Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விதுரன் வில் உடைத்தது சரியா? வீஷ்மர் போர் தொடுத்தது சரியா?

Featured Replies

விதுரன் வில் உடைத்தது சரியா? வீஷ்மர் போர் தொடுத்தது சரியா?
[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 12:36.12 PM GMT ] [ வலம்புரி ]
mahaparatham_001.jpg
பாரதப்போர் தொடங்குவதற்கு முன்னதாக அரச சபையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகின்றது. கெளரவர் தலைவன் துரியோதனனின் அட்டகாசத்தைத் தாங்க முடியவில்லை.

பாண்டவர்களை எதிர்ப்பதே தனது பணி என்று அவன் கருதியதால் வீஷ்மர், துரோணர், விதுரன் முதலான மூத்த தலைவர்களை அவன் கடிந்து கொண்டான்.

கெளரவர்-பாண்டவர் போர் நடப்பது உறுதி என்றாகி விட்ட நிலையில், துரியோதனனின் மன நிலையும் குழம்பியிருந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில் விதுரனைப் பார்த்து தகாத வார்த்தையால் துரியோதனன் திட்டுகிறான். இச்சந்தர்ப்பத்தில் விதுரன் தனது வில்லை எடுத்து சபையில் முறித்துவிட்டு இனி மேல் வில்லெடேன் என்று சத்தியம் செய்கிறான்.

வில்லுக்கு விதுரன் என்ற புகழை முடிவுறுத்தும் வகையில் தனது வில்லை விதுரன் உடைத்ததால் சபை அதிர்ந்தது. என்ன நடக்குமோ? எது நடக்குமோ? என்று பெரியவர்கள் ஏங்கினர். விதுரன் வில்லுடைத்ததால் கெளரவ சேனைக்குத் தோல்வி என்ற விமர்சனங்களும் எழுந்தன.

ஒரு நல்ல வீரனை துரியோதனன் இழந்தான் என்பதுடன், விதுரநீதி என்று போற்றும் அளவில் விதுரனின் செயல் இந்நாள்வரை உயர்வாகப் போற்றப்படவும் வாய்ப்பாகியது.

இது ஒருபுறம் இருக்க, பிதாமகர் என்ற வீஷ்மர் கெளரவ சேனைக்குத் தளபதியாக இருந்து பாண்டவர்களுடன் போர் தொடுத்தவர். அதே சமயம் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்று ஆசியும் வழங்கியவர். துரியோதனன் தரப்பில் தளபதியாக இருந்து கொண்டு, பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என வீஷ்மர் ஆசி வழங்கியது சரியா? என்ற கேள்வி எழுவதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது.

ஆக, மன்னர் சபையில் வில்லுடைத்த விதுரன் செய்தது சரியா? அல்லது கெளரவர் சேனையின் தலைமைத் தளபதியாக இருந்து கொண்டு பாண்டு புதல்வர்களே போரில் நீங்கள் வெல்லக்கடவீர்கள் என்று திருவாய் மலர்ந்து ஆசீர்வதித்த பிதாமகர் வீஷ்மர் செய்தது சரியா? என்பதே இப்போதைய கேள்வி.

இந்தக் கேள்வியை நாம் கூறும்போது, இது இப்போது எதற்கானது என்ற முணுமுணுப்பு உங்களிடம் எழுவதிலும் நியாயம் உண்டு. எல்லாம் பொதுத் தேர்தலை மையமாக வைத்துத்தான் இந்தக் கேள்வி என்பதை வெளிப்படையாகக் கூறித்தானாக வேண்டும்.

அட, இதைச் சொல்லும் போது தேர்தல் தெற்கையா, வடக்கையா குறிக்கும் என்றால் இரண்டும் என்று தான் சொல்ல வேண்டும். எதுவாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் விதுரர்களும் வீஷ்மர்களும் இருக்கவே செய்வார்கள்.

நாம் என்ன செய்வது? அடுத்துவரும் ஒரு வருடத்திற்கு துரியோதனனின் நிபந்தனையை நிறைவேற்றிய பாண்டவர்கள் போல நாமும் அஞ்ஞாத வாசம் சென்றால் என்ன? அது ஒன்றுதான் தலையிடியைத் தவிர்க்கும் போல் தெரிகிறது.

ஆம், நடைபெறப் போகும் பொதுத் தேர்தல் சாதாரணமானதல்ல. அதை எவரும் சாதாரணமாகவும் நினைத்துவிடக் கூடாது. பல கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களத்தில் இறங்கி கண்டபாட்டில் பிரசாரம் செய்யும். இந்தப் பிரசாரப் பீரங்கித் தாக்குதலில் தன்மானத்தைக் காக்கவைப்பதில் வேட்பாளர்கள் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும்.

http://www.tamilwin.com/show-RUmtyHSYSVnp2G.html#

  • கருத்துக்கள உறவுகள்

விதுரன் வில்லை உடைத்ததும் தவறில்லை. பீஸ்மர் போர் தொடுத்ததும் தவறில்லை. சகுனிகள் இருக்கும்வரை இப்படியான நிலைமை எங்கேயும் இருந்துகொண்டே இருக்கும்.இது தவிர்க்கப்பட வேண்டுமானால் மக்கள் சகுனிகளை இனங்கண்டு  அவர்களை களத்திலிருந்து அகற்றவேண்டும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

போரிடாமல் விடுவதை விடவும்...எதிரிக்குத் துணை போவதும்..எதிரியின் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதும் மிகப் பெரிய தவறு என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்!

இராமாயணத்தில் கும்பகர்ணனும்...சுக்கிரீவனும் இதே தவறைச் செய்திருக்கின்றார்கள்!

கருணாவும் இதே தவறையே செய்திருக்கிறார்!

அதனால் தான் கர்ணனின் பாத்திரம் .. அனைவரையும் கவர்ந்தது என நினைக்கிறேன்!

விதுரன் போரிடாமல் விட்டிருக்கலாம்!

ஆனால் 'சிவ தனுசு' என்ற வில்லை உடைத்துப் போட்டிருக்கக் கூடாது என்பதே சரியானதாகும்!

சகுனிகளை விடவும்... சகுனிகளின் சதிகளில் வீழ்ந்து விடுபவர்களைக் காலம் ஒரு நாளும் மன்னிக்காது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.