்களாலும்தான்.
 
பண்ணைகளா தொழிற்சாலைகளா?
 
மிகப் பெரிய 2 பிராய்லர் ஆலைகள் ஹெர்ஃபோர்ட் ஷைரின் தங்கப் பள்ளத்தாக்கில் திட்டமிடப்பட்டுவருகின்றன. பிரிட்டனில் உள்ள மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலைகளின் ஒவ்வொரு கொட்டகையும் 90 மீட்டர்கள் (279 அடி) நீளம். 40,000 கோழிகளை இங்கே வளர்க்க முடியும். 40 நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கோழிகள் வெளியே எடுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, இறைச்சி எடுக்கப்படும். பிரிட்டனில் இப்போதைக்குச் சுமார் 2,000 கோழி ஆலைகள் இருக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளில் இறைச்சியின் தேவை இரண்டு மடங்காகிவிட்டது. ஆலைகளில் ஓசையும் தூசும் துர்வாடையும் வாகனங்களின் இடையறாத போக்குவரத்தும் இருக்கும். எல்லாமே இயந்திரமயமாகிவிடுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால், அவர்கள் அருவருப்பான வேலைகளைச் செய்ய வேண்டும். தினமும் செத்துவிழும் கோழிகளை எடுத்துவந்து பீப்பாய்களில் அடைக்க வேண்டும். எச்சங்களும் இறகுகளும் பரவிக்கிடக்கும் தரையிலிருந்து கோழிகளைச் சேகரிக்க வேண்டும். எல்லாக் கோழிகளும் பிடிக்கப்பட்டு வெட்டுவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, தரையைச் சுரண்டி, தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.
 
அப்போது கிளம்பும் புழுதியில் கோழிகளின் எச்சம், அவற்றின் உடல்களிலிருந்து உதிர்ந்த செதில் போன்ற தோல், சிறு பூச்சிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், அகநச்சுப் பொருட்கள், புறநச்சுப் பொருட்கள், கால்நடைகளுக்கான மருந்துகளின் எச்சம், பூச்சிமருந்துகளின் எச்சம், அம்மோனியா சல்பைடு, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற அனைத்தும் கலந்திருக்கும். இது மிகவும் கொடிய நச்சுக் கலவை. இந்தக் குப்பையைப் பெருக்கும் கோழிப்பண்ணைத் தொழிலாளர்களில் 15% பேர் கடுமையான மார்புச் சளியால் பாதிக்கப்படுகின்றனர்.
 
முறைகேடுகளின் காவல் தெய்வங்கள்
 
இந்தக் கோழி ஆலைகளின் கூரைகள், உள்ளே இருக்கும் நச்சுக்காற்றை வெளியேற்றும் வசதிகள் இல்லாதவை. இருந்தும் இதை பிரிட்டன், ‘மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைந்த கூரைகள்’ என்று பெருமை பேசுகிறது. ஐரோப்பியக் கண்டத்தில் எந்த நாட்டிலும் இப்படியொரு அவலம் கிடையாது. இதுமட்டும் பண்ணையாக இல்லாமலிருந்தால் உள்ளிருக்கும் நச்சுக்காற்றை அவ்வப்போது வெளியேற்றும் நவீன காற்றுப் போக்கிகள் பொருத்தப்படாவிட்டால், இந்த ஆலைக்கே அனுமதி கிடைத்திருக்காது. இதில் உள்ளேயிருக்கும் தூசுகளை மட்டுமல்ல, துர்நாற்றத்தையும் அவ்வப்போது வெளியேற்றும் ஏற்பாடு மிகமிக அவசியம். ஆனாலும், ஆதிக்க சக்திகள் இந்தத் தொழிலுக்குக் காவல் தெய்வங்களாக இருப்பதால் இந்த முறைகேடுகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. இந்த ஆலைகள் ஆலைச் சட்டக் கட்டுப்பாடுகளிலிருந்தும் திட்டமிட்ட அமைப்பு முறைகளிலிருந்தும் வரி விதிப்பிலிருந்தும் விலக்கு பெற்றவை. ஹெர்போர்ட்ஷைர் கவுன்டி கவுன்சில், இந்தப் பண்ணைகளைப் பள்ளிகளுக்குப் பக்கத்தில்கூட அமைக்க அனுமதி வழங்கிவிட்டது. இதிலிருந்து வெளியாகும் நச்சுப் புழுதி குறித்தோ துர்நாற்றம் குறித்தோ அது கவலைப்படவில்லை.
 
