Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது பிசிசிஐ- கொல்கத்தாவில் பைனல்!

Featured Replies

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது பிசிசிஐ- கொல்கத்தாவில் பைனல்!
 
மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
 
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.  இது தொடர்பாக இன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர், டெல்லியில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஏப்ரல் 3-ந் தேதியன்று இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான நிர்வாக குழு ஒன்றையும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அக்குழுவில், அனுராக் தாகூர், அமிதாப் சவுத்ரி, அனிருத் சவுத்ரி, கங்கா ராஜூ, ராஜீவ் சுக்லா, ஆஷிஸ் சேலர், ஆஷிபாத் பெஹ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-world-t20-2016-india-venues-announced-kolkata-host-final-231546.html
  • தொடங்கியவர்

சேப்பாக்கம் பக்கம் உலக கோப்பை! * ‘கேலரி’ பிரச்னை தீருமா

Chennai to get a 2016  World Cup game

கோல்கட்டா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின்(2016) சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு பக்கத்தில் வந்த போதும், ‘கேலரி’ பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே போட்டிகள் திட்டமிட்டபடி இங்கு நடக்கும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2007ல் நடந்த முதல் தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. ஆறாவது தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் நடக்கவுள்ளது. இதற்கான இடங்களை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ) நேற்று வெளியிட்டது. 

கோல்கட்டாவில் பைனல்:

இதன்படி கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, தரம்சாலா,மொகாலி, மும்பை, நாக்பூர், புதுடில்லி ஆகிய 8 இடங்களில் நடக்கவுள்ளது. கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பைனல் அரங்கேறுகிறது. கடந்த 2011 உலக கோப்பை தொடரில் (50 ஓவர்), இம்மைதானத்தில் இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால், புதுப்பிக்கும் பணிகள் முழுமை அடையாததால், பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே, இங்கு உலக கோப்பை தொடரின் இரண்டு முக்கிய போட்டிகள் (1987, பைனல்), 1996 (அரையிறுதி) நடந்தன. 

சிக்கலில் சென்னை: 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 3 புதிய ‘கேலரிகள்’ (ஐ,ஜே,கே) பாதுகாப்பாக இல்லை எனக்கூறி சென்னை மாநகராட்சி அனுமதி மறுத்தது. இதை இடிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்த ‘கேலரிகளை’ காலியாக வைத்து போட்டியை நடத்த ஐ.சி.சி., விரும்பவில்லை. இப்பிரச்னை காரணமாக இங்கு உலக கோப்பை தொடரின் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஒருவழியாக தற்போது அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் ‘கேலரி’ பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கு பி.சி.சி.ஐ.,  அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனை நிறைவேற்ற தவறினால், போட்டியை நடத்தும் உரிமையை சென்னை இழக்க நேரிடும். 

பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர் கூறியது:

உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரை முதல் முறையாக நடத்துவது பெருமை. உலக கோப்பை தொடரின் ஒரு அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும். அதே போல மற்றொரு அரையிறுதி டில்லி பெரோஷா  கோட்லா மைதானத்தில் நடக்கலாம்.

தற்போது மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிகளும் துவங்கிவிட்டன. இத்தொடர் ரசிகர்கர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும். தவிர, இதற்காக நிர்வாக கமிட்டி பி.சி.சி.ஐ., தலைவர் டால்மியா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்

 

http://sports.dinamalar.com/2015/07/1437499999/Chennaitogeta2016WorldCupgame.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.