Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ஆர்வத்தைத் தூண்ட செல்போன் ‘ஆப்’: சிங்கப்பூர் அரசு அறிமுகம்

Featured Replies

eshwaran_2424022f.jpg

 

எஸ்.ஈஸ்வரன்
 
மக்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தைத் தூண்டவும் இளம் குழந்தைகள் தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் ‘அரும்பு’ என்ற பெயரில் செல்போன் செயலியை (ஆப்) சிங்கப்பூர் அரசு அறிமுகம் செய்துள்ளது.
 
சிங்கப்பூரில் 14-வது தமிழ் இணையதள மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ் பேசக்கூடிய சிங்கப்பூரைச் சேர்ந்த 150 பேரும் 10 நாடுகளிலிருந்து வந்த 200 பேரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அரும்பு என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
 
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் அந்நாட்டு பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேசியதாவது:
 
சிங்கப்பூரின் 4 அலுவல் மொழி களில் ஒன்றாக திகழ்கிறது தமிழ். இந்த மொழியைப் பரப்பு வதற்காக தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு எப்போதும் ஆதரித்து வருகிறது.
 
அந்த வகையில் இப்போது, அரும்பு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. பள்ளியில் சேரத் தயாராக உள்ள குழந்தைகளும் இதன் மூலம் விரைவில் பயனடைவார்கள். இந்த செயலி, இளம் குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழி குறித்த ஆர்வத்தைத் துண்டக்கூடிய ஒலி, ஒளி காட்சியைக் கொண்டிருக்கும்.
 
தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘சிங்கை அகரம்’ என்ற மென் பொருள் மற்றும் செல்போன் செயலி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்திலிருந்து தமிழ், தமிழிலிருந்து தமிழ் பொருள் அறிவதற்கான டிஜிட்டல் டிக் ஷ்னரி ஆகும்.
 
எந்த ஒரு மொழியும் வழக்கத்தில் நீடித்திருக்க வேண்டுமானால், அந்த மொழியைப் பயன்படுத்துமாறு இளம் தலைமுறையினரை தூண்ட வேண்டும்.
 
அவ்வாறு செய்யாத காரணத்தால் பல மொழிகள் வழக்கொழிந்து வருகின்றன.
 
தமிழ் மொழியையும் தொழில் நுட்பத்தையும் இணைக்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்த மொழி நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கும். மேலும் தமிழ் மொழியின் பாரம் பரியத்தைக் கொண்டாடுமாறு எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழுக்கு என ஒரு நாட்டை உருவாக்கின பின் இதுகளை பற்றி கதைப்பது நல்லது .தமிழ் யுனிகோட் இடம் எடுக்கவே பிச்சை எடுக்கவேண்டி உள்ளது .இதில் சிங்களம் தேவைக்குஅதிகமாக வைத்துள்ளது ஏனெனில் அவர்களுக்கு ஒரு நாடு உள்ளது இவ் அதிகபடியான இடத்தை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் என கேட்போருக்கு உதாரணமாய் ஆங்கிலத்தில் இருந்து சைனா மொழிபெயர்ப்பு இலகுவாகவும் அதே நேரம் சைனாவில் இருந்து ஆங்கிலத்துக்கு இலகுவாகவும் உள்ளதற்கு காரணம் அவர்களின் அதிகப்படியான யுனிகோட் இடம் அவர்களினதே. இதை சிங்களம் அறியும், 

 

ஆனால் நமக்கு என்ன நடக்குது இருகின்ற இடமே காணாது இதுக்குள்ளை தேவையற்ற வடமொழி எழுத்துக்களை யுனிகோட்டில் பரிந்துரை செய்யபட்டுள்ளது இதில் நகைச்சுவை என்னவென்றால் தமிழ்நாட்டில் அமைக்கபட்ட இந்த தமிழ் யுனிகோட் குழுமத்தில் இந்தியையும் சமஸ்கிருததத்தையும் ஆராதிப்பவர்களே இடம் பெற்றுள்ளமை .

  • கருத்துக்கள உறவுகள்

இது நடப்பிலிருக்கும் தமிழ் யுனிகோடு முறை..

 

 

Tamilunicodetable.jpg

 

 

 

 

இது சர்ச்சைக்குரிய புதிதாக அறிமுகப்படுத்தப்போகும் தமிழ் யுனிகோடு முறை..

 

TUNE-Encoding_Chart.jpg

 

 

 

புதிய தமிழ் யுனிகோடு குறிமுறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.