கொழுக்க வைக்கும் கொடூரம்
 
கோழி ஆலைகளுக்குள் நடப்பதெல்லாம் கொடூரம். மிக வேகமாக வளர்ந்து விற்பனைக்குத் தயாராக வேண்டுமென்பதால், தீனியைத் திணித்து நகர விடாமல் நெருக்கமாக அடைத்துவைக்கிறார்கள். உடலின் எடை அதிகமாகிக்கொண்டே போவதால் நடக்கக்கூட முடியாமல் இவை கீழே கொட்டிக்கிடக்கும் ரசாயன, பூச்சிமருந்து, எச்சம், தீனி ஆகியவை கலந்த கலவை மீதே படுத்துவிடுகின்றன. பெரும்பாலான கோழிகளின் பாதங்கள் ரசாயனங்கள் காரணமாக வெந்துவிடுகின்றன. மார்பில் சதை கிழிந்து ரத்தம் வடிகிறது. தோலை உரித்து வெட்டிய பிறகு அவற்றின் எடை, தோற்றத்தைப் பொறுத்து வகைப்படுத்துகிறார்கள். இதில் ‘ஏ’ கிரேடு என்று வகைப்படுத்துவதை முழுதாக அப்படியே ‘பேக்’ செய்கிறார்கள். மற்றவற்றைக் கீறியும் வெட்டியும் எரித்தும் பாகம் பாகமாகச் சிதைக்கிறார்கள். சில உறுப்புகளைத் தனியே வெட்டியெடுத்து தனி விலை வைத்து விற்கிறார்கள்.
 
இந்த ஆலைகளால் தொற்றுநோய்கள் வேகமாகப் பரவுகின்றன. பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை ஊட்ட மருந்துகளை ஊட்டுகின்றனர். இந்த மருந்துகளைக்கூட டாக்டர்களின் பரிந்துரைப்படி, அவர்களுடைய மேற்பார்வையில்தான் அளிக்க வேண்டும். ஆனால், அது தொடர்பான ஆவணங்கள் ஆலைகளிடமும் இல்லை, அரசிடமும் இல்லை. இந்தக் கோழிகளுக்கு ஊட்டப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் அவற்றின் இறைச்சியில் கலந்துவிடுகின்றன. கோழி இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்கள் உடலிலும் அந்த மருந்துகள் சேர்கின்றன. ஏதேனும் வியாதிகளுக்காக மருந்து சாப்பிடும்போது அது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய உடலில் புகுந்த நோய் எதிர்ப்புக் கிருமிகள், சாதாரண நோய் எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்பட மறுக்கின்றன. எனவே, அவர்களை நோய் தாக்கினால் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாகிவிடுகிறது.
 
அரசின் அலட்சியம்
 
இந்தக் கோழிகளுக்குப் பெரும்பாலும் சோயா மொச்சைதான் உணவாகத் தரப்படுகிறது. இதைப் பயிரிடுவதற்காகக் காடுகளை அழித்து பயிர் சாகுபடி செய்கிறார்கள். எத்தனை பிராய்லர் ஆலைகள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரம் உள்ளாட்சி அமைப்பிடம் இல்லை. மக்களைக் கேட்டால், கடந்த 12 மாதங்களில் மட்டும் 42 பிராய்லர் ஆலைகள் முளைத்திருப்பதாகக் கூறுகின்றனர். அரசின் புள்ளிவிவரமோ 2000 முதலே 21 ஆலைக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2010 முதல் 31 புதிய ஆலைகளுக்கு ஒப்புதல் தந்திருப்பதாகப் பிறகு அதுவே ஒப்புக்கொள்கிறது. இந்தக் கோழி ஆலைகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும், எப்படி நிர்வகிக்க வேண்டும் என்ற உத்தியெல்லாம் அரசிடம் இல்லை. இந்த ஆலைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகுறித்து மதிப்பிட வேண்டும் என்றுகூட அரசு நினைக்கவில்லை.
 
அப்படியானால், கோழி எப்படி வளர்க்கப்பட வேண்டும்? ஆலைகளில் வைத்து வளர்க்காமல் சுதந்திரமாகத் திறந்த வெளியில் சுற்றித்திரியுமாறு (நாட்டுக் கோழிகளாக) வளர்க்க வேண்டும். ஆனால், இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் கால்நடைகளையும் கோழி போன்ற பறவையினங்களையும் வளர்க்கிறவர்கள் குறுகிய காலத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இயற்கைக்கு முரணாகத் தீனி கொடுத்தும் மருந்துகளை உள்செலுத்தியும் நாசப்படுத்துகிறார்கள்.
 
கோழி வளர்ப்பை புத்திசாலித்தனமாக செய்யத்தான் முடியவில்லை. உண்பதையாவது குறைத்துக்கொள்ளலாம் அல்லவா? கோழியிறைச்சியால் நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை இப்படித்தான் குறைத்துக்கொள்ள முடியும். கோழி சாப்பிடாமல் பெரும்பாலானவர்களால் இருக்கவே முடியாது என்று தெரியும். நம்முடைய பாட்டனும் முப்பாட்டனும் கோழி இறைச்சி சாப்பிட்டவர்கள்தான். ஆனால், அப்போது கோழி இறைச்சி உருவான விதமும் இப்போது உருவாகும் விதமும் வேறல்லவா?
 
© ‘தி கார்டியன்’, சுருக்கமாகத் தமிழில்: சாரி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=rpbtBgLfl90

 

இந்தக் கணொளியை பார்த்தால், கோழி சாப்பிடவே... மனம் வராது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
    • வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது! யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1400407
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.