Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித முயற்சிகளைத் தடுக்கும் கடவுள் நம்பிக்கை

Featured Replies

படைப்பு, அழிப்பு என்ற சொற்கள் ஓர் அற்புதத்தைக் குறிப்பதற்கு மேலாக எந்த ஒரு மதிப்பும் பெற்றவையல்ல. நீங்கள் ஒரு தங்கக் காசை அழித்து விடலாம்; ஆனால் காசு என்ற அதன் நிலையைத்தான் நீங்கள் மாற்றி-யிருக்கிறீர்களே அன்றி, தங்கம் என்ற பொருளை நீங்கள் அழித்து விடவில்லை. அது போலவே படைப்பு, அழிப்பு என்பவையும் நிலைமாற்றத்தைக் குறிப்பனவே அன்றி, ஒரு பொருளின் தோற்றத்தையோ முடிவையோ குறிப்பவை அல்ல. இந்தப் பிரபஞ்சத்தைக் கட-வுள் படைத்தார் என்று ஆத்திகர் கூறும்போது, அக்கடவுள் தன்னிலிருந்தே இந்தப் பிரபஞ்-சத்தைப் படைத்தார் என்றோ அல்லது ஒன்-றுமே இல்லாத ஒன்றிலிருந்து படைத்தார் என்-றோதான் கருதுகிறார். ஆனால் பிரபஞ்சம் கட-வுளின் படைப்பு என்று நாத்திகரால் கருதமுடி-யாது. அவ்வாறு கருதுவது பிரபஞ்சத்தையும், கடவுளையும் அடையாளப்படுத்துவது என்ப-தும், இறை நம்பிக்கை என்பதை விட பல கடவுள், இயற்கை உருவ வழிபாடு அது என்பதும்தான் இதன் காரணம். பொருளில் எந்த வேறுபாடும் இல்லாத போது படைப்பும் இருக்க முடியாது.

கடவுள் என்பவர் ஆதியந்தமற்றவர், எல்லை-யற்றவர் என்று ஆத்திகர் கருதுவதால், ஒன்-றுமே இல்லாததில் இருந்து கடவுள் பிரபஞ்-சத்தைப் படைத்தார் என்றும் ஆத்திகர் கருத முடியாது. பிரபஞ்சம் உருவாக்கப்பட்டு வெட்டவெளி நிரப்பப்பட்டு இருக்கலாம் என்று கருதுவதற்கான வாய்ப்பையும், ஆதி-அந்தமற்ற, எல்லையற்ற கடவுள் இருக்கிறார் என்ற கோட்பாடு தடுக்கிறது. படைப்பாளி-யையும், படைக்கப்பட்ட பிரபஞ்சத்தையும் பிரிக்கும் இடம் இதுதான் என்று எந்த ஓரிடத்-தையும் காலத்தையும் குறித்து எவராலும் சிந்தித்துப் பார்க்க இயலாது. இப் பிரபஞ்சத்-தின் தோற்றக் காலத்தைப் பற்றி ஆத்திகரால் கற்பனை செய்து காண்பது இயலாது. திடீ-ரெனத் தொடங்கியது என்றோ அல்லது திடீரென முடிவுக்கு வந்தது என்றோ கருது-வதும் இயலாது. இப்பிரபஞ்சம் தோன்று-

வதற்கு முன்பாக இருந்த ஒரு காலத்தில் இருந்து இது தொடங்கியது என்று கருதவும் இயலாது. படைப்பு என்ற கொள்கையை ஆதரித்துப் பேசும் ஆத்திகர், பிரபஞ்சம் இல்லாமல் இருந்த நிலையில், அது உருவாக்கப்பட்ட காலஅளவை, குறிப்பிட்டுக் கூறவேண்டும்.

அக்காலக் கட்டத்தில் ஏதோ ஒன்று இருந்-திருக்க வேண்டும்; அல்லது ஏதும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒன்றுமே இல்லாத காலம் வந்திருக்கு மானால், ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும். இந்த ஏதோ ஒன்று எல்லை கொண்டதாகவோ அல்லது எல்லை-யற்றதாகவோ இருக்க வேண்டும். அப்போது படைப்பு என்பது இயலாத ஒன்றாகும். எல்லையற்ற ஒன்றுடன் எதனையும் சேர்ப்பது இயலாதது என்பதே இதன் காரணம்.

