Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை பதம் பார்த்த ஆனந்த் அபார வெற்றி

Featured Replies

நார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை பதம் பார்த்த ஆனந்த் அபார வெற்றி

 
கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த். | படம்: ராய்ட்டர்ஸ்.
கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த். | படம்: ராய்ட்டர்ஸ்.

5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 4-வது சுற்றில் வீழ்த்தி நார்வே செஸ் போட்டித் தொடரில் 3-வது இடம் பிடித்தார். இந்தத் தோல்வியினால் கார்ல்சன் கடைசி இடத்துக்குச் சென்றார்.

முதல் 3 போட்டிகளில் டிரா செய்த ஆனந்த், இந்த முறை வெற்றிக்காக முனைப்பு காட்டி ஆடினார். வெள்ளைக்காய்களில் தனது நகர்த்தலிலும் தடுப்பாட்டத்திலும் சாதுரியம் காட்டிய ஆனந்த் வெற்றியைச் சாதித்தார்.

வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் தொடக்கத்தில் பழைய கால தடுப்பு உத்தியை மேற்கொண்டர். அதாவது தொடக்கத்தில் ராஜாவுக்கு நேராக உள்ள சிப்பாயை 2 கட்டங்கள் நகர்த்த கார்ல்சென் அதற்கு நேராக உள்ள தனது சிப்பாயைக் கொண்டு வந்து நிறுத்தி முட்டுக்கட்டை போட ஆனந்த் வலதுபுறம் உள்ள குதிரையை இடப்புறமாக நகர்த்தினார்.

கார்ல்செனும் தனது வலதுபக்க குதிரையை இடப்புறமாக வெளியே கொண்டு வந்தார். உடனே ஆனந்த் வெள்ளைக் கட்டத்தில் இருந்த தனது பிஷப்பை 4 கட்டங்கள் குறுக்காக முன்னேற்றி கார்ல்செனின் எல்லைக்குள் நுழைந்து விடுவதாக அச்சத்தை ஏற்படுத்தினார். ஆனால் கார்ல்சென் தனது வலப்புற யானைக்கு முன்னால் உள்ள சிப்பாயை ஒரு கட்டம் நகர்த்தி ஆனந்தை மிரட்டினார். இவரும் பின்னால் வந்தார்.

அதன் பிறகு சிப்பாய்களின் ஆதிக்கம் தொடர இருவரது நகர்த்தல்களும் முட்டுக்கட்டை நிலைக்கு வந்தன. ஆட்டத்தின் 17-வது நகர்த்தலில் ஆனந்த் தனது கறுப்பு கட்ட பிஷப்பை குறுக்கக வலப்புறமாக 4 கட்டங்கள் நகர்த்தி ஒருமுடிவுடன் கார்ல்செனின் எல்லைக்குள் சென்றார். 21-வது நகர்த்தலில் ஒரு அச்சுறுத்தலுக்காக தனது குதிரை ஒன்றை வலது மூலைக்கு அவரது எல்லைக்கு கொண்டு சென்றார் ஆனந்த். அதாவது கார்ல்சென் பிஷப்பால் குதிரையை வெட்டியாக வேண்டும், அப்படி வெட்டினால் அவரது பிஷப்பை காலி செய்ய ஏற்கெனவே தனது பிஷப்பை அங்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். ஆனந்த் குதிரையையும் கார்ல்சென் பிஷப்பையும் இழந்தனர்.

அடுத்த நகர்த்தலில் கார்ல்சென் ஆனந்தின் இடப்புற யானைக்கு நேராக 3 கட்டங்களில் இருந்த சிப்பாயை வீழ்த்தினார். ஆனந்த் யானையை ஒரு கட்டம் முன்னேற்ற கார்ல்சன் வெட்டுபடுவதற்காகவே தனது சிப்பாயையும் ஒரு கட்டம் நகர்த்தி யானைக்கு நேராக நிறுத்தினார். ஆனால் தனது சிப்பாயால் ஆனந்த் அவரது சிப்பாயை வெட்டித்தள்ளினார்.

