Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சர்வதேசம் எங்கும் பேசப்படும் கனடா “ஈழம் சாவடி”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"சர்வதேசம் எங்கும் பேசப்படும் கனடா “ஈழம் சாவடி” Top News Top News 
[Friday 2015-07-10 19:00]
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் பெருமக்களுக்கு பெருமை தேடித்தரும் ‘ஈழம் சாவடி’ மீண்டும் மூன்றாவது முறையாக கனடாவில் களம் காண்கிறது. கனடா-ஒன்ராரியோவில் மிக வேகமான பொருண்மிய வளர்ச்சி கண்டு வரும் பிரம்டன் நகரில்  வருடாவருடம் இடம்பெறும் ‘கர-பிறாம்’ என்றழைக்கப்படும் பல்லின பல்கலாச்சார பன்னாட்டுத் திருவிழா  இம்மாதம் 10ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வகைச் சாவடிகளும் மக்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு  அந்தந்த நாட்டினரின் பாரம்பரியம்  வரலாறு  கலை  பண்பாடு மற்றும் விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகளும் உணவு உடை உட்பட  மலிவு விலையில் ஏராளம் வர்த்தகச் சாவடிகளுமென சிறப்பாக ஏற்பாடாகியுள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் பெருமக்களுக்கு பெருமை தேடித்தரும் ‘ஈழம் சாவடி’ மீண்டும் மூன்றாவது முறையாக கனடாவில் களம் காண்கிறது. கனடா-ஒன்ராரியோவில் மிக வேகமான பொருண்மிய வளர்ச்சி கண்டு வரும் பிரம்டன் நகரில் வருடாவருடம் இடம்பெறும் ‘கர-பிறாம்’ என்றழைக்கப்படும் பல்லின பல்கலாச்சார பன்னாட்டுத் திருவிழா இம்மாதம் 10ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வகைச் சாவடிகளும் மக்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு அந்தந்த நாட்டினரின் பாரம்பரியம் வரலாறு கலை பண்பாடு மற்றும் விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகளும் உணவு உடை உட்பட மலிவு விலையில் ஏராளம் வர்த்தகச் சாவடிகளுமென சிறப்பாக ஏற்பாடாகியுள்ளது.

   

கரபிறாம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடி வரும் வெள்ளிக்கிழமை 10ஆம் நாள் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் சனிக்கிழமை 11ஆம் நாள் மதியம் 1 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் நாள் மதியம் 1 மணிமுதல் மாலை 7 மணிவரையும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

பிராம்டன் தமிழ் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பிராம்டன் நகரில் அதிகம் வதியும் தமிழர்களின் சார்பில் இச்சாவடி அமைக்கப்படுகிறது. கலாச்சாரங்களின் சங்கமமாக அமையும் மூன்று நாள் விழாவில் அமையும் பல கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் அமைந்தது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

 

eelam-savady-2015-100715-seithy%20(1).jp

 

 

eelam-savady-2015-100715-seithy%20(2).jp

 

ஈழம் சாவடிக்கு தங்களை வாழ்த்துக்களை ஏற்கனவே அனைத்துக் கட்சிகளின் தலைமைகளும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன்ää கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஜேசன் கெனி அவர்கள்ää ஈழம் சாவடியின் மேடையில் உரையாற்றää வேறு மாகாணமொன்றிலிருந்து விசேட பயணமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளமை இரட்டிப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது.

பிராம்டனில் ளுயனெயடறழழன Pமறல ஃ னுiஒநை சுழயன சந்திப்புக்கு அருகாமையில் உள்ள டீசயஅpவழn ளுழஉஉநச ஊநவெசந இல் பிரமாண்டமான அரங்கில் ஈழம் சாவடி இம்முறை அமைக்கப்படுகிறது.

ஈழம் சாவடி அமைவதற்கு தமது கடும் எதிர்ப்பை சிறீலங்காவின் தூதுவராலயமும் உலகலாவிய சிங்கள கடும்போக்காளர்களும் அரச ஆதரவாளர்களும் வழமைபோல் இறுதிவரை வெளிப்படுத்தி வந்தனர்.

 

eelam-savady-2015-100715-seithy%20(3).jp

 

 

eelam-savady-2015-100715-seithy%20(4).jp

 

ஈழம் என்பது ஒரு கற்பனை-நாடு என்றும் உலக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மக்கள் தான் தமிழர்கள் என்றும் பிரிவினைவாதம் கோருவோர் என்றும் இப்படி ஈழம் சாவடியை அனுமதிப்பதாக இருந்தால் காஸ்மீர் போன்ற பிரதேசங்களும் அல்-கய்தா அமைப்புக்களும் நாளை தமக்கென்றும் தனியான சாவடி கேட்பார்கள் என்றும் மிக மோசமான பிரச்சாரத்தை சிறீலங்காவின் சிங்கள ஏகாதிபத்திய பிரச்சார சக்திகள் ஏகமாய்ப் பிரச்சாரம் செய்தன. இவர்களுடன் இணைந்து ஒரு சில இந்திய தமிழ் எதிர்ப்பாளர்களும் மிக மோசமான ஈமெயில் மற்றும் தொல்லைபேசிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் கனடிய அரச தரப்பினருக்கு ஈழம் சாவடியை அனுமதிக்காது ரத்து செய்யும்படி பெரும் அழுத்தங்களைக் கொடுத்தனர.

இத்தனை எதிர்ப்பையும் மீறி எத்தனை உச்சத்தில் பல அக்ரகாரங்களும் நாயர்களும் சப்பணிகளும் குரல்கொடுத்தாலும் அதையெல்லாம் உடைத்து ‘ஈழம் சாவடி’ மீண்டும் களம் காண்கிறது.

அனைத்துத் தமிழ் பேசும் நல்லுறவுகளும் தங்கள் பேராதரவை வழங்கி இந்த முன்மாதிகையான முன்னெடுப்பை மீண்டும் வெற்றிபெற வைக்க வேண்டுமென ஒழுங்கமைப்பாளர்களும் பிராம்டன் தமிழ் ஒன்றிய நிர்வாகமும் கேட்டு நிற்கிறது.

 

eelam-savady-2015-100715-seithy%20(5).jp

 

 

eelam-savady-2015-100715-seithy%20(6).jp

 

 

eelam-savady-2015-100715-seithy%20(7).jp

 

 

 

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=135634&category=TopNews&language=tamil

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.