Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

KG மாஸ்டர் இன் வாழ்க்கை கட்டுரைகள்

Featured Replies

அறிந்ததும் அறியவேண்டியதும்
------------------------------------------------

அறிந்திருத்தல் சம்பந்தமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, எதை அறிந்திருக்கின்றோம், எவ்வாறு அறிந்திருக்கின்றோம், எவ்வளவு  அறிந்திருக்கின்றோம் என்பவை தான்.  எதை அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் எமது நினைவுகளின் தொகுப்பில் இருந்துதான் அடையாளம் காண முடியும். நிகழ்வுகளின்  சேகரிப்புத்தான் நினைவுகள். இந்த நிகழ்வுகள் ஐம்புலன்களின் ஊடாக எமது ஆழ்  மனதில் பதியப்படுகின்றன. தொட்டுணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்பவற்றின் மூலம்  பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவுகளை நாம் அறிந்திருத்தல் என்கிறோம்.

 எந்தெந்த விடயங்களை நாம் அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் இலகுவாக அடையாளம் காண்பதற்கு, ஒன்றை நாம் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, நுகரும்போதோ, சுவைக்கும் போதோ அல்லது தொட்டு உணரும்போதோ உடனடியாக அதை அடையாளப்படுத்தவோ அல்லது  இனங்கண்டு கொள்ளவோ முடியுமாயின் அது ஒரு மீள் நிகழ்வாக இருப்பதனால் அந்த விடயம் ஏற்கனவே அறியப்பட்டாதாக அமைகின்றது. மாறாக,  நாம் எதிர்கொள்ளும் ஒன்றை அடையாளப்படுத்தவோ அல்லது  இனங்கண்டு கொள்ளவோ முடியாவிடின் அது இதுவரையில் அறியப்படவில்லை என்பதாகப் பொருள்படும்.

அடுத்து, எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதைப் பொறுத்தவரையில் நாம் எந்தவிதமான அளவீட்டையும் மேற்கொள்ள முடியாது.  ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு விடயம் மீண்டும் நிகழும்போது அதை இனங்கான முடியுமாயின்  அதை அறிந்திருக்கின்றோம்   என்பதால் நிகழ்வுகளால் மட்டுமே எமது அறிதலை அளவிடமுடியும்.  ஆனால் நிகழ்வுகளின் எண்ணிக்கை வரையறையற்று இருப்பதனால் நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை அளவிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

அறிந்திருத்தலில் உள்ள மிகப் பெரிய பின்னடைவு என்னவெனில்  நாம் அறிவு பூர்வமாக ஏற்றுக்கொண்டவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டவையாகவே அமைகின்றன. ஆனால் நம்பிக்கை அதன் தன்மையில்  பலவீனமானது ('நம்பிக்கையின் இரு பலவீனங்கள்' என்ற கட்டுரையை வாசிக்கவும்). நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் பிறரின் உள்ளீடுகளே.  இந்த உள்ளீடுகள் மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, சட்ட திட்டங்கள், சமுதாய ஒழுங்கு விதிகள் என்ற வடிவில் எமக்குள் செலுத்தப்படுகின்றன. இவ்வாறு உள்வாங்கப்பட்டவற்றை நாம் வேறுபாடுகளைக் கண்டறியும்    கருவியாக  பயன்படுத்திக் கொள்கிறோம்.  இதனால்  நாம் அறிந்திருப்பவை அனைத்தும் வேறுபாடுகளே.   எமக்கும் பிறருக்குமான  வேறுபாடுகளே.

நாம் அறிந்திருக்கும் இந்த வேறுபாடுகள் தான் எமக்குள் பிளவுகளையும், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.    இந்த வேறுபாடுகள் அனைத்தினதும் தயாரிப்பாளர்கள் நாம் தான். இந்த வேறுபாடுகள் குடும்பத்துக்குள், குடும்பங்களுக்கிடையில், சமூகத்துக்குள், சமூகங்களுக்கிடையில், நாட்டுக்குள், நாடுகளுக்கிடையில் வெறுப்பை உருவாக்கி  அதன் மூலம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கின்றோம்.  இந்த அழிவில் இருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு  அறிந்துகொள்ள வேண்டியது எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளைத் தான்.  அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முடியும். எனவே, இதுவரை நாம் அறிந்திருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒத்த இயல்புகளை அறிந்து கொள்வோம். 