27-வது மூவில் கார்ல்சென் தனது குதிரையை அதிக ரிஸ்குடன் ஆனந்தின் இடப்புற யானையை காலி செய்ய குறிவைத்து நகர்த்தினார். ஆனால் இந்த நடைமுறையில் ஆனந்த், கார்ல்செனின் குதிரையை காலி செய்ய, கார்ல்சென் ஆனந்தின் முக்கியமான பிஷப்பை வெட்டினார். அதன் பிறகு தனது பவர் காய்களை ராஜா இருக்கும் வலப்புறத்துக்கு கொண்டு வந்தார் ஆனந்த். 30-வது மூவில் ராணியை வெளியே எடுத்தார் ஆனந்த். கார்ல்சென் குதிரையால் செக் வைத்தார்.

அப்போது ஆனந்த் தடுப்பாக ராணியைக் காப்பாற்ற கார்ல்சென் தனது வெள்ளைக் கட்ட பிஷப்பை, ஆனந்தின் யானையை குறிவைக்குமாறு ஒரு நகர்த்தலை மேற்கொண்டார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக எஃப்-3 யில் இருந்த ஆனந்தின் யானையை கார்ல்சென் பி5-யில் இருந்த தனது பிஷப்பால் அகற்றினார். ஆனால் ஆனந்துக்கு சுலபமாக பிஷப்பை அகற்ற முடிந்தது, காரணம் ஏற்கெனவே எஃப்2வில் நிறுத்தியிருந்த யானையை ஒரு கட்டம் பின்னால் நகர்த்தி கார்ல்செனின் இன்னொரு பிஷப்பையும் பறிமுதல் செய்தார். இப்போது கார்ல்சன் வசம் ஒரு ராணி, 2 யானை, ஒரு குதிரை 6 சிப்பாய்கள் எஞ்சியிருந்தன.

மேலும் ஓரிரண்டு சிப்பாய்கள் பரிமாறிக் கொள்ளப்பட ஆனந்த் எச்5 நிலைக்கு தனது ராணியை முன்னேற்றினார். கார்ல்சென் உடனே தனது ராஜாவை இடது மூலைக்கு கொண்டு சென்றார். பிஷப்பை ராஜாவுக்கு அருகே கொண்டு சென்று ஆனந்த் செக் வைக்க, கார்ல்சன் யானையால் ஆனந்தின் பிஷப்பை வெட்டினார். ஆனால் கார்ல்சனின் யானையைக் காவு வாங்க காத்திருக்கும் ஆனந்தின் சிப்பாயைக் கவனிக்கவில்லை, ஆனந்த் முறையாக யானையை பலிவாங்கினார். இதில் இவரது சிப்பாயும் கார்ல்சனின் ராணியினால் வெட்டப்பட்டது. ஆட்டம் உச்சக் கட்டத்தை நெருங்கியிருந்தது.

இந்நிலையில் இருவருக்கும் வேறு வழி ஏற்படவில்லை, வலது மூலையில் இருந்த ராணியை இருவரும் வெட்டிக்கொண்டனர். இருவரது ராணியும் காலி.

இப்போது ஆனந்திடம் ராஜா, ஒரு யானை, ஒரு குதிரை 5 சிப்பாய்கள் மட்டுமே இருந்தது. அவரிடமும் இதே பவர்களே எஞ்சியிருந்தன. அப்போது கார்ல்சனின் யானையக் குறிவைத்து ஆனந்த் தனது குதிரையை நகர்த்த இதனை கார்ல்சன் கோட்டைவிட்டது அதிசயமாகவே இருந்தது. அவர் தனது ராஜாவை ஒரு கட்டம் முன்னேற்றி யானைக்கு காவலிட்டார். ஆனால் மீண்டும் இருவெட்டுகள், ஆனந்த் குதிரையால் யானையைக் காலி செய்ய, கார்ல்சன் தன் ராஜாவினால் ஆனந்தின் குதிரையை அகற்றினார். அடுத்ததாக எஃப்3யில் இருந்த தனது யானையை கார்ல்சன் முனையில் உள்ள எஃப்3-யிற்கு நகர்த்தினார் ஆனந்த். பிறகு ராஜாவையும் தனது யானைக்கு நேராக கொண்டுவர, கார்ல்சனின் ராஜா முடங்கியது. ஆட்டம் முடிந்தது ஆனந்த் வெற்றி பெற்றார்.

