Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிமியர் கிரிக்கெட்: முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை

Featured Replies

பிரிமியர் கிரிக்கெட்: முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை

IPL, Cricket, Coucil Meeting, Chennai Super Kings, Rajasthan Royals

மும்பை:  பிரிமியர் கிரிக்கெட் தொடரின் அவசர கூட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. 

ஆறாவது (2013) பிரிமியர் தொடர் சூதாட்டம் காரணமாக சென்னை அணியை வைத்திருந்த பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவி பறிபோனது.  இதன் பின், உச்சநீதிமன்றம் அமைத்த லோதா குழு தீர்ப்பு காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உரிமையாளர்கள் குருநாத் (சென்னை), ராஜ் குந்த்ராவுக்கு (ராஜஸ்தான்) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டன. இதனிடையே பிரிமியர் தொடரின் நிர்வாக கவுன்சிலின் அவசர கூட்டம் ராஜிவ் சுக்லா தலைமையில் மும்பையில் நடக்கிறது. இதில் இரு அணிகளின் தடை குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இக்கூட்டத்தில் அணிகளை தடை செய்வது குறி்தது கருத்து வேறுபாடு நிலவியதாகவும், இது குறித்து முடிவு எடுக்க தனியாக ஒரு குழு நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து பிரிமியர் தொடர் சேர்மன் ராஜிவ் சுக்லா கூறுகையில்,‘‘ தடை செய்யப்பட்ட அணிகள் குறி்தது இன்றே முடிவுகள் எடுக்க முடியாது,’’ என்றார். 

http://sports.dinamalar.com/2015/07/1437234360/IPLCricketCoucilMeetingChennaiSuperKingsRajasthanRoyals.html

  • தொடங்கியவர்

ஆறு வாரம் அவகாசம்: தீர்ப்பை ஆய்வு செய்ய குழு

IPL, Cricket, Coucil Meeting, Chennai Super Kings, Rajasthan Royals

மும்பை: பிரிமியர் ஆட்சி மன்ற கூட்டத்தில் உருப்படியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சென்னை, ராஜஸ்தான் அணிக்கு தடை விதித்த லோதா கமிட்டியின் தீர்ப்பை ஆய்வு செய்ய சிறப்பு பணி குழுவை அமைக்க உள்ளனர். இக்குழு 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாம். மொத்தத்தில் பிரச்னையை இழுத்தடிப்பதற்கான முயற்சியை தான் பி.சி.சி.ஐ., மேற்கொண்டுள்ளது.            

இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008ல் சர்ச்சைக்குரிய பிரிமியர் ‘டுவென்டி–20’ தொடர் துவங்கப்பட்டது. ஆறாவது தொடரில்(2013)  ‘ஸ்பாட்–பிக்சிங்’ எனப்படும் சூதாட்ட புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதில், தொடர்புடையவர்களுக்கு தண்டனையை முடிவு செய்ய நீதிபதி லோதா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. உரிமையாளர்கள் குருநாத் (சென்னை), ராஜ் குந்த்ராவுக்கும் (ராஜஸ்தான்) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.            

டால்மியா இல்லை: இதையடுத்து இரு அணிகள் இல்லாமல் அடுத்த பிரிமியர் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்கி விட்டு, புதிய இரு அணிகளை பி.சி.சி.ஐ., சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து விவாதிக்க பிரிமியர் தொடரின் ஆட்சிமன்றக்குழுவின் அவசர கூட்டம், இதன் தலைவர் ராஜிவ் சுக்லா தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் பி.சி.சி.ஐ., தலைவர் டால்மியா உடல் நிலை சரியில்லாததால் பங்கேற்கவில்லை. பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர் கலந்து கொண்டார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் அஜய் ஷிரிகி, இந்திய அணி இயக்குனர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டம் வேடிக்கையாக இருந்தது. தவறு செய்த அணிகளை நீக்க முன்வரவில்லை. மாறாக, பிரச்னையை தாமதப்படுத்தும் முயற்சிகளில் தான் உறுப்பினர்கள் ஆர்வமாக இருந்தனர். இறுதியில் தீர்ப்பை ஆய்வு செய்ய சிறப்பு பணி குழுவை  அமைக்க முடிவு செய்தனர்.                  

தீர்ப்புக்கு மதிப்பு: இது குறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கை: லோதா குழுவின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். இத்தீர்ப்பை முழுவதுமாக அமல்படுத்துவோம். இருப்பினும், இதற்கான வழிமுறைகளை உருவாக்க ஒரு சிறப்புபணிக்குழு ஏற்படுத்தப்படவுள்ளது. இதை அமைக்கும் அதிகாரம் பிரிமியர் குழு தலைவர் ராஜிவ் சுக்லாவுக்கு அளிக்கப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள் தனது அறிக்கையை பி.சி.சி.ஐ., செயற்குழுவிடம் சமர்ப்பிக்கும். இதன் பின் அணிகளின் தடை குறித்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்.                   

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                                               

உறுப்பினர்கள் யார்: பிரிமியர் தொடர் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியது: என் மீதுள்ள நம்பிக்கையில் இப்பொறுப்பை தந்துள்ளனர். பங்குதாரர்கள், ‘ஸ்பான்சர்கள்’, மாநில சங்கங்கள், சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, இக்குழு அறிக்கையை தரும். பின் பி.சி.சி.ஐ., செயற்குழு இறுதி முடிவு எடுக்கும். இக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார் என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும். கடந்த பிரிமியர் தொடர்களை விட, அடுத்த தொடர் மிகச் சிறப்பான முறையில் நடக்கும்.                   

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

தயக்கம் ஏன்                         

பிரிமியர் தொடரின் விதி 11.3(சி) பிரிவின்படி,‘ எந்த ஒரு அணியோ அல்லது உரிமையாளரோ பிரிமியர் தொடரின் மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், அந்த அணியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தும் கூட, நேற்றைய கூட்டத்தில் இந்த அணிகளை நீக்க தயக்கம் காட்டியது புரியாத புதிராக இருந்தது. பி.சி.சி.ஐ., முன்னாள் பொருளாளர் அஜய் ஷிர்கே மட்டும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், இவருக்கு போதிய ஆதரவு காணப்படவில்லை.

ரவி சாஸ்திரி ‘ஐடியா’

நேற்றைய காரசார விவாதத்தில் ‘வீடியோ கான்பரசிங்’ மூலம் லண்டனில் இருந்து பேசிய ரவி சாஸ்திரி, இரண்டு அணிகளையும் பி.சி.சி.ஐ., ஏற்று நடத்த முடியமா அல்லது தோனி, டிராவிட் வழிநடத்த வாய்ப்பு உள்ளதா என கேட்டார். இதில், ஆதாயம் தரும் இரட்டை பணிகள் பிரச்னை வருகிறதா என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என பி.சி.சி.ஐ., சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

சென்னைக்கு ஆதரவு                         

பிரிமியர் தொடர் தலைமை அதிகாரி சுந்தர ராமனும் சூதாட்ட புகாரில் சிக்கினார். இவரின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு வருவதாக லோதா குழு தெரிவித்திருந்தது. இவர் பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சீனிவாசனுக்கு நெருக்கமானவர். இதனால் சென்னை அணி மீதும் பற்று அதிகம். நேற்று நடந்த ஆட்சிமன்றக்கூட்டத்தில் இவர் சென்னை அணிக்கு சாதகமாக கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.                        

நீக்கத்திற்கு எதிர்ப்பு                        

ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பல உறுப்பினர்களும் சென்னை, ராஜஸ்தான் அணியை தொடரிலிருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் உறுப்பினர்களிடயே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதுவும் கூட சிறப்புக்குழு அமைக்க காரணமாய் அமைந்துவிட்டது.                         

வந்தார் சீனிவாசன்            

ஐ.சி.சி., சேர்மன் மற்றும் பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சீனிவாசன் அமெரிக்காவிலிருந்து நேற்று சென்னை வந்தார். இவர் சென்னை அணியையும் கவனித்து வந்தார். சென்னை அணி தடை குறித்து இவரிடம் பி.சி.சி.ஐ., விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

http://sports.dinamalar.com/2015/07/1437234360/IPLCricketCoucilMeetingChennaiSuperKingsRajasthanRoyals.html

  • தொடங்கியவர்

பி.சி.சி.ஐ., ஆய்வு குழுவில் கங்குலி

IPL, Cricket, Coucil Meeting, Chennai Super Kings, Rajasthan Royals
மும்பை: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதித்த லோதா கமிட்டியின் தீர்ப்பை ஆய்வு செய்ய முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி, ராஜிவ் சுக்லா உள்ளிட்டோர் அடங்கிய 4 பேர் கொண்ட சிறப்பு பணி குழு நியமிக்கப்பட்டது.

 

இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008ல் சர்ச்சைக்குரிய பிரிமியர் ‘டுவென்டி–20’ தொடர் துவங்கப்பட்டது. ஆறாவது தொடரில்(2013) ‘ஸ்பாட்–பிக்சிங்’ எனப்படும் சூதாட்ட புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதில், தொடர்புடையவர்களுக்கு தண்டனையை முடிவு செய்ய நீதிபதி லோதா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. உரிமையாளர்கள் குருநாத் (சென்னை), ராஜ் குந்த்ராவுக்கும் (ராஜஸ்தான்) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து விவாதிக்க பிரிமியர் தொடரின் ஆட்சிமன்றக்குழுவின் அவசர கூட்டம், இதன் தலைவர் ராஜிவ் சுக்லா தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் லோதா கமிட்டியின் தீர்ப்பை ஆய்வு செய்ய சிறப்பு பணி குழு நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

புதிய குழு: இதனையடுத்து பிரிமியர் தொடரின் தலைவர் ராஜிவ் சுக்லா தலைமையிலான 4 பேர் கொண்ட சிறப்பு பணி குழுவை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்தது. இக்குழுவில் முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி, பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர், அனிருத் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளர். இக்குழு, லோதா கமிட்டியின் தீர்ப்பை ஆய்வு செய்து 6 வார காலத்துக்குள் அறிக்கையை சமர்பிக்கும். இதன் அடிப்படையில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

http://sports.dinamalar.com/2015/07/1437234360/IPLCricketCoucilMeetingChennaiSuperKingsRajasthanRoyals.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.