Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்க மணி தங்கமணி...

Featured Replies

இரண்டு நாட்களுக்கு முன்

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ள கீழ்தும்பலஹள்ளி என்ற கிராமத்து பாதையில் சென்றவர்கள் அணைவரும் சில நிமிடம் நின்று ரோட்டில் நடப்பதை பார்த்து வியந்தனர்.

அப்படி என்ன ரோட்டில் நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவேண்டாமா?

gallerye_113916928_1284423.jpg


நாய் ஒன்று மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு சென்றது, வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது.

'மெள்ள வா ராசா' என்றை அதனை அன்புடன் வழிநடத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தார் ஒருவர்.

எதற்காக இப்படி ஒரு காரியம் என அவரிடம் விசாரித்தபோது நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் அவர் பகிர்ந்து கொண்ட அன்பின் கதையிது.

என் பெயர் தங்கவேலுங்க அந்தகாலத்து பத்தாம் வகுப்பு மணைவி பெயர் கோவிந்தம்மாள் தமிழ் மொழி மீது பற்றும் பாசமும் அதிகம் இதனாலயே எனது இரண்டு மகள்களுக்கும் இலக்கியா மற்றும் குறளரசி என்று பெயர் வைத்துள்ளேன்.

இதே கிராமத்துலதான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்கேன்.வீட்டில நாலு மாடு வச்சு பால் கறந்து சொசைட்டிக்கு ஊற்றுவதன் மூலம் வரக்கூடிய வருமானத்தில் வாழ்க்கை சுமூக ஒடிக்கிட்டிருக்கு..

ஓரு முறை சந்தைக்கு போயிருந்த போது சின்னக்குட்டியா இவன் கிடைச்சான், பார்த்த உடனேயே எனக்கு பிடிச்சு போச்சு துாக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். எனக்கு இரண்டு பொம்பிளை பிள்ளைங்க இவனை பையனா நினைச்சு வளர்த்துட்டு வர்ரேன் மணின்னு பேர் வச்சுருக்கேன், எங்க குடும்பத்துல ரொம்ப முக்கியமான ஆளு இவன்.

எனக்கு மணியும் மணிக்கு நானும் இருந்தா போதும் வேறே எதுவும் வேணாம் எங்களுக்குள்ள அப்படி ஒரு பாசம் ஏற்பட்டு போச்சு அவன் இல்லாம எனக்கு பொழுது விடியவும் செய்யாது முடியவும் செய்யாது.

வீட்ல பாலைக்கறந்துட்டு ஒரு கிலோமீட்டர் துாரம் இருக்கிற சொசைட்டியில கொண்டு போய் பாலைக்கொடுக்கிறதுக்கு பால் கேனை துாக்கிட்டு நடந்துதான் போவேன். மணியும் கூடவே வருவான், நான் பால் கேன் துாக்கிட்டு சிரமப்பட்டு நடக்கிறேன்னு நினைச்சானோ என்னவோ? என்னைத்துாக்க விடாம தானே வாயில் கவ்விட்டு நடக்க ஆரம்பிச்சான், என்ன சொன்னாலும் கேனை தரமாட்டேன்னு வம்பு பிடிச்சான், ஆனா அவனாலும் கேனை துாக்கிட்டு நடக்கமுடியாம தரையில் கேன் தட்டுச்சு, அப்புறம்தான் ஆயிரத்து ஐநுாறு ரூபாய் செலவு பண்ணி ஒரு சின்ன வண்டி ரெடி செயது அதுல பால் கேனை வச்சதும் மணி உற்சாகமாக இழுத்துட்டு நடக்க ஆரம்பிச்சான்.

gallerye_113923121_1284423.jpg

இது ரொம்ப நாள நடந்துச்சு ஒரு கட்டத்துல சொசைட்டிக்கு நான் போகவேண்டியதே இல்ல கேனை மட்டும் வண்டியில வச்சுட்டா போதும் மணி கரெக்டா கொண்டு போய் சொசைட்டியில பாலை சேர்த்துருவான் அங்க இருக்கிறவங்க பாலை எடுத்துக்கிட்டு திரும்ப வெறும் கேனை வச்சதும் அதே போல பத்திரமா திரும்ப கொண்டு வந்துடுவான்.

ராத்திரி முழுவதும் துாங்கவே மாட்டான் எம் புள்ளைகள யாரும் நெருங்கமுடியாது ஒரு உறுமல்லையே ஒடவச்சுருவான் எங்க குடும்ப காவல்காரனா எங்க செல்லமா எங்க தங்கமா மணி வளர்ந்துவர்ர சூழ்நிலையிலதான் கடந்த ஆறு மாதத்திற்கு முன் கொஞ்சமும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்துபோச்சு.