ஆனந்தின் வெற்றியை செஸ் நட்சத்திரம் கேரி காஸ்பரோவ் பாராட்டினார்.

 

http://tamil.thehindu.com/sports/நார்வே-செஸ்-உலக-சாம்பியன்-கார்ல்சனை-பதம்-பார்த்த-ஆனந்த்-அபார-வெற்றி/article7336903.ece

  • தொடங்கியவர்

நார்வே செஸ்: ஆனந்த் ‘டிரா’

 

 

Anand, Nakamura, Norway Chess

ஸ்டாவன்கர்: நார்வே செஸ் தொடரில், இந்தியாவின் ஆனந்த், அமெரிக்காவின் நகமுரா மோதிய 5வது சுற்றுப் போட்டி ‘டிரா’ ஆனது.      

நார்வேயில் உள்ள ஸ்டாவன்கர் நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் ஆனந்த், ‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன், ஆர்மேனியாவின் ஆரோனியன் உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.      

நான்கு சுற்றின் முடிவில் ஒரு வெற்றி, 3 ‘டிரா’ உட்பட 2.5 புள்ளிகளுடன் ஆனந்த் 3வது இடத்தில் இருந்தார். ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர்.      

இதில் ஆனந்த் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டியின் 28, 29வது நகர்த்தலில் இருவரது ராணியும் காலியாகின. பின் 38வது நகர்த்தலில் நகமுரா யானையை வைத்து ஆனந்தின் ராஜாவுக்கு ‘செக்’ வைத்தார். ஆனந்த் தனது ராஜாவை முன்னோக்கி நகர்த்தினார். போட்டியின் 39வது நகர்த்தலில் ஆனந்த் குதிரையை வைத்து நகமுராவின் ராஜாவுக்கு ‘செக்’ வைத்தார். ஆனால் நகமுரா தனது பிஷப்பை வைத்து ஆனந்தின் குதிரையை காலி செய்தார். விறுவிறுப்பான இப்போட்டி 45வது நகர்த்தலின் போது ‘டிரா’ ஆனது.

மற்றொரு 5வது சுற்றில், நார்வேயின் கார்ல்சன், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரிஸ்சக்கை வீழ்த்தினார்.

ஐந்து சுற்றின் முடிவில் ஒரு வெற்றி, 4 ‘டிரா’ உட்பட 3 புள்ளிகளுடன் ஆனந்த் 3வது இடத்தை நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிரண்டு இடங்களில் பல்கேரியாவின் வாசலின் டோபலோவ் (4.5 புள்ளி), அமெரிக்காவின் நகமுரா (3.5) உள்ளனர்.

http://sports.dinamalar.com/2015/06/1434792564/AnandcrushesCarlsenNorwayChess.html

  • தொடங்கியவர்

நார்வே செஸ்: 8-வது சுற்றில் அபார வெற்றி பெற்ற ஆனந்த் சாம்பியனாக வாய்ப்பு

 
 
நார்வே செஸ் போட்டியில் லுத்விக் ஹாமரை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த். | படம்: ராய்ட்டர்ஸ்.
நார்வே செஸ் போட்டியில் லுத்விக் ஹாமரை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த். | படம்: ராய்ட்டர்ஸ்.

நார்வே செஸ் தொடரின் 8-வது சுற்றுப் போட்டியில் நார்வே வீரர் லுத்விக் ஹாமர் என்பவரை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்துக்கான மோதலில் டோபலோவை சந்திக்கவிருக்கிறார்.

