Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூதாட்டத்தால் ஆட்டம் கண்ட ஐ.பி.எல்.

Featured Replies

சூதாட்டத்தால் ஆட்டம் கண்ட ஐ.பி.எல்.
 

ழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இண்­டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மா­ன­போது இர­சி­கர்கள் மத்­தியில் அதற்கு இருந்த மவுசே வேறு.

 

1116350.jpgவிறு­வி­றுப்­பையும் பர­ப­ரப்­பையும் இர­சி­கர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்தி ஆட்டம் கொண்­டாட்­டங்­களில் மிதக்­க­வைத்த இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் வரு­டத்­திற்கு வருடம் வளர்ச்சி அடைந்து முழு உல­கையும் தன் பால் ஈர்த்து நின்­றது.

இதன் பல­னாக அவுஸ்­தி­ரே­லியா, தென் ஆபி­ரிக்கா, மேற்­கிந்­தியத் தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளிலும் பல்­வேறு பெயர்­களில் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மாகி பிர­பல்யம் அடைந்­துள்­ளன.

 

இந் நிலையில் எட்டு அத்­தி­யா­யங்­களை வெற்­றி­வா­கை­யுடன் கண்டு புக­ழே­ணியின் உச்­சிக்கே சென்ற இண்­டியன் ப்றீமியர் லீக் இன்று சூதாட்டம், ஆட்ட நிர்­ணயம், உடன் ஆட்ட நிர்­ணயம் என்­ப­வற்றால் ஆட்டம் கண்டு அடுத்த அத்­தி­யாயம் நடை­பெ­றுமா? என்ற கேள்விக் குறி­யையும் எழ வைத்­து­விட்­டது.

 

முதல் இரண்டு இண்­டியன் ப்றீமியர் லீக் அத்­தி­யா­யங்கள் மிகவும் வெற்­றி­க­ர­மாக நடை­பெற்­ற­துடன் அப் போட்­டிகள் குறித்து யாருக்கும் சந்­தேகம் எழும் அள­வுக்கு எதுவும் நடந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

 

ஆனால் இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களின் ஆரம்­ப­கர்த்­தா­வான லலித் மோடி, ஊழல் கார­ண­மாக ஒரம்கட்­டப்­பட்­டதை அடுத்து இப் போட்­டி­களின் நேர்­மைத்­துவம் குறித்து சிறுக சிறுக சந்­தேகங்கள் எழத் தொடங்­கின.

 

ஆனால், எவ்­வித தவறும் இடம்­பெற்­ற­தற்­கான ஆதா­ரங்கள் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை.

 

இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் 2013 இல் ஆறா­வது அத்­தி­யா­யத்தில் காலடி எடுத்­து­வைத்­த­போ­துதான் சந்­தே­கங்கள் வலுக்கத் தொடங்­கின. அவ் வருடப் போட்­டியில் இடம்­பெற்ற சூதாட்டம், ஆட்ட நிர்­ணயம் மற் றும் உடன் ஆட்ட நிர்­ணயம் போன்­ற­வற்றால் இண்­டியன் ப்றீமியர் லீக்கில் நில­வி­வந்த நேர்­மைத்­துவம் கேள்­விக்­கு­றி­யா­னது. 

 

அத்­துடன் இண்­டியன் ப்றீமியர் லீக் அத்­தி­யா­யங்கள் அனைத்­திலும் இறுதிச் சுற்­று­வரை முன்­னே­றி­யதன் மூலம் அதி சிறந்த அணி­யாக புக­ழப்­பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரி­மை­யாளர் என். ஸ்ரீனி­வா­ச­னுக்கு பெரும் சோதனை ஏற்­பட்­டது.

 

11163hhhhhhhhh.jpgஅவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்­பித்­தன. ஆனால் அவர் எதற்கும் மசி­ய­வில்லை.

 

அதே­வேளை இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபைத் தலை­வ­ராக இருந்த அவ­ருக்கு எதி­ராக சபைக் கூட்­ டங்­க­ளின்­போது பேசு­வ­தற்கு எவ­ரி­டமும் துணி­வி­ருக்­க­வில்லை.

 

எனினும் பீஹார் கிரிக்கெட் சங்­கத்தின் தொடர்ச்­சி­யான போராட்டம் கார­ண­மாக இண்­டியன் ப்றீமியர் லீக் சூதாட்ட வழக்கு மும்பை உயர் நீதி­மன்றம் வரை சென்­றது.