படைப்பு என்ற கேள்வியை விட்டுவிட்டு, பிரபஞ்சத்தின் செயல்பாட்டைப் பற்றிப் பார்ப்-போமானால், அதிலும் ஆத்திகர் கொண்டுள்ள சங்கடங்கள் எந்த விதத்திலும் குறைந்துவிடு-வதில்லை. ஆத்திகர்களின் துன்பம், சோகம், குற்றம், வறுமை, நிலையான நற்றன்மையை ஆதரிப்போர் எதிர்ப்பு, அனைத்து வகைகளி-லும் நல்லவராக உள்ள, அனைத்து வழிகளி-லும் பேரறிவு பெற்றுள்ள, அனைத்து ஆற்றல்-களும் பெற்ற கடவுள் என்ற ஆத்திகரின் அறிவிப்பிற்கு விடப்படும் சவாலுக்கு எளிதில் பதில் அளிக்க இயலாமை போன்ற கேடுகள் உலகில் நிலவுவது ஆத்திகர்களுக்கு மிகப் பெரும் தடைக் கற்களாக விளங்குபவையாகும்.

கடவுள் அனைத்து நற்தன்மைகளையும் கொண்டவர் என்பதால், கெட்டவை அவரிடமி-ருந்தும் தோற்றம் பெற்றிருக்க முடியாது. கடவுளுக்குத் தெரியாமல் கெட்டவை எங்கோ வேறொரு இடத்தில் தோற்றம் பெற்றிருக்கவும் இயலாது. ஏனெனில் ஆத்திகர்களின் வாதப்படி கடவுள் ஒருவரே முழுமுதல்வராவார் என்ப-தால் அவரை மீறி அவரைத் தாண்டி எது ஒன்றும் தோற்றம் பெற முடியாது.

ஆனால் நாத்திகருக்கோ கெட்டவைகள் என்னும் இக்கேள்வி முற்றிலும் மாறுபட்ட ஓர் அம்சமாகத் தோற்றம் அளிக்கிறது. ஒவ்வொரு கேடும் ஏதோ ஒன்றின் விளைவு-தான் என்று அவர் அறிவிக்கிறார்; ஆனால் அது கடவுள் அல்லது சாத்தான் விளைவு அல்ல. உயிர் வாழ்ந்திருப்பதற்கான விதிகளை அறிந்திருப்பதன் அடிப்படையில் அமையும் ஒழுக்கமும், செயல்களும்தான் தற்போது ஒவ்-வொரு வடிவத்திலும் உள்ள கேடுகளைக் களைவதாக இருக்கக்கூடும்; நமது அறிவு பெரு-கப் பெருக, அது இத்தகைய கேடுகள் எதிர்-காலத்தில் மீண்டும் விளைவதைத் தடுக்கிறது.

குற்றம் இழைப்பதை தடுப்பது கடவுள் நம்பிக்கை அல்ல

குற்றமிழைக்காமல் இருப்பதற்கான ஒரு கட்டுப் பாட்டுக்காகக் கடவுள் நம்பிக்கை தேவை என்று சிலர் கூறுகிறார்கள். எந்த பின்விளைவைப் பற்றிய அச்சம் அற்றவர் என்பதால் நாத்திகர் கொலை செய்யலாம், திருடலாம், பொய் சொல்லலாம் என்று அவர்-கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வாதத்தின் உண்மையான மதிப்பீட்டை அறிந்து கொள்ள இந்தக் கேள்வியைக் கேட்பது தவறில்லை: ஆத்திகர் எப்போதாவது திருடியிருக்கிறாரா? ஆம் எனின், அத்தகைய ஒவ்வொரு திருட்டி-லும் கடவுள் மற்றும் அவரது தண்டிக்கும் ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருப்பது மட்-டுமே குற்றம் நடக்காமல் தடுக்கப் போது-மானதாக இருப்பதில்லை..