நன்றியுடன் -  KG Master

உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது
---------------------------------------------------------

உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது?' என்றதும் முதலில் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில் ஏதோ ஒன்று இந்த இரண்டுக்கும் தடையாக இருக்கின்றது என்பது தான். அதாவது உறவுக்கு எது தடையாக இருக்கின்றதோ அதுவே உணர்வுக்கும் தடையாக இருக்கின்றது என்பதாகும். ‘உறவுக்குத் தடையானது எது?’ என்றதும் பல விடயங்கள் எமது மனக் கண் முன் குவிந்து விடுகின்றன.. உறவுக்குத் தடையானவையாக  போட்டி, பொறாமை, சந்தேகம், அகம்பாவம், துரோகம், தற்பெருமை, பொய் பேசுதல், சுயநலம்  போன்றவை உள்ளடங்கலாகப்  பல விடயங்கள் அமைகின்றன. 

உணர்வுகளைப் பொறு த்தவரையில் அவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு உணர்வும் தனித்தே இயங்கும் என்பதாகும்.  உறவு என்பது கூட்டு அல்லது இணைப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டது.  ஆனால் உணர்வுகளோ ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்குவதில்லை.  அவை தனித்தனியாகவே வெளிப்படும். அதாவது ஒரே நேரத்தில் ஒருவர் கவலை கொண்டவராகவும் மகிழ்ச்சியுடையவராகவும் இருக்க முடியாது.  அதே போன்றே ஒருவர் கோபமாக இருப்பார் அல்லது சாந்தமாக இருப்பார். அதுமட்டுமன்றி உணர்வுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உறவுக்குத்  தடையாக இருப்பதுமில்லை. உதாரணமாக, தனது பிள்ளை மீது ஒரு தாய்க்கு கோபம் ஏற்படும் போது அது உறவைப் பாதிப்பது மிகவும் அரிதானதாகவே நிகழ்கின்றது.  

இப்போது உறவுக்கும் உணர்வுக்கும் தடையானது எது என்பதைப் பார்ப்போம்.  கேள்வி அல்லது வினா (Question) என்பதே உறவுக்கும் உணர்வுக்கும் தடையானதாக அமைகின்றது. 'கேள்வியா?'  'கேள்வி இல்லாமல் எப்படி விடயங்களை அறிந்து கொள்வது?'. 'கேள்வி பிறந்ததால் தானே மனிதன்  இந்த அளவிற்கு அறிவாலும் ஆற்றலாலும் வளர்ந்திருக்கின்றான்?' என்றெல்லாம் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு காலத்தை வீணாக்காதீர்கள்.

மனைவியைப் பார்த்து 'நீ என் மனைவியா?' என்றால் பந்தம் போய்விடும். தாயைப் பார்த்து 'நீ என் தாயா? என்றால் பாசம் தொலைந்து விடும். நண்பனைப் பார்த்து 'நண்பனா நீ?' என்றால் நட்புப் போய்விடும்.     இவை எல்லாம் கேள்வியின் விளைவுகள் தான்.  அதே போன்று தான் வார்த்தைகளால் அன்றி உள்ளுணர்வால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்களில் கேள்விகளைத் தொடுப்பதன் மூலம் அதன் உண்மைத் தன்மையை நாம் உள்வாங்க முடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தையின் சிரிப்பை உள்ளுணர்வால் உள்வாங்குவதற்குப்  பதிலாக அது ஏன்  சிரிக்கின்றது என்று கேட்போமாயின் குழந்தையின் சிரிப்பின் உணர்வு ரீதியான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். 

இப்போது நாம் கேள்வி என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வோம்.

கேள்வி என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. எது எதுவோ அதை அதுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்மையினதும்  உள்ளதை உள்ளபடி உணர்ந்து கொள்ளவதில் (புரிதலில்) ஏற்படும் தடுமாற்றத்தினதும் வெளிப்பாடே கேள்வியாகும்.  ஏற்றுக்கொள்ளலும், புரிதலும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகள் குறையும்.  கேள்விகளைக் குறைக்கக் குறைக்க ஏற்றுக்கொள்ளலும் புரிதலும் வளரும். உறவுக்கும் உணர்வுக்குமான தடைகள் அற்றுப் போகும்.

நன்றியுடன்: KG Master

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.