Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேதன விவசாய முறை பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது

Featured Replies

article_1435926954-jaffna.jpg
உணவு, சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்புகளுக்கு சேதன விவசாய முறை அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இது ஒரு புலமைசார் கோட்பாட்டு விடயமாக இல்லாது வாழ்வியலுடன் தொடர்புடையதாகவும் காணப்படுகின்றது. சேதனப்பசளைப் பயன்பாடு என்பது இன்று பூகோள ரீதியாக முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது என வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார தெரிவித்தார்.
சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமையுரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

சேதனப் பசளைப் பயன்பாடு என்பது வாழ்வியலுடன் தொடர்புடையது ஆகும். இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
மாகாண கட்டமைப்புக்கள், மத்திய கட்டமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்புக்கள் என்ற அனைவரும் கூட்டிணைந்து சேதனப் பசளைப் பயன்பாட்டை செயற்பட வேண்டிய தேவையும் அவசியம் உள்ளது.
வடக்கு - தெற்கு நல்லுறவை வளர்த்தல் என்ற விடயத்திலும் கூட இது ஒரு முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இந்த சேதன விவசாய முறைமையானது யாழ்ப்பாணத்து மக்களுக்கு வாழ்வை திரும்ப வழங்கும் நடவடிக்கையாக காணப்படுகின்றது

கடந்த காலத்தில் இரசாயனப் பசளை பயன்பாட்டின் மூலம் பெருமளவான தரைக்கீழ் நீர் பழுதடைந்துள்ளது. நாம் மீண்டும் இரசாயன விவசாய முறையில் இருந்து விடுபட்டு சேதன விவசாய முறைக்கு மீள வருவதன் மூலம் மீண்டும் நல்ல குடிநீரைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும் என்றார்.  
http://www.tamilmirror.lk/149638#sthash.RRonh7AN.dpu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கடந்த காலத்தில் இரசாயனப் பசளை பயன்பாட்டின் மூலம் பெருமளவான தரைக்கீழ் நீர் பழுதடைந்துள்ளது. நாம் மீண்டும் இரசாயன விவசாய முறையில் இருந்து விடுபட்டு சேதன விவசாய முறைக்கு மீள வருவதன் மூலம் மீண்டும் நல்ல குடிநீரைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும் என்றார்.  
http://www.tamilmirror.lk/149638#sthash.RRonh7AN.dpu

யாரை யார் காப்பாற்றுகிறார்கள் ....

  • தொடங்கியவர்

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல் 

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல்!

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் சேதன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. விவசாய இரசாயனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் மூலமும் உணவுச்சங்கிலிகள் மூலமும் இரசாயன நஞ்சுகள் உடலைச் சென்றடைவதால் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்துவதால் மண்நுண்ணங்கிகளும், மண்புழு போன்ற உயிரினங்களும் இறந்து நிலம் தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ள முடியாதவாறு இறந்து வருகிறது. இதனால் சூழலுக்கு இசைவான சேதன விவசாயத்தை நோக்கி மீளவும் திரும்ப வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்தே சேதன விவசாயம் தொடர்பான இக்கலந்துரையாடலை வடமாகாண ஆளுநர் அலுவலகமும், வடமாகாண விவசாய அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிககாராவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சிறப்புப் பேச்சாளர்களாக சேதன விவசாயத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரா மற்றும் மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் ஆகியோருடன் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோரோடு பல்கலைகழகப் பேராசிரியர்கள், திணைக்களத் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயப் பாட ஆசிரியர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தார்கள். இது போன்ற கலந்துரையாடல் தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரா மூலம் இலங்கையின் பல்வேறு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

aynkaranesan%20202255623526966366.jpg

http://www.malarum.com/article/tam/2015/07/03/10836/சூழலியல்-விவசாயத்தை-நோக்கி-என்னும்-தொனிப்பொருளில்-யாழில்-இடம்பெற்ற-கலந்துரையாடல்-.html#sthash.3vfw2SjY.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.