Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபாஷ்!...அந்த 463 பேரில் ஒருவனை உருவாக்கியவரே தமிழர்தான்!!

Featured Replies

சபாஷ்!...அந்த 463 பேரில் ஒருவனை உருவாக்கியவரே தமிழர்தான்!!

மெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து தொடரான என்.பி.ஏவில் விளையாட இந்தியாவை சேர்ந்த சத்னம்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சங்கரன் சுப்பிரமணியம் என்ற கூடைப்பந்து பயிற்சியாளர்தான் சத்னம் சிங்கின் இந்த அளப்பரிய சாதனைக்கு காரணமாக இருந்துள்ளார்.

SATH.jpg

இந்தியாவுக்கு கிரிக்கெட், தென் அமெரிக்காவுக்கு கால்பந்து எப்படியோ அப்படிதான் வட அமெரிக்கர்களுக்கு கூடைப்பந்து என்றால் உயிர். கடந்த 1946ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நேஷனல் பேஸ்கட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பாகத்தான் என்.பி.ஏ கூடைப்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 அமெரிக்க அணிகளும் கனடாவை சேர்ந்த ஒரு அணி மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. வட அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் முக்கிய விளையாட்டுத் தொடர்களில் இதுவும் ஒன்று. இந்த கூடைப்பந்து அணிகளில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு கோடிக்கணக்கான தொகை சம்பளமாக வழங்கப்படுவதும் வழக்கம்.

sathnam.jpgகவுரவமிக்க இந்த தொடரில் ஒரு இந்திய வீரர் கூட இதுவரை விளையாடியதில்லை. இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம் வீரரான சத்னம் சிங் இரு நாட்களுக்கு முன் டல்லாஸ் மெவ்ரிக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்திய கூடைப்பந்து வரலாற்றில் அதி முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் சத்னம் சிங்கின் இந்த சாதனைக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாலோகி என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் இந்த சத்னம் சிங். இந்த கிராமத்தில் மொத்தமே 463 பேர்தான் வசிக்கின்றனர்.சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த சத்னம் சிங்கின் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகித்தவர் பிரபல கூடைப்பந்து பயிற்சியாளர் சங்கரன் சுப்பிரமணியன்.

தமிழகத்தை சேர்ந்த சங்கரன் சுப்பிரமணியன் விமானப்படையில் வேலை பார்த்தவர். பெரும்பாலும் வட இந்தியாவில்தான் பணி என்பதால் பின்னர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் செட்டில் ஆகி விட்டார். 46 ஆண்டு காலம் கூடைப்பந்து விளையாட்டுடன் தொடர்புடையவர் சங்கரன் சுப்பிரமணியன். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 7ஆண்டுகள் பஞ்சாப் மாநில அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில்தான் சத்னம் சிங் 6 வயது சிறுவனாக சுப்பிரமணியத்திடம் கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டார்.

அப்போதே ஆஜானுபாகுவாக தோற்றமளித்த சத்னம் சிங்கை, என்.பி.ஏ தொடரில் விளையாட வைப்பதையே தனது லட்சியமாக ஏற்று கொண்டு வாழ்ந்தார் சுப்பிரமணியம். தனக்கு தெரிந்த அத்தனை கூடைப்பந்து வித்தைகளையும் சத்னம் சிங்கிற்கு பயிற்சிவித்தார் அவர்.பின்னர் பஞ்சாப் மாநில ஜுனியர், சீனியர் அணிகளில் இடம் பெற்ற சத்னம் சிங் இந்திய அணியிலும் இடம் பிடித்தது முன்னேறிக் கொண்டிருந்த சமயத்தில்தான் சுப்பிரமணியம் கடந்த 2013ஆம் ஆண்டு திடீரென்று மரணம் அடைந்தா£ர். சுப்பிரமணியத்திற்கு பிறகு ஹரீஸ் சர்மா என்பவர் சத்னம் சிங்கிற்கு பயிற்சி அளித்தார். ஆனால் அவரும் மறைந்து விட்டார்.

நேற்று என்.பி.ஏ அணியான டல்லாஸ் மாவ்ரிக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்ட்ட பின் நடந்த அந்த நிகழ்வில் பேசிய சத்னம் சிங், '' என்னை உருவாக்கிய அந்த இருதெய்வங்கள் இன்று உயிரோடு இல்லை என்று குறிப்பிட்டது அவரது நண்பர்களை உருகச் செய்து விட்டது.

குருநாதர்கள் உயிரோடு இல்லையென்றாலும் அவர்களது லட்சியத்தை நிறைவேற்றி காட்டிய சத்னம் சிங்கிற்கு தாரளமாக சபாஷ் போடலாம்!

http://www.vikatan.com/news/article.php?aid=48625

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.