Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடனில் இயங்கிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை சேமிக்கும் நிறுவனமாக இடைக்கால சபை மாற்றியுள்ளது - சிதத் வெத்தமுனி

Featured Replies

கடனில் இயங்கிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை சேமிக்கும் நிறுவனமாக இடைக்கால சபை மாற்றியுள்ளது - சிதத் வெத்தமுனி

 

 

285 மில்­லியன் ரூபா மேல­திகப் பற்­றுடன் இருந்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை இடைக்­கால நிரு­வாக சபை பொறுப்­பேற்ற இரண்டு மாதகாலத்தில் நிதியை சேமிக்கும் உறு­தி­யான நிறு­வ­ன­மாக மாற்­றி­யுள்­ள­தாக இடைக்­கால நிரு­வாக சபைத் தலைவர் சிதத் வெத்­த­முனி கூறினார்.

இடைக்­கால நிரு­வாக சபையின் மாதாந்த முன்­னேற்­ற­கர நட­வ­டிக்­கைகள் குறித்து செய்தி­யா­ளர்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்தும் வகையில் செய்தியாளர்களு­ட ­னான சந்­திப்பு நேற்­று­முன்­தினம் ஏற்­பாடு செய்யப்பட்டிருந்­தது.

358avf5.jpg

அநா­வ­சிய செல­வி­னங்­களைக் குறைத்து அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு மாத்­திரம் நிதி ஒதுக்­கப்­ப­டு­வதே இதற்­கான முக்­கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.

 

இது குறித்து இடைக்­கால நிர்­வாக சபையின் பொரு­ளாளர் லுசில் விஜேவர்தன விளக்­கு­கையில், ‘‘ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தை நாங்கள் பொறுப்­பேற்­ற­போது வங்கிக் கணக்கில் 285 மில்­லியன் ரூபா மேல­தி­கப்­பற்று (கடன்) இருந்­தது.

 

ஆனால் இப்­போது வங்­கியில் போதிய நிதி வைப்­பி­லி­ருக்­கின்­றது.

 

தற்­போது 190 மில்­லியன் ரூபா வங்கிக் கணக்கில் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளது.

 

அத்­துடன் ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் மற்­றொரு வங்கிக் கணக்கில் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளது.

 

இத­னை­விட இம்மாதம் மேலும் 2.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஸ்ரீலங்கா கிரிக்­கெட்­ நி­று­வ­னத்­திற்கு தரு­வ­தாக சர்­வ­தேச கிரிக்கட் பேரவை உறு­தி­ய­ளித்­துள்­ளது.

 

எனவே அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு நிதி சார்ந்த எவ்­வித பிரச்­சி­னையும் இருக்­காது’’ என்றார்.

 

இதே­வேளை பாகிஸ்தான் அணியின் இலங்­கைக்­கான கிரிக்கெட் விஜ­யத்தை முன்­னிட்டு குஷில் குண­சே­க­ர­வினால் பிரே­ரிக்­கப்­பட்­டுள்ள வரவு–செலவு கணக்கு விப­ரத்தின் பிர­காரம் செல­வி­னத்தை 25 மில்­லியன் ரூபாவால்  குறைக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது என சிதத் வெத்­த­முனி தெரி­வித்தார்.

 

‘‘மிகவும் அத்­தி­யா­வ­சிய தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கு மாத்­தி­ரமே நிதியை செல­விட இடைக்­கால நிரு­வாக சபை தீர்­மா­னித்­துள்­ளது.

 

இலங்­கை­யி­லுள்ள சகல சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்­கு­க­ளிலும் உள்­ளக அரங்­கு­களை அமைப்­பது அத்­தி­யா­வ­சி­ய­மா­கி­யுள்­ளது.

 

இலங்­கை­யி­ட­மி­ருந்து ஆலோ­சனைத் திட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்ட பங்களா­தேஷில் சகல சர்­வ­தேச மைதா­னங்­க­ளிலும் உள்­ளக அரங்­குகள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் உதவித் தலைவர் மூலம் அறிந்­து­கொண்டேன்.

 

ஆனால் நாங்­களோ பத்து வரு­டங்கள் பின்­னி­லையில் உள்ளோம்.

 

எனவே என்ன விலை­கொ­டுத்­தேனும் முத­லா­வ­தாக கெத்­தா­ராம ஆர்.பிரேமதாச விளை­யாட்­ட­ரங்கில் உள்­ளக அரங்கை அமைப்போம்.

 

சுழல்­பந்து வீச்­சுக்கு ஏது­வான ஆடு­களம், வேகப்­பந்து வீச்­சுக்கு ஏது­வான ஆடுகளம், பந்­துகள் எகி­றக்­கூ­டிய ஆடு­களம், துடுப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு சாதக­மான ஆடு­களம் ஆகிய நான்கு வகை­யான ஆடு­க­ளங்­க­ளுடன் இந்த உள்­ளக அரங்கு அமைக்­கப்­படும்.

