Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கடற்கரை கிராமம்!

Featured Replies

களமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கடற்கரை கிராமம்!

பொதுவாக கால்பந்து வீரர்களை இந்தியாவுக்கு அள்ளித்தருவதுதான் கேரளத்தின் வழக்கம்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஐ.எம்.விஜயன், சத்யன் போன்றவர்கள் கேரளத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கால்பந்து களத்தை ஆண்டவர்கள், ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்தவர்கள். தற்போது கேரளா, கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்து போல கிரிக்கெட் வீரர்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

sanju.jpg

100 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கடந்த 1990களில்தான் முதன் முதலாக கேரளத்தை சேர்ந்த  கிரிக்கெட் வீரர் இடம் பிடித்தார். வேகப்பந்துவீச்சாளரான அபே குருவில்லாதான் அவர். பின்னர் டினு யோகனன், சோபிக்கவில்லை. ஸ்ரீசாந்த் அறிமுகமாகி வளர்ந்து வரும் கட்டத்தில் சூதாட்டத்தில் சிக்கி சின்னாபின்னமானார். அதற்கு பின் கேரள வீரர்கள் யாருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த, அம்பத்தி ராயுடு காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இதையடுத்து கேரளத்தை சேர்ந்த சஞ்சு சாம்சன் என்ற இளம் கிரிக்கெட் வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

sam.jpg

இதன் காரணமாக இந்திய அணிக்காக விளையாடும் 4வது கேரள வீரர் என்ற பெருமையையும் 20 வயது சஞ்சு சாம்சன் பெற்றார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக கலக்கினார்.

சஞ்சு சாம்சன், திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞம் அருகே, அரபிக் கடல் ஓரத்தில் அழகிய  பலித்துறா என்ற கிராமத்தை சேர்ந்தவர். சொற்ப அளவே மக்கள் தொகை கொண்ட இந்த கிராம மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள்.

san.jpg

இந்திய அணிக்காக நேற்று ஹராரேவில் நடந்த டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் முதல் முறையாக களமிறங்கியதையடுத்து, அவருக்கு தமிழக வீரர் முரளிவிஜய் இந்திய அணியின்  தொப்பியை வழங்கி வரவேற்பளித்தார். இதனை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பலித்துறா கிராம மக்கள், உற்சாகத்தில் திளைத்தனர்.

நேற்று கொல்லத்தில் நடந்த கேரள கிரிக்கெட் சங்க விழாவில் பங்கேற்க சஞ்சு சாம்சனின் பெற்றோர் சென்றிருந்ததால், அவரது வீடு பூட்டிக் கிடந்தது. எனினும் அவரது வீட்டு முன்னர் திரண்ட கிராம மக்கள் இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில்,'' சஞ்சு மிகவும் அமைதியான பையன். அவன் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  அவன் மென்மேலும்  வளர பிரார்த்திப்போம் '' என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=49743

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.