Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா!

Featured Replies

இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா!
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2015, 02:29.44 PM GMT ]
america_sl_eye_001.jpg
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தற்போது அக்கறையில்லை என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் தீவிர செயற்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச நிதி வலைப்பின்னல் தொடர்ந்து இயங்கி வருவதாக கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியது.

இந்த அறிக்கையானது பல புலிகள் எதிர்க்கும் விமர்சகர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இரையாக வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவு முல்லை பெரியாறு அணைக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள், விடுதலைப் புலிகள் மற்றும் நக்ஸ்ல் போராளிகளால் ஆபத்து என்று கூறியிருந்தது.

எனினும் தமிழக அரசாங்கம், முல்லைப்பெரியாறு அணைக்கு விடுலைப் புலிகளால் ஆபத்து இல்லை என உடனடியாக கூறியிருந்தது.

அத்துடன் ஏனைய கட்சிகளும் அந்த குற்றச்சாட்டை திரும்ப பெற்றன.

இந்நிலையில் அரசுத்துறை மதிப்பீடுகளுக்கமைய, அதன் மூலம் 2014 பயங்கரவாதம் தொடர்பில் நாடுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

கடந்த 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கத்தினால் தோல்வியை சந்தித்ததன் பின்னர் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் செயலற்று காணப்பட்டது.

எனினும் விடுதலை புலிகளின் நிதி வலையமைப்பு 2014 ம் ஆண்டு வரையில் தொடர்ந்து இயங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை விசாரிக்க இலங்கைக்கு எதிராக 2012, 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் மூன்று தொடர்ச்சியான தீர்மானங்களை அமெரிக்கா கொண்டு வந்தது.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பல தடவைகள் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக கூறிய போதிலும் பொதுமக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் யுத்தக் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியது.

2012 ல், அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இணைந்து ஜெனிவாவின் மூன்று தீர்மானங்களில் முதல் தீர்மானத்தை மேற்கொண்டது.

தமிழ்நாட்டின் அழுத்தங்கள் காரணமாக நட்பு நாடான இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தூண்டியது.

இலங்கையின் விவகாரங்களில் அமெரிக்கா காட்டிய ஆர்வம் பல தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

மஹிந்த ராஜபக்சவின் கொடூரமான ஆட்சி போது இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை சமன்செய்யும் அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக அவர்கள் உணர்ந்தனர்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவின் கோட்டில் விரலை வைக்கவில்லை, மற்றும் இந்தியாவின் இழப்பில் சீனா மற்றும் பாகிஸ்தான் நெருக்கமடைந்தது.

அமெரிக்க போர் குற்றங்கள் பற்றி விசாரணைகளை ஒரு கருவியாக பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சவை சரிபார்க்க மற்றும் அவரையும் சீனாவுக்கு சாய்வாக கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், தமிழர்கள் உணர்ந்தனர்.

மூன்று தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு அச்சுறுத்தும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

இப்போது மகிந்த ராஜபக்சவின் ஆட்சி இல்லை, அமெரிக்கா இலங்கைக்காக படைத்துள்ள வலையமைப்பை வெளியே உலகிற்கு கவர வைக்கப்பார்க்கின்றது.

அமெரிக்கா வெற்றிகரமாக ஆட்சி மாற்றத்தை மேற்கொண்டதோடு நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தது.

இப்போது அவர்களுக்கு போர்க் குற்றங்கள் குறித்து பொறுப்புக் கூறல் மற்றும் விசாரணை பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டுவதாக இல்லை.

அவர்கள் மார்ச் கூட்டத்தொடரின் போது அதன் அறிக்கையை தயாரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அழுத்தம் கொடுக்காது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள அடுத்த கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது.

நடப்பு ஆட்சி மீது அழுத்தம் கொடுக்காமல் இருப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அமெரிக்கா நிச்சயமாக சுமூகமான ஆட்சிக்காக அழுத்தம் தர வாய்ப்பில்லை. விடுதலை புலிகளை முற்றிலும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதே அவர்களின் சதி. இதற்கு எளிமையான வழி ஒருவித பதற்றத்தை உருவாக்கி இந்த பிரச்சனையை திசை திருப்புவதே.

விடுதலைபுலிகளால் அமெரிக்கா, இந்தியா, மற்றும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று எழுதி இந்த விசயத்தை திசை திருப்ப ஏராளமான மக்கள் உள்ளனர் என குறித்த ஆங்கில ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmtyHSWSVnozE.html

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலைக்கு ஆயுதமும் ஆயத்தமும் அதில் ஆதாயமும் கண்டவை பல வழிகளை தேடுவினம் தானே அதை மறைக்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.