 

இந்த ஆடு­க­ளத்­திற்­கான அத்­தி­வாரம் எதிர்­வரும் ஜூலை 2ஆம் திகதி நாட்டப்படும்.

 

தேசிய பொறி­யியல் கூட்­டுத்­தா­பனம் உள்­ளக அரங்கை நிர்­மா­ணிக்கும்.

 

மிகக் குறு­கிய காலத்தில் இந்த அரங்கு நிர்­மா­ணிக்­கப்­படும் என நான் நம்புகின்றேன். அத்­துடன் நீச்சல் தடா­கமும் அமைக்­கப்­படும்.

 

உள்­ளக அரங்கில் அதி­உயர் ஆற்­றல் ­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான வசதிகளும் செய்­து­கொ­டுக்­கப்­படும்.

 

மழைக்­கா­லங்­க­ளிலும் சரி, காலை, மாலை வேளை­க­ளிலும் சரி தாங்கள் விரும்­பிய நேரத்தில் வீரர்கள் இந்த உள்­ளக அரங்கில் பயிற்­சி­களில் ஈடுபடக்கூ­டி­ய­தாக இருக்கும்’’ என சிதத் வெத்­த­முனி மேலும் கூறினார்.

 

பாட­சாலை வீரர்­க­ளுக்கு ஒழுக்க விதிகள்

 

பாட­சாலை கிரிக்கெட்­து­றைக்­கென ஒழுக்கவிதிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் எனவும், அது குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வைக்கு அறி­விக்­கப்­படும் எனவும் கிரிக்கெட் மத்­தி­யஸ்­தர்­க­ளுக்­கான சகல அம்­சங்­க­ளையும் கொண்ட கொள்கை ஆவணம் ஒன்று தயா­ர­ரிக்­கப்­படும் எனவும் சிதத் வெத்­த­முனி கூறினார்.

 

தொலைக்­காட்சி ஒளிப்­ப­ரப்பு உரிமம்

 

நீண்­ட­காலத் திட்ட அடிப்­ப­டை­யிலும் இர­சி­கர்­களின் எண்­ணிக்கை அடிப்படையிலும் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பு உரி­மையை தேசிய ரூபவாஹினி கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு வழங்­கி­ய­தாக கிரிக்கெட் இடைக்­கால நிர்­வாக சபையின் தலைவர் குறிப்­பிட்டார்.

 

‘‘கிரிக்கெட் போட்­டி­களை நேரடி ஒளி­ப­ரப்பு செய்­வ­ தற்கு சி.எஸ்.என். நிறுவனமும் மனு தாக்கல் செய்­தி­ருந்­தது.

 

ஆனால் நிதி வச­திகள் மற்றும் நீண்­ட­காலத் திட்­டங்கள் ஆகி­ய­வற்றை நோக்கிய­போது சி.எஸ்.என்­னுக்கு அநீதி இழைக்­கப்­ப­டா­த­வாறு நாங்கள் செயற்­படத் தீர்மானித்தோம்.

 

அதன்படி அந்த நிறுவனத்திற்கு போதிய கால அவகாசம் வழங்கி வங்கி உத்தரவாதம் ஒன்றை வழங்குமாறு கோரினோம்.

 

ஆனால் குறிப்பிட்ட காலத் திற்குள் அவர்கள் அதனைச் சமர்ப்பிக்கத் தவறியதால் ரூப வாஹினிக்கு ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டது.

 

மேலும் டென் ஸ்போர்ட்ஸுடனும் சில சிக்கல்களைத் தீர்க்க வேண்டியுள்ளது.

 

அவர்கள் எமது கோரிக்கைகளுக்கு உடன்படத் தவறினால் வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் பற்றி சிந்திக்க நேரிடும்’’ என சிதத் வெத்தமுனி மேலும் கூறினார்.

 

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை வெல்லும் குறிக்கோள்

 

19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்­கையை முதல் தடவையாக சம்­பி­ய­னாக்கும் குறிக்­கோ­ளுடன் திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இடைக்­கால நிர்­வாக சபையின் பிரதித் தலைவர் குஷில் குண­சே­கர தெரி­வித்தார்.

 

19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளின் மூன்­றா­வது அத்­தி­யாயம் 2000ஆம் ஆண்டு கொழும்பில் நடை­பெற்­ற­போது இறுதி ஆட்­டத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்­தது.

 

அதன் பின்னர் 2010இல் அரை இறு­திக்கு முன்­னே­றி­யதே 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணியின் அதி சிறந்த பெறு­தி­யாகும்.

 

எனவே, 2016இல் பங்­க­ளா­தே­ஷிலும் 2018இல் நியூ­ஸி­லாந்­திலும் நடைபெறவுள்ள 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்­டி­களில் இலங்கையை சம்­பி­ய­னாக்கும் குறிக்­கோ­ளுடன் பாட­சாலை கிரிக்கெட் வீரர்க­ளுக்கு பயிற்­சி­களை அளிப்­ப­தற்­கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என குஷில் குணசேகர மேலும் கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10529#sthash.CKMzmsOQ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.