டோபலோவ், தனது 8-வது சுற்று ஆட்டத்தில் ஆனிஷ் கிரி என்பவரிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்ததால் 6 புள்ளிகளில் இருக்கிறார், ஆனந்த் 8-வது சுற்றில் ஹாமரை வீழ்த்தியதால் 5.5 புள்ளிகளுடன் இருக்கிறார். எனவே அடுத்ததாக நடைபெறும் டோபலோவ்-ஆனந்த் போட்டி சாம்பியன் பட்டத்துகான மோதலாக அமைகிறது. இந்த ஆட்டத்தில் கருப்புக் காய்களுடன் ஆனந்த் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் டோபலோவ் டிராவுக்காக ஆடினாலே போதும், ஆனால் ஆனந்த் வெற்றிக்காக ஆடினால்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்.

ஹாமருக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக எந்தவித தொடக்கத்தையும் கையாளாத ஆனந்த் சாதாரணமாகவே தொடங்கினார். ஆனால் ஹாமர் தனது காய்களின் நிலைகளை அதிமதிபீடு செய்து சில பாய்ச்சல்களை மேற்கொண்டு அதில் தோல்வியடைந்தார். ஆனந்த் மிகவும் கூலாக அவரது மூவ்களை எதிர்கொண்டார்.

அந்த மூவ்களில் ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாகவே ஆனந்த் காட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளாமல் ஆடினார். ஹாமர் தனது நிலைகளை அதிமதிப்பீடு செய்ததால் கடைசியில் பவர்களை இழந்து வெறும் ராஜா, குயின், யானை, 2 சிப்பாய்களுடன் இருந்தார். ஆனால் ஆனந்திடம் 5 சிப்பாய்கள், ஒரு குயின், ஒரு யானை இருந்தது.

37-வது மூவில் ஆனந்த் தனது குயினை, அவரது யானையைக் குறிவைத்து நகர்த்த ஹாமர் ஆட்டத்தைக் கைவிட்டார். ஆனந்த் வெற்றி பெற்றார்.

ஆனந்த்-டோபலோவ் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/நார்வே-செஸ்-8வது-சுற்றில்-அபார-வெற்றி-பெற்ற-ஆனந்த்-சாம்பியனாக-வாய்ப்பு/article7354028.ece

  • தொடங்கியவர்

நார்வே செஸ்: ஆனந்த் 2வது இடம்

 

 

anand Aronian, Levon norway chess tournament
ஸ்டாவன்கர்: நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2வது இடம் பிடித்தார். பல்கேரியாவின் வாசலின் டோபலோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

நார்வேயில் உள்ள ஸ்டாவன்கர் நகரில் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். எட்டு சுற்றின் முடிவில் 3 வெற்றி, 5 ‘டிரா’ உட்பட 5.5 புள்ளிகளுடன் ஆனந்த் 2வது இடத்தில் இருந்தார்.

ஒன்பதாவது மற்றும் கடைசி சுற்றில் இந்தியாவின் ஆனந்த், பல்கேரியாவின் வாசலின் டோபலோவ் மோதினர். இதில் வெற்றி பெற்றால் பட்டம் வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கிய ஆனந்த் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 18வது நகர்த்தலின் போது ‘டிரா’ ஆனது.

ஒன்பது சுற்றின் முடிவில், 3 வெற்றி, 6 ‘டிரா’ உட்பட 6 புள்ளிகள் பெற்ற ஆனந்த் 2வது இடம் பிடித்தார். ஐந்து வெற்றி, ஒரு தோல்வி, மூன்று ‘டிரா’ உட்பட 6.5 புள்ளிகள் பெற்ற பல்கேரியாவின் வாசலின் டோபலோவ் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நார்வேயின் ஹம்மருக்கு எதிரான கடைசி சுற்றில் தோல்வி அடைந்த ‘உலக சாம்பியன்’ கார்ல்சன் 3.5 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார்

http://sports.dinamalar.com/2015/06/1435071608/anandvachierlagravemaximenorwaychesstournament.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.