வழக்கம் போல வண்டியில போய் பாலைக்கொடுத்துட்டு திரும்ப வரும்போது தாறுமாற வந்த டெம்போ வாகனம் மணி மேலே மோதிருச்சு.ரத்த வெள்ளத்தில கிடந்த மணியை பார்த்துட்டு எல்லோரும் உயிர்போயிருச்சுன்னு நினைச்சு எனக்கு தகவல் கொடுத்தாங்க அழுது புடிச்சு ஒடிப்போய் பார்த்தேன், கண்ணுல மட்டும் ஜீவனோட என் மணி வலியில எழுந்திருக்கமுடியாம முனகிக்கிட்டே படுத்திருந்தான் என்னைப்பார்த்ததும் சந்தோஷத்தோட தன் சக்தியெல்லாம் திரட்டி எந்திரிக்க பார்த்தான்,அவனால முடியல அப்படியே படுத்துட்டான்.

இரண்டு கையிலேயேயும் அவனை அள்ளித்துாக்கிட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு ஒட்டமாய் போய் அங்க இருக்கிற டாக்டர்ட்ட காட்டினேன், அவரு முதலுதவி செஞ்சார் ஆனா நாயை காப்பாத்த முடியாது இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சு இது பிழைக்கிறதும் கஷ்டம் பிழைச்சாலும் நடக்கிறது கஷ்டம் போற வழியில குப்பையில போட்டுட்டு போயிடு ஒரு நாள்ல அதுவே செத்துரும் என்று சொல்லிட்டார்.

டாக்டரு இப்படி சொல்லிட்டாரேன்னு மனசு ஆறலை, மணிக்கு ஒண்ணும் ஆகாதுன்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு வர்ர வழியில தண்ணி தொட்டியில இறக்கிவிட்டேன் லேசா சிரமப்பட்டாலும் அவனால கால்ல நீந்தமுடிஞ்சது. இதைப்பார்த்ததும் இனி மணியை காப்பாத்திரலாம்னு முடிவு பண்ணி வேற டாக்டரா பார்த்தேன், அவர் நாயை காப்பாத்திரலாம் ஆனா ராஜ வைத்தியம் பண்ணணும் என்றார்.

எதுவா இருந்தாலும் நான் என் மணிக்காக செய்வேன் என்றதும் ஒரு நாளைக்கு மூன்று முறை வென்னீரால் மெதுவாக நீவி விடுவது போல குளிப்பாட்டணும் இரண்டு ஊசி போடணும் ஊசி விலை கொஞ்சம் கூடுதல்,நிக்க நடக்க பொறுமையா பயிற்சி கொடுக்கணும் நேரத்துக்கு மருந்து மாத்திரை கொடுக்கணும் ஒரு பச்சைக்குழந்தையா பார்த்துக்கணும் என்றபடி மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்.

டாக்டர் சொன்னபடியெல்லாம் செய்த தங்கவேலு கூடுதலாக டாக்டர் சொல்லாததையும் செய்தார். அது ஊர் தெய்வமான மாரியம்மனிடம் என் மணி பழையபடி நடந்தா மணியே நடந்துவந்து மாவிளக்கு போடுவான்னு அவன் சார்பாக வேண்டிக்கொண்டார்.

ஒரு நாளல்ல இரண்டு நாளல்ல கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இப்படி மணியை மணியாக பார்த்துக்கொண்டதன் பலனாக மணி பழைய மணியாக கம்பீரமாக வலம் வந்தான்.

அம்மனுக்கு இரண்டு நாள் முன்பாக நடந்த திருவிழாவில் ஊரில் உள்ள பக்தர்கள் எல்லாம் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு மாவிளக்கு போட ஊர்வலமாக சென்றனர்.அந்த ஊர்வலத்தில் தங்கவேலுவின் உதவியுடன் மணி ஒரு பக்தனாக தனது வண்டியில் வைத்து மாவிளக்கு எடுத்துப்போய் அம்மன் காலடியில் சேர்த்தபோது மணியை ஒரு பக்கமும் தாயன்புக்கு ஈடாக நாயின்மீது அன்பைக்காட்டி அதற்கு மறுஜென்மம் கொடுத்த தங்கவேலுவையும் மறுபக்கமும் பாராட்டினர்.

என் புள்ளைய காப்பத்துறது என் கடமைங்க இதுக்கு எதுக்கு பாராட்டு என்கிறார் தங்கவேல் அடக்கமாக...

வாசகர்கள் எளிதாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நாய் என்று நான் சில இடங்களில் தவிர்க்க இயலாமல் சொல்லியுள்ளேன் ஆனால் தங்கவேலிடம் பேசினால் அவர் எம் பையன் மணி என்றுதான் சொல்வாரே தவிர நாய் என்ற வார்த்தையே அவரிடம் இருந்து வராது மேலும் நீங்கள் அவரிடம் பேசினால் ஒரு வார்த்தை மணிட்டேயும் பேசிருங்க என்று போனை அதன் வாயருகே கொண்டு செல்வார், அதுவும் பெரிய மனுஷன் மாதிரி அதன் மொழியில் நம்மை நலம் விசாரிக்கும். இருவரிடமும் பேச ஆசையாக இருக்கிறதா தொடர்பு கொள்ளவும்:9842348790.

gallerye_114003136_1284423.jpg

gallerye_113930407_1284423.jpg

-எல்.முருகராஜ்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1284423

  • கருத்துக்கள உறவுகள்

தங்கவேலும் தங்கமணியும் தாயும் சேயுமாய் வாழட்டும்...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.