 

அங்கு நடை­பெற்ற நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளின்­போது ஸ்ரீனி­வாசன் ஒன்றில் சென்னை சுப்பர் கிங்­ஸுக்கு உரி­மை­யா­ள­ராக இருக்க வேண்டும் அல்­லது இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட் டுச் சபையின் தலை­வ­ராக இருக்­க­வேண்டும் என நிபந்­தனை விதிக்­கப்­பட்­டது.

 

அதா­வது இரண்டு பத­வி­களை ஒரே நேரத்தில் வகிக்க முடி­யாது என ஸ்ரீனி­வா­ச­னுக்கு நீதி­மன்றம் கடு­மை­யான உத்­த­ரவைப் பிறப்­பித்­தது.

 

சுப்பர் கிங்ஸை பாது­காப்­ப­தற்­காக உய­ரிய பத­வி­யான இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் தலைவர் பத­வியை அவர் துறந்தார்.

 

ஆனால் சென்னை சுப்பர் கிங்­ஸுக்கு இரண்டு வருடத் தடை விதிக்­கப்­பட்­டதால் அவர் பாரிய பின்­ன­டைவை எதிர்­கொண்­டுள்ளார்.

 

ஸ்ரீனி­வா­சனின் மரு­ம­கனும் சுப்பர் கிங்ஸ் அணியின் அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரு­மான குருநாத் மெய்­யப்பன், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் உரி­மை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான ராஜ் குந்த்ரா ஆகிய இரு­வ­ருக்கும் கிரிக் கெட் விளை­யாட்­டுத்­து­றையில் ஈடு­பட முடி­யா­த­வாறு உயர்­நீ­தி­மன்றம் ஆயுட்­காலத் தடை விதித்­துள்­ளது.

 

 

அத்­துடன் சென்னை சுப்பர் கிங்­ஸுடன் சூதாட்டம் மற்றம் ஆட்ட நிர்­ணய சதி­களில் ஈடுபட்டமைக்­காக ராஜஸ்தான் றோயல்­ஸுக்கும் அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளான இந்­தியா சிமென்ட், ஜெய்பூர் ஐ.பி.எல். நிறு­வ­னத்­திற்கும் இரண்டு வருடத் தடையை நீதி­மன்றம் பிறப்­பித்­தது.

 

நீதி­மன்ற விசா­ர­ணைகள்

 

இண்­டியன் ப்றீமியர் லீக்கில் இடம்பெற்ற முறை­கே­டுகள் தொடர்­பாக சுதந்­தி­ர­மான விசா­ர­ணை­களை நடத்­தும்­பொ­ருட்டு 2013 அக்­டோபர் 8ஆம் திகதி ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் முத்கல் தலை­மை­யி­லான மூவர் கொண்ட குழுவை உயர்­நீதி­மன்றம் நிய­மித்­தது.

 

முத்கல் குழு தயா­ரித்து வழங்­கிய முத­லா­வது அறிக்­கை யில், குருநாத் மெய்­யப்பன் சூதாட்­டத்தில் ஈடு­பட்­ட­தற்­கான ஆதாரம் இருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் சில வீரர்கள் மீதும் குற்­றஞ்­சாட்­ட­போ­திலும் அவர்­க­ளது பெயர்கள் இன்­று­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

 

1116349.jpgggg.jpg

முத்கல் குழு சமர்ப்­பித்த அறிக்­கையில் ஸ்ரீனி­வாசன், இண்­டியன் ப்றீமியர் லீக் தலைமை அதி­காரி சுந்தர் ராமன், குருநாத் மெய்­யப்பன், ராஜ் குந்த்ரா ஆகி­யோரின் பெயர்கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக அறி­வித்த உயர்­நீ­தி­மன்றம் இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிளில் பல்­வேறு குள­று­ப­டிகள் இடம்­பெற்­ற­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

 

 

இதனை அடுத்து இண்­டியன் ப்றீமியர் லீக் சூதாட்ட வழக்கில் குற்­ற­வா­ளிகள் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்ட குருநாத் மெய்­யப்பன், ராஜ் குந்த்ரா ஆகி­யோ­ருக்கும் அவர்கள் சார்ந்த அணி­க­ளான சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி­க­ளுக்கும் என்­ன­வ­கை­யான தண்­ட­னை­களை விதிப்­பது என்­பது குறித்த தீர்­மா­னிக்கும் பொருட்டு ஓய்­வு­பெற்ற பிர­தம நீதி­ய­ரசர் லோதா தலை­மையில் நிதி விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டது.