ஆத்திகர் எப்போதாவது பொய் சொல்லியி-ருக்கிறாரா? கொலை செய்திருக்கிறாரா? ஆம் எனின், முந்தைய வாதமே இதற்கும் பொருந்-தும் - சிறிய பெரிய குற்றங்கள் இழைக்கப்படு-வதைத் தடுப்பதில் ஆத்திகம் தவறி விடுகிறது. இத்தகைய ஒரு வாதத்தை முன் வைப்பவர்கள், அனைத்து மாந்தருமே மகிழ்ச்சியுடன் வாழவே விரும்புகின்றனர் என்பதை வெகு சுலபமாக மறந்துவிடுகின்றனர். அறியாமை நிறைந்த, தவறாகக் கற்பிக்கப்பட்ட மக்கள்தாம் மகிழ்ச்சிக்கான உண்மையான பாதையைத் தவறாகப் புரிந்து கொண்டு, அம் மகிழ்ச்சியை அடைய குற்றங்களை இழைக்கின்றனர்.

நற்செயல்களே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான உண்மையான பாதை

மனித குல மகிழ்ச்சிக்கான உண்மையான பாதை எது என்பதை மனித இனத்துக்கு கற்பிப்பதன் மூலம், மகிழ்ச்சியை அடைவதற்-காக அவர்கள் குறுக்கு வழியில் குற்றங்கள், தவ-றுகளை இழைக்காமல் தடுக்க இயலும் என்று நாத்திகர்கள் நம்புகின்றனர். கடவுள் பின்னர் ஏதோ ஒரு பரிசு அளிப்பார் என்பதற்காக அல்-லாமல், இப்போதே ஒழுக்கம் உடையவர்களாக, குற்றமற்றவர்களாக மக்கள் இருக்க வேண்டும் என்று நாத்திகர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனெ-னில், நற்செயல் ஆற்றுவதன் மூலம் அதைச் செய்பவருக்கும், அவரைச் சுற்றி இருப்பவர்-களுக்கும் உடனடியாக நன்மை ஏற்படுகிறது. ஒரு மனிதன் பொய் சொல்லாமல் இருக்க, திருடாமல் இருக்க, கொலை செய்யாமல் இருக்க ஒரு நாத்திகனை வைத்திருப்பது, இறப்-புக்குப் பின் மறு உலகில் தான் பெறப்போகும் தண்டனைகள், துன்பங்களைப் பற்றிய அச்சம் அல்ல; இத்தகைய குற்றங்கள் இந்த வாழ்க்கை-யையே துன்பமயமாக்கிவிடும் என்று அவன் கருதுவதால்தான்.

கடவுள் நம்பிக்கை மனித முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்து முன்னேற்றத்தைத் தடை செய்கிறது

இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்து நடத்திச் செல்வதாகக் கூறும் ஆத்திகம், அனைத்தையும் வழிநடத்திச் செல்லும், கட்டுப்படுத்தும் ஆற்றல் கடவுளின் விருப்பமே என்று கூறுவதன் மூலம் மனிதனின் முயற்சிக-ளுக்கு இடையூறு விளைவித்து அவற்றுக்குத் தடை ஏற்படுத்துகிறது. ஆனால், அனைத்து நிகழ்வுகளுமே இயற்கை விதிகளின் படி, சில குறிப்பிட்ட அறிந்து கொள்ள இயன்ற தொடர்ச்சியாக நிகழ்வதாகவும், மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கண்டு பிடிக்க மனித-னைத் தூண்டி, ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள ஆற்றல் நிறைந்த தூண்டுதலை அவ-னுக்கு அந்நிகழ்வுகள் அளிக்கின்றன என்றும் நாத்திகம் கூறுகிறது.

இறக்கும் நேரத்தில் தனது தவறுக்கு மன்-னிப்பு கேட்கும் கொடியவன் அடுத்த உலகில் மகிழ்ச்சி பெறுவான் என்று ஆத்திகம் உத்த-ரவாதம் அளிக்-கிறது; இப்போது வாழும் வாழ்க்கையி-லேயே நல்லவைகளைச் செய்யும் மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ்வான் என்றும், அதற்காக அவன் பின்னர் வருந்துவதற்கான காரணம் ஏதுமில்லை என்றும் நாத்திகம் உறுதி படக்கூறுகிறது.

நோய்கள் தெய்வ கோபத்தால் வருபவையல்ல

கடவுளே உடல்நலத்தைக் கெடுத்து நோயைத் தருகிறார் என்று ஆத்திகம் கூறு-கிறது. தெய்வ கோபத்தால் வரும் உடல் நல-மின்மை மற்றும் நோய்களை அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டு மனநிறைவுடன் சகித்துக் கொள்ள வேண்டும் என்று ஆத்திகர்கள் கருதுகிறார்கள். உடற்கூறு பற்றிய அறிவு உடல்நலம் பற்றிய இயற்கை விதிகளை மீறா-மல் நம்மைத் தடுத்து நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்று நாத்திகம் கூறுகிறது. நோய்கள் எந்த தெய்வத்தின் கோபத்தினாலும் வருவதல்ல; நல்ல காற்றோட்டம் அற்ற வீடு, பணியிடம் , குறைவான, சத்துகள் அற்ற உணவு, அளவுக்கதிகமான உடலுழைப்பு, மன உளைச்சல், கடுமையான வெயில், பனி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படுவது, ஆகிய இவைகளே நோய்களுக்கான காரணம். நோய் மற்றும் குற்றங்களுக்கான சாதாரணமான காரணமாக விளங்கும் வறுமையே இவை அனைத்துக்கும் அடிப்படையானது. அடக்-கமோ, வழிபாடோ காய்ச்சலிலிருந்து பாது-காப்பு அளிக்காது. மனிதனுக்கு உணவு அளிக்காமல் வைத்திருந்தால், அவன் ஆத்திகனாக இருந்தாலும், நாத்திகனாக இருந்தாலும் விரைவில் நலிவடைவான். தத்துவம் உணவுக்கு எப்போதுமே மாற்றாக இருக்க முடியாது.

- சார்ல° பிராட்லா

http://www.unmaionline.com/20061002/world%20paghu.htm

  • 4 months later...

என்னதான் அறிவியலில் முன்னேறி விட்டாலும், விஞ்ஞானக் விளக்கங்களைப் படித்தாலும், குழந்தைப் பருவத்தில் மனதில் விதைக்கப்பட்ட வக்கிரமான மூடநம்பிக்கைகளை அவை மூடநம்பிக்கை என்று தெரிந்தாலும் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை.

உதாரணமாக, இப்போதும் கூட வெளியில் போகும் போது தற்செயலாக ஒரு பூனை குறுக்காகப் போனால் மனதில் இயல்பாகவே வரும் சஞ்சலத்தை தடுக்க முடியவில்லை.

எனவே, மனித முயற்சிகளைத் தடுக்கும் கடவுள் நம்பிக்கை என்று சொல்வதை விட, மனித முயற்சிகளைக் குழப்பும் மூட நம்பிக்கை என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.

நான் உங்கள் ஆக்கத்திற்கு விளக்கம் அழிக்க விரும்புகிறேன். அதற்கு முதல் மாப்பிள்ளை அவர்களே. இந்த பாமினி என்ற வொன்ட்டினை தரவிரக்கம் செய்து எமது வேடில் ஆறுதலாக ரைப் பண்ண முடியாதா? நீங்கள் ஆறுதலாக எழுதுவதற்கு எதை தரவிரக்கம் செய்தீர்கள்?

நான் இதிலே தரவிரக்கம் செய்தேன் ஆனால் இன்ஸ்ரோல் பண்ண முடியவில்லை. எப்படி

http://www.thozhi.com/tamiltyping.htm

நான் எழுதும்போது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆங்கிலோ தமிழ் மூலம் எழுதுகின்றேன்...

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

சமயங்களில் இதையும் பாவிப்பதுண்டு.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

பாமினி பாவிப்பதில்லை.

Edited by மாப்பிளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.