 

இந்தக் குழுவினரே தனது விசா­ரணை முடிவில் மேற்கண்ட தீர்ப்புகளை வழங்கினர். 

 

இந்தத் தீர்ப்புகளினால் ஆட்டம் கண்டுள்ள இண்டியன் ப்றீமியர் லீக் போட்டிகளுக்கு எவ்வாறு மீளுயிர் கொடுப் பது என்பது குறித்து இண்டியன் ப்றீமியர் லீக் ஆளுநர் சபை விரைவில் கூடி ஆராயவுள்ளது.

 

அதிகமான இந்திய மாநிலங்களில்  ரசிகர்களைக் கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ்

 

இண்­டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்) அணி­க­ளான சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகியவற் றுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை கோடிக்­க­ணக்­கான ரசி­கர்­க­ளுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

 


11163_metro-sports-65.jpgதடை விதிக்­கப்­பட்ட அணி­களில் ஒன்­றான சென்னை சுப் பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல். அணி­களில் மிக அதிக ரசி­கர்­களை உள்­ளூ­ரிலும் வெளி­நா­டு­க­ளிலும் கொண்ட அணி­களில் ஒன்­றாக கரு­தப்­ப­டு­கி­றது.

 


மஹேந்­தி­ரசிங் தோனி தலை­மை­யி­லான அவ்­வணி முன்னாள் ஐ.பி.எல். சம்­பியன் என்­ப­துடன் சம்­பியன்ஸ் லீக் போட்­டி­களின் நடப்புச் சம்­பி­ய­னா­கவும் விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.


இதே­வேளை சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் மிக அதிக ரசி­கர்­களைக் கொண்ட அணி­களில் ஒன்றாக சென்னை சுப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) விளங்­கு­கி­றது.


பேஸ்புக் பயன்­ப­டுத்­தாத ரசி­கர்­களும் கோடிக்­க­ணக்கில் உள்­ளனர் என்­பது உண்­மைதான். எனினும், ஐ.பி.எல். போட்­டிகள் விறுவிறுப்­பாக நடை­பெற்ற கடந்த மே மாதத்தில் வெளி­யி­டப்­பட்ட பேஸ் புக் தரவு வரை­ப­ட­மொன்­றின்­படி, இந்­தி­யாவில் பேஸ்புக் அங்­கத்­த­வர்­களில் அதிக மாநி­லங்­களில் ரசி­கர்­களைக் கொண்ட அணி­யாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி உள்­ளமை தெரி­ய­வந்­தது.


பேஸ்புக் தரவு விஞ்­ஞான அணி­யினால் (டேட்டா சயன்ஸ் டீம்) இந்த வரை­படம் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்து.  பொது­வாக பல மாநி­லங்­க­ளிலும் உள்ளூர் அணி­க­ளுக்கு அதிக ஆத­ரவு உள்­ளது.

 

ஆனால் ஐ.பி.எல். அணி இல்­லாத மாநி­லங்­களில் உள்­ள­வர்­களில் அதி­க­மானோர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கே ஆத­ர­வ­ளிக்­கின்­றனர் என மேற்­படி வரை­ப­டத்தின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. டில்­லி­யிலும்  டெல்ஹி டெயார்­டெ­வில்­ஸை­விட சென்னை சுப்பர் கிங்­ஸுக்கு ஆத­ரவு அதிகம் என்­பது வியப்­புக்­கு­ரி­யது.

 

11163_metro-sports-5.jpg


இதே­வேளை நேற்று (16-07-2015 வியா­ழக்­கி­ழ­மை) ­வரை கொல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்­தி­யோ­கபூர்வ பேஸ்புக் ­பக்கத்தை 12,565,890 பேர் லைக் செய்­தி­ருந்­தனர்.  சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பேஸ்புக் பக்­கத்தை 11,671,500 பேருக்கு அதி­க­மானோர் லைக் செய்திருந்தனர்.


பேஸ்புக்கில் ஒரு கோடிக்கும் அதிகமானோரின் லைக் பெற்ற இரு ஐ.பி.எல். அணிகள் இவையாகும். இப்பட்டியலில் 3 ஆம் மும்பை இண்டியன்ஸ் அணியை 9,387,300பேர் லைக் செய்திருந்தனர்.

11163_metro-sports1.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11163#sthash.6zjV4